முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோசியம்

அவனும் அவளும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார்கள். அவர்களே நினைத்துப் பார்க்கவில்லை, பெற்றோரிடம் சொன்னதும் உடனடியாக சம்மதம் கிடைக்கும் என்று.

ஆனால், தங்களைத் தாங்களே கிள்ளிக் கொண்டு, நம்பினார்கள். ஆனந்தமாக உணர்ந்தார்கள். தாங்கள் திருமணத்தில் என்னென்ன பதார்த்தங்கள் பரிமாறுவது, என்ன உடை அணிவது, உடையின் நிறம், இப்படி எல்லாவற்றையும் கலந்து பேசத் தொடங்கி இருந்தார்கள்.

அவர்களது வீட்டிலும், இரு குடும்பத்தாரும் கலந்து பேசி, ஜோதிடம் பார்க்க முடிவு செய்தார்கள். 

"பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தம் அம்சமா இருக்கு. ஜாதகம் நல்லாப் பொருந்துது, ஆனா ஒரே ஒரு சிக்கல்", என்று இழுத்தார் அந்தப் பெரிய பட்டை அடித்திருந்த ஜோசியர்.

"என்ன சாமி? என்ன?", பதறி விட்டிருந்தனர் ஜோசியம் கேக்கச் சென்றிருந்த அந்தப் பையனின் பெற்றோர்.

"உங்க பையனுக்கு இப்போ நேரம் சரி இல்லம்மா, கல்யாணம்னு பேச்சு இப்போ எடுத்தாலே தடங்கல் வரும், அவருக்கு விபத்து ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கு. அப்புறம் அந்தப் பொண்ணுக்கு தோஷம் இருக்கு, ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சா, மாப்ள உயிருக்கு ஆபத்து. மாப்ளைக்கு ஆயிசு கம்மின்னு சொல்லுதுமா ஜாதகம்.", குண்டு போட்டார் ஜோசியர்.

இந்த அதிர்ச்சியைக் கேட்ட பையனின் பெற்றோர், திருமணத்தை, நிறுத்தினார்கள்.

அவர்களுக்குத் திருமணம் நடக்கவில்லை, ஆனால், சொர்கத்தில் வாழ்கிறார்கள், கணவன் மனைவியாக.

நடப்பது தான் நடக்கும்!

உங்களது கருத்துக்கு மாறாக இந்தக் கதைக் கரு இருந்தால், மன்னிக்கவும். யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.

கருத்துகள்

  1. பெயரில்லா7/04/2012 12:04 AM

    ஜோசியர் வில்லனாக மாறியது வருத்தமாகப் போய்விட்டது கண்மணி. நல்ல கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மா. அதாவது நடப்பது நடக்கத்தான் செய்யும், ஒருவன் இறந்து போவான் என்று இருப்பின், அது நடந்தே தீரும், அதற்க்கு காரணமாக, ஜோதிடம் கூட இருக்கலாம் என்கிற சாயலில் எழுதினேன்.

      நீக்கு
  2. ஜோதிடத்தை மட்டுமே நம்பி வாழ்வோர் பார்க்க வேண்டிய பதிவு சகோதரி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    பதிலளிநீக்கு
  3. கண்மணி, சில சமயங்களில் ஜோதிடம் ஏன் மனிதர்களிடம் இப்படி
    இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறதோ ? தலைஎழுத்தை மாற்ற வழியே இல்லையோ ?
    விதியை வென்றோர் இவ்வுலகில் இல்லவே இல்லையோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். நடக்க இருப்பதை கணிக்க முயற்சிக்காமல், நல்லதைச் செய்து வாழ்ந்து வந்தால், என்றும் நல்லதே நடக்கும். விதி முடிவது, என்றேனும் முடியத்தானே போகிறது? அதை நினைத்து வருந்துவானேன்?

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்