முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா#9 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்:

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7 | 8

சொல்லுமா.. ரெண்டு பேருல யாரப் புடிச்சிருக்கு?

எனக்கு எல்லாரும் கேக்கக் கேக்க, என்ன சொல்லனே தெரியல.. என்னால எதுவும் முடிவு பண்ண முடியல. ரெண்டு பேர் மேலயும் எந்த அபிப்ராயமும் இல்ல எனக்கு...

இல்ல.. எனக்கு பிடிக்கல.. அழுக ஆரம்பிச்சு இருந்தேன் நான்.

எல்லாரும் என்ன சொல்றதுன்னு தெரியாம, "சரிப்பா.., அந்தப் புள்ளையையும் இப்படிப் படுத்துனா பாவம், என்ன சொல்லும்.. கொஞ்ச நாள் போகட்டும், முடிவு செஞ்சுக்கலாம்..", கொஞ்ச நாளைக்கு அந்தப் பேச்ச ஒத்தி வச்சாங்க..

எனக்கு அன்னைல இருந்து, ரெண்டு பேர் தொல்ல. ரெண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிச்சேன்.

ஒரு நாள் ரெண்டு பேரும் சண்ட போடா ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு அப்போ ரெண்டு பேர் மேலயும் வெறுப்பா இருந்தது. கோவமா வந்தது.. "இங்க பாருங்க, எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் வெறுப்பா இருக்குன்னு" கத்தணும் போல இருந்தது. கோவமா வந்தது.

ஒரு நிமிசம் கூட தனியா விடாம, என்ன தொல்ல செஞ்சுகிட்டே இருந்தா அப்படி தான இருக்கும்? கோவமா வந்தது. ஆனா என்கூட இருந்த பிள்ளைங்க, என்ன ஆளுக்கு ஒன்ன சொல்லி, ஏத்தி விட்டாங்க. "ஏய் ஓவம்மா.., அவனுங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு பந்தயம் வை, யாரு பந்தயத்துல முன்ன வரான்களோ அவங்கள கட்டிக்கோ..! என்ன புள்ள? "

எனக்கும் அப்டி செய்யலாமானு கூட தோனுச்சு.. ஆனாலும், ஒரு பக்கம், மனசு கேக்கல..

எங்க ஊர்ல பொங்கல் வந்தது. அப்பாடியோ.. என்னால தாங்க முடியல.. அந்த அளவுக்கு ரெண்டு பேரும் என்ன கவனிச்சாங்க. "பூ வாங்கித் தரதும், புதுத் துணி, பலகாரம், வளையலு.." இப்படி என்ன வாங்கித் தந்து படுத்திட்டாங்க.

அவ்வளவு சந்தோசமா இருந்தோம்.. எங்க அத்த, மாமா, நானு.. இவனுங்களும் ஒன்னொன்ன வாங்கிக் கொண்டு வந்து குடுத்துட்டு இருந்தானுங்க.

எங்க வீட்ல இப்டி ரெண்டு பெரும் செய்றது புடிக்கல, சொல்லிப் பாத்தாங்க.. கேக்கல.. அப்புறம் விட்டுட்டாங்க.

ஆனா.. அன்னிக்கு அப்டி ஒரு காரியம் நடக்கும்னு நான் நெனைக்கவே இல்ல..
முழு நெலவா ஆரம்பிச்சது அந்த நாளோட சந்தோசம், ஆனா அப்படி இருட்டுல முடியும்னு நான் நெனைக்கல...

என் வாழ்க்கைல அப்படி ஒரு நாள், அவ்வளவு சோகமான நாள் கெடையாது அதுக்கு முன்னாடியும் சரி, அதுக்கு அடுத்தும் சரி.

கடவுளே, ஏன் இப்படி செஞ்சனு நான் பொலம்பாத நாள் கெடையாது இன்னைக்கு வரைக்கும்.

------------------------------------------------------

ஓவம்மா கதை தொடரும் அடுத்த பகுதியில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்