முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழில் தர்மம்!


உங்களுக்குத் தெரியுமா "தொழில் தர்மம்" ???? தெரிந்திருக்க வேண்டும் கண்டிப்பாக.  நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருப்பினும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தொழில் தர்மம்.

சரி, இந்தத் தொழில் தர்மம் என்றால் என்ன? ஏதோ, எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் கேளுங்கள் :)
  • நாம்  வேலை செய்யும் இடத்தில் மற்றவருடன் அன்பாக நடந்து கொள்ளுதல் 
  • நமது  வேலையில் நேரம் தவறாமை
  • நாம்  செய்யும் வேலையில் ஈடுபாடோடு இருத்தல்
  • ஒரு நிறுவனம் வைத்து நடத்துகிறோம் என்றால், "போலியாக" விளம்பரம் செய்யாது இருத்தல்.
  • உண்மை, நேர்மை, ஒழுக்கம் இது போன்று அனைத்தையும் கடைபிடித்தல்.
இப்படி பெரிய பட்டியல் சொல்லிக் கொண்டே போகலாம்... இதெல்லாம் அடிப்படையாக ஒரு நல்லவரிடம் இருக்க வேண்டிய குணங்கள் தானே? உங்களிடம் இவை அனைத்தும் இருக்கும் என்று நம்புகிறேன்.

சரி, நான் இன்னும் விசயத்துக்கே வரவில்லை. நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி, எனக்கு,"ப்ரோபஸ்னல் எதிக்ஸ் அண்ட் ஹ்யூமன் வேல்யூஸ்" ("Professional Ethics & Human Values") என்று ஒரு பாடம் உள்ளது. அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? 

சொல்லுகிறேன் அந்த சோகக் கதையை. இந்தப் பாடத்தில், "எப்படித் தொழில் செய்யும் இடத்தில் (அல்லது அலுவலகத்தில்) மற்றவரிடம் அன்பாக, நேர்மையாக, ஈடுபாடோடு .. (இப்படி நிறைய சொல்லலாம்) நடந்து கொள்ள வேண்டும்", என்று "சொல்லித்" தருகிறார்கள்!

அட, இதிலென்ன சோகம்? நல்லது தானே சொல்லித் தருகிறார்கள் என்று சொல்கிறீர்களா? 
நல்லது தான்... ஆனால், இதனால், இப்படிக் கற்பிப்பதால் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. இதையும் நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்று "மனப்பாடம்" செய்யச் சொல்கிறார்கள்! :( :( :(  

நல்லன சிலவும் சொல்லத் தான் செய்கிறார்கள், ஆனால், இது கற்பிக்கக் கூடிய ஒரு விசயமா?

கல்லூரி சென்ற பின்பு தெரிந்து கொள்ள வேண்டியவையா இவையெல்லாம்??? சிறு வயது முதலே நம்மோடு சேர்ந்து இவை வளர வேண்டும் அல்லவா? கல்லூரி வந்த பின்பு இதை சொல்லிக் கொடுத்து யாரும் மாற்றம் அடைவது போல எனக்குத் தெரியவில்லை.

மாறாக, "அன்பு என்றால் என்ன?" "தர்மம் என்றால் என்ன?" போன்ற  கேள்விகளுக்கு பதிலை அனைவரும் "மனப்பாடம்" செய்வதைப் பார்க்கையில், உண்மையில் வலிக்குது மனசு :( :'( 

இந்தப் பாடம் முன்பெல்லாம் கல்லூரியில் கற்பிக்கப்படவில்லையாம். இப்பொழுதெல்லாம் "அன்பு, பண்பு, நேர்மை, ஈடுபாடு, மக்களை பாதிக்காமல் வேலை செய்வது (எந்தத் தொழிலாக இருப்பினும், மக்கள் சார்ந்தே இருக்கும், நமது தொழிலால் மக்களுக்கு நல்லது நடக்காவிடினும் தீமை செய்யக் கூடாது அல்லவா?) போன்றவை குறைந்து வருகின்றனவாம். தொழில் செய்வோர் சுயநலத்தோடு செயல்பட ஆரம்பித்துவிட்டார்களாம். அதனால் தான் இந்தப் பாடத்தை இணைத்துள்ளார்களாம்!!!

ஆயினும், இது பயனளிக்கவில்லை என்று தான் நான் சொல்வேன் :( 
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே இதை சொல்லிக் கொடுங்கள். அது தான் சரியான முறையாக இருக்க முடியும்.

ஒரு ஏழு எட்டாவது படிக்கும் பொழுதே, தொழில் தர்மம் சொல்லிக் கொடுங்கள். கல்லூரியில் தொழில்நுட்பம் மட்டும் பயிலட்டும் அவர்களாவது!
கல்லூரிக்குச் சென்ற பிறகு "தர்மம் என்றால் என்ன?" என்று மனப்பாடம் செய்யும் நிலை மாறட்டும்! :( :(

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தர்மம் மறுபடி வெல்லும்????!"

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இதற்கு?

---------

கண்மணி அன்போடு!

கருத்துகள்

  1. :) உண்மை தான் !நம் கல்வி முறையில் நாம் பல வருடங்களை தேவையற்ற விசயங்களை கற்று (மனப்பாடம்) செய்து வீண் செய்துள்ளோம் (பின் மறந்து விட்டோம்)ஏட்டுச்சுரைக்காயாக மதிப்பெண் பெற மட்டும் தான் படிப்பு என்ற நிலை மாற வேண்டும்.
    "கற்க கசடற" என்று வள்ளுவன் சொல்லியிருக்கிறான்.."கற்பிக்க கசடற" என்று கற்பிப்பவர்களுக்கு சொல்வோம்!
    //தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
    தர்மம் மறுபடி வெல்லும்????!//

    நிச்சயம் வெல்லும் என்று நம்புவோம்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்