என்னது? சக்தி தரும் உடைகளா? ஆமா, சக்தி தரும் உடைகள்! உடனே இந்த உடைகளை அணிந்து கொண்டாள், "சூப்பர் மேன்", "ஸ்பைடர் மேன் ", போல சக்தி கிடைக்குமான்னு கேக்காதிங்க!
இது "வேற" மாதிரியான சக்தி :) :) அதென்ன வேற மாதிரி? சொல்றேன் கேளுங்க :)
இப்போ நாம எல்லாரும் எந்த மாதிரி உடை அணிய விரும்பறோம்? அட, கண்டிப்பா அழகா தான்! இதிலென்ன சந்தேகம்?
சரி, இப்பொழுது நாம் உடை சார்ந்து சில விசயங்களை இங்கே பேசப் போகிறோம், பேசலாம்.
தொழில் சார்ந்த ஒரு சந்திப்பிர்க்குச் செல்லும் பொழுது எப்படிச் செல்வீர்கள் ? நல்ல "கோட் - சூட்" போட்டு?
( இது நம் கலாச்சாரம் இல்லை தான், ஆனாலும் இன்று பெரும்பாலானோர் இதை தான் பின்பற்றுகிறார்கள்)
அப்படித் தான் செல்வோம். ஆனால் அதே உடையை நாம் வெளியே குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்லும் போது அணிந்து செல்வதில்லை. சரிதானே? சரி அதென்ன சக்தி தரும் உடை? என்று தானே கேட்கிறீர்கள். இதோ சொல்கிறேன்.
இது ஒன்றும் விசேசமான உடை அல்ல! நாம் தினமும் அணியும் உடை தான். அதை எப்படி அணிகிறோம் என்பதைப் பொறுத்து தான் அது நமக்கு சக்தி அளிக்கும்!
சில உடை அணியும் விதம் பற்றிப் பார்ப்போம்!
லோ ஹிப் ஜீன்ஸ்:
லோ ஹிப் - அதாவது சரியாக கால் சட்டையை இடுப்பில் அணியாமல், சற்று இறக்கி அணிவது!
இது தான் இன்று பெரும்பாலாக கல்லூரி மாணவர்களின் கலாச்சாரம். மாணவர்கள், மாணவிகள் என்று அனைவரும் "லோ ஹிப் " ஜீன்ஸ் அணிகிறார்கள்!
இது எவ்வளவு மோசமான பழக்கம் என்பதை அறியாமலே இதை "பேஷன்" என்ற பெயரில் செய்து வருகிறார்கள்! :(
அமெரிக்காவில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகள் தான் அப்படி "லோ ஹிப்" ஜீன் அணிவார்களாம்! காரணம்? நீண்ட நாட்களாக சிறையிலேயே இருப்பதால், பெண்களை ஈர்ப்பதற்காக அப்படி அணிவார்களாம்! புரிகிறதல்லவா? இதற்கு மேல் தெளிவாக விவரிக்கத் தெரியவில்லை எனக்கு!
இது தெரியாமல், நம்ம ஊர் பெண்களும், பசங்களும் இப்படி அணிந்து திரிவது, ச்ச சொல்லவே முடியல!
இந்த விசயம் என் கல்லூரியில், ஒரு பேராசிரியர் சொன்னார்! இனியாவது இப்படி அணியாதீர்கள் என்று அறிவுரை சொன்னார், அப்படி அணிபவர்களைப் பார்த்து. அவர்களும், உண்மை தெரிந்ததால், வெட்கப் பட்டு, இனி அணிய மாட்டோம் என்றார்கள்.
நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகள் இப்படி அணிந்தால், எடுத்துச் சொல்லுங்கள். உண்மை தெரிந்தால் அணியமாட்டார்கள்! (நம்புகிறேன்)
இது போன்று உடை அணிவது, சக்தி தராது உங்களுக்கு எந்த விதத்திலும்!
சுடிதார், சேலை!
இது இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஏற்ற சௌகரியமான உடையாக சொல்லப் படுகின்றன. சேலையில் அத்தனை சௌகரியம் இல்லை என்றாலும், சுடிதார் சௌகரியமான உடையாகக் கருதப்படுகிறது!
ஆனால், இவற்றையும் அணியும் விதத்தில் அணிந்தால் தான் சக்தி தரும்.
சுடிதார் அணியும் போது "துப்பட்டா" அணிவது சரியாக அணிய வேண்டும்! சேலையும் அப்படித் தான், கட்டும் விதமென்று ஒன்று உள்ளது.
சரியாக உடுத்தவில்லை என்றால், இவற்றை சரி செய்வதிலேயே உங்களது நேரம் செலவாகிவிடும்! உங்களது வேலையில் கவனம் செலுத்த இயலாது!
ஒரு சூழ்நிலை சொன்னால் சரியாக விளங்கும் உங்களுக்கு:
இப்போ ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள், பரிச்சை எழுதிக் கொண்டிருக்கிறாள் பரிச்சை ஹாலில் . சுடிதார் அணிதிருக்கிறாள். ஆனால், காலையில் அவசரமாகக் கிளம்பியதால், துப்பாடாவை சரியாக அணியவில்லை!
பரிச்சை அறையில் மேற்பார்வை பார்க்க வந்த ஆசிரியர் , ஆண் என்று வைத்துக் கொள்வோம்! அந்த ஆசிரியர் இவள் அருகில் வரும் நேரம் எல்லாம், இயல்பாகவே இவளுக்கு "தான் உடை சரியாக உள்ளதா" என்று பார்த்து அதை சரி செய்யத் தோன்றும். தோன்றும் தானே இயல்பாகவே? அந்த ஆசிரியர் வயதான நல்ல ஆசிரியராகவே இருக்கட்டும், அப்படித் தான் தோன்றும் அந்தப் பெண்ணிற்கு. உடையை சரி செய்வதிலேயே பாதி நேரம் செலவாகி விடும்! பரிச்சை எழுதின மாதிரி தான், அதன் பிறகு! ஆனால், அந்தப் பெண் உடையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் பிரச்சனையை இல்லை தான். ( விலகி இருந்தால் இருக்கட்டும் என்று சிலர் இருப்பதுண்டு)
இன்னொரு சூழல்!
ஒரு ஆசிரியை, சேலை அணிந்துள்ளார். வகுப்பில் முன்னே நின்று பாடம் சொல்லையில், அடிக்கடி சேலையைச் சரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்! மாணவர்களது கண்கள் அவர் சேலையைத் தான் கவனிக்குமே தவிர பாடத்தை அல்ல! அவர் சரி செய்யாவிட்டால் கூட பாடத்தை மட்டும் கவனித்திருப்பார்கள்! இதனால் தான் பல கல்லூரிகளில் ஆசிரியைகளை "ஓவர் கோட்" அணியச் சொல்கிறார்கள் இன்றெல்லாம்!
இதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால்! நீங்கள் உங்களது உடையை அழகாக அணிவது முக்கியம் அல்ல! சௌகரியமாக அணிவது தான் முக்கியம்.
இறுக்கமான உடைகள்!
இறுக்கமாக சிலர் உடை அணிவார்கள். இந்த வகையான உடைகளும் உங்களுக்கு சக்தி தரப்போவதில்லை!
உட்காரும் பொழுது, நடக்கும் பொழுது, குனியும் பொழுது .. "எங்கடா.. கிளிஞ்சிடுமோ..!!!" என்று பயத்தோடு தான் இருக்க வேண்டும்! :D :D
உண்மை தானே?
சரி, சக்தி தரும் உடை, பற்றிப் பார்ப்போம்!
சக்தி தரும் உடை - பவர் ட்ரெஸ்ஸிங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அப்படி என்றால் என்ன?
இது "வேற" மாதிரியான சக்தி :) :) அதென்ன வேற மாதிரி? சொல்றேன் கேளுங்க :)
இப்போ நாம எல்லாரும் எந்த மாதிரி உடை அணிய விரும்பறோம்? அட, கண்டிப்பா அழகா தான்! இதிலென்ன சந்தேகம்?
சரி, இப்பொழுது நாம் உடை சார்ந்து சில விசயங்களை இங்கே பேசப் போகிறோம், பேசலாம்.
தொழில் சார்ந்த ஒரு சந்திப்பிர்க்குச் செல்லும் பொழுது எப்படிச் செல்வீர்கள் ? நல்ல "கோட் - சூட்" போட்டு?
( இது நம் கலாச்சாரம் இல்லை தான், ஆனாலும் இன்று பெரும்பாலானோர் இதை தான் பின்பற்றுகிறார்கள்)
அப்படித் தான் செல்வோம். ஆனால் அதே உடையை நாம் வெளியே குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்லும் போது அணிந்து செல்வதில்லை. சரிதானே? சரி அதென்ன சக்தி தரும் உடை? என்று தானே கேட்கிறீர்கள். இதோ சொல்கிறேன்.
இது ஒன்றும் விசேசமான உடை அல்ல! நாம் தினமும் அணியும் உடை தான். அதை எப்படி அணிகிறோம் என்பதைப் பொறுத்து தான் அது நமக்கு சக்தி அளிக்கும்!
சில உடை அணியும் விதம் பற்றிப் பார்ப்போம்!
லோ ஹிப் ஜீன்ஸ்:
லோ ஹிப் - அதாவது சரியாக கால் சட்டையை இடுப்பில் அணியாமல், சற்று இறக்கி அணிவது!
இது தான் இன்று பெரும்பாலாக கல்லூரி மாணவர்களின் கலாச்சாரம். மாணவர்கள், மாணவிகள் என்று அனைவரும் "லோ ஹிப் " ஜீன்ஸ் அணிகிறார்கள்!
இது எவ்வளவு மோசமான பழக்கம் என்பதை அறியாமலே இதை "பேஷன்" என்ற பெயரில் செய்து வருகிறார்கள்! :(
அமெரிக்காவில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகள் தான் அப்படி "லோ ஹிப்" ஜீன் அணிவார்களாம்! காரணம்? நீண்ட நாட்களாக சிறையிலேயே இருப்பதால், பெண்களை ஈர்ப்பதற்காக அப்படி அணிவார்களாம்! புரிகிறதல்லவா? இதற்கு மேல் தெளிவாக விவரிக்கத் தெரியவில்லை எனக்கு!
இது தெரியாமல், நம்ம ஊர் பெண்களும், பசங்களும் இப்படி அணிந்து திரிவது, ச்ச சொல்லவே முடியல!
இந்த விசயம் என் கல்லூரியில், ஒரு பேராசிரியர் சொன்னார்! இனியாவது இப்படி அணியாதீர்கள் என்று அறிவுரை சொன்னார், அப்படி அணிபவர்களைப் பார்த்து. அவர்களும், உண்மை தெரிந்ததால், வெட்கப் பட்டு, இனி அணிய மாட்டோம் என்றார்கள்.
நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகள் இப்படி அணிந்தால், எடுத்துச் சொல்லுங்கள். உண்மை தெரிந்தால் அணியமாட்டார்கள்! (நம்புகிறேன்)
இது போன்று உடை அணிவது, சக்தி தராது உங்களுக்கு எந்த விதத்திலும்!
சுடிதார், சேலை!
இது இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஏற்ற சௌகரியமான உடையாக சொல்லப் படுகின்றன. சேலையில் அத்தனை சௌகரியம் இல்லை என்றாலும், சுடிதார் சௌகரியமான உடையாகக் கருதப்படுகிறது!
ஆனால், இவற்றையும் அணியும் விதத்தில் அணிந்தால் தான் சக்தி தரும்.
சுடிதார் அணியும் போது "துப்பட்டா" அணிவது சரியாக அணிய வேண்டும்! சேலையும் அப்படித் தான், கட்டும் விதமென்று ஒன்று உள்ளது.
சரியாக உடுத்தவில்லை என்றால், இவற்றை சரி செய்வதிலேயே உங்களது நேரம் செலவாகிவிடும்! உங்களது வேலையில் கவனம் செலுத்த இயலாது!
ஒரு சூழ்நிலை சொன்னால் சரியாக விளங்கும் உங்களுக்கு:
இப்போ ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள், பரிச்சை எழுதிக் கொண்டிருக்கிறாள் பரிச்சை ஹாலில் . சுடிதார் அணிதிருக்கிறாள். ஆனால், காலையில் அவசரமாகக் கிளம்பியதால், துப்பாடாவை சரியாக அணியவில்லை!
பரிச்சை அறையில் மேற்பார்வை பார்க்க வந்த ஆசிரியர் , ஆண் என்று வைத்துக் கொள்வோம்! அந்த ஆசிரியர் இவள் அருகில் வரும் நேரம் எல்லாம், இயல்பாகவே இவளுக்கு "தான் உடை சரியாக உள்ளதா" என்று பார்த்து அதை சரி செய்யத் தோன்றும். தோன்றும் தானே இயல்பாகவே? அந்த ஆசிரியர் வயதான நல்ல ஆசிரியராகவே இருக்கட்டும், அப்படித் தான் தோன்றும் அந்தப் பெண்ணிற்கு. உடையை சரி செய்வதிலேயே பாதி நேரம் செலவாகி விடும்! பரிச்சை எழுதின மாதிரி தான், அதன் பிறகு! ஆனால், அந்தப் பெண் உடையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் பிரச்சனையை இல்லை தான். ( விலகி இருந்தால் இருக்கட்டும் என்று சிலர் இருப்பதுண்டு)
இன்னொரு சூழல்!
ஒரு ஆசிரியை, சேலை அணிந்துள்ளார். வகுப்பில் முன்னே நின்று பாடம் சொல்லையில், அடிக்கடி சேலையைச் சரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்! மாணவர்களது கண்கள் அவர் சேலையைத் தான் கவனிக்குமே தவிர பாடத்தை அல்ல! அவர் சரி செய்யாவிட்டால் கூட பாடத்தை மட்டும் கவனித்திருப்பார்கள்! இதனால் தான் பல கல்லூரிகளில் ஆசிரியைகளை "ஓவர் கோட்" அணியச் சொல்கிறார்கள் இன்றெல்லாம்!
இதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால்! நீங்கள் உங்களது உடையை அழகாக அணிவது முக்கியம் அல்ல! சௌகரியமாக அணிவது தான் முக்கியம்.
இறுக்கமான உடைகள்!
இறுக்கமாக சிலர் உடை அணிவார்கள். இந்த வகையான உடைகளும் உங்களுக்கு சக்தி தரப்போவதில்லை!
உட்காரும் பொழுது, நடக்கும் பொழுது, குனியும் பொழுது .. "எங்கடா.. கிளிஞ்சிடுமோ..!!!" என்று பயத்தோடு தான் இருக்க வேண்டும்! :D :D
உண்மை தானே?
சரி, சக்தி தரும் உடை, பற்றிப் பார்ப்போம்!
சக்தி தரும் உடை - பவர் ட்ரெஸ்ஸிங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அப்படி என்றால் என்ன?
- உங்களது வேலையின் நடுவே நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களது கவனத்தையும், பிறரது கவனத்தையும் ஈர்க்கக் கூடாது, சிதைக்கக் கூடாது!
- நீங்கள் அணிந்திருக்கும் உடை கண்களை உறுத்தாத நிறத்தில், தூய்மையாக இருத்தல் வேண்டும்.
- உங்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
- மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், தொள தொளவென்றும் இல்லாமல், சரியான அளவாக இருக்க வேண்டும்.
- அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றில்லை. சரியான விலையில் உங்களுக்கு ஏற்றார் போல இருக்க வேண்டும்!
"தன்னம்பிக்கை, சௌகரியம்" இவை தான் இந்த உடைகள் உங்களுக்குத் தரும் சக்தி!
உடையையும் சார்ந்து தான் உள்ளது உங்களது முன்னேற்றம்! என்ன சரி தானே!
----
கண்மணி அன்போடு!
நல்ல பதிவு கண்மணி...உடைகளை சரியானபடி அணிந்தால் அதை அணிபவருக்கும் அவர் அருகில் இருப்பவர்களுக்கும் நல்லது.பவர் ட்ரெஸ்ஸிங்க்!வகுப்பில் ஆசிரியர் சேலையை சரி செய்து கொள்வது பற்றி பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஇது பற்றி "தமிழிசை சௌந்தரபாண்டியன்" எனும் பெண் பேச்சாளர்: "ஆசிரியை அணிந்து வருகிற உடை அலங்காரமாக,கவர்ச்சியாக இருந்தால் யாரும் பாடத்தை கவனிக்க மாட்டார்கள் மேடத்தை தான் கவனிப்பார்கள்" என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
தம்பி லீவ் லெட்டர் தரலையா..?
பதிலளிநீக்கு