முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசான் ஆனேன்!

"அ ஆ இ ஈ...", இப்படி அழகாகச் சொல்லிக் கொண்டு இருந்தேன் நான், என் தந்தை சொல்லச் சொல்லக் கிளிப்பிள்ளை போல. பள்ளிக்குச் செல்லும் முன்பே அழகாக "ஒன்று இரண்டு மூன்று ..", நூறு வரை சொல்வேனாம். "க கா கி கீ...", "க ங ச ஞ....", எல்லாமே சொல்வேனாம். அதுவும் கொஞ்சிக் கொஞ்சி அழகாகச் சொல்வேனாம். :D

இப்படி நான் முதலில் பேசக் கற்றுக் கொண்டது தொட்டு நிறைய சொல்லித் தந்திருக்கிறார் என் அப்பா எனக்கு. "அப்பாக் குட்டி..", இப்படித் தான் என்னை அழைப்பார், சிறுவயதில். எனக்கும் அபாவுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. எல்லோர் வீட்டிலும் இருக்கத்தானே செய்யும். இது ஒன்றும் புதிதல்ல.

இன்று எனக்கும் என் அப்பாவுக்கும், உள்ளே அதே அன்பு இருப்பினும், நான் வளர்ந்து விட்ட காரணத்தால், என்னை "குட்டி, செல்லம்.., அப்பாக் குட்டி..", என்றெல்லாம் இன்று அவர் அழைப்பதில்லை! :(

ஏன்.. என் பெயர் சொல்லிக் கூட அழைப்பதில்லை.. இல்லை, என்னை அழைப்பதே இல்லை என்று சொல்லலாம்... காரணம் என்ன?

"நான் வளர்ந்துவிட்டேன்.., பெரியவளாகிவிட்டேன்.."

ஆனால், என்னுடன் பேசாமல் எல்லாம் இருக்கமாட்டார். பேசுவார். அப்பாவோடு பேசுவதென்றால் அத்தனை ஆனந்தம்!

சரி, விஷயத்திற்கு வருவோம். இன்று நான் பெரியவளாகிவிட்டேன், கல்லூரிக்குச் செல்கிறேன். என்னைப் பார்த்து உள்ளே என் தந்தைக்கு அத்தனை ஆனந்தம். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்!

நான் வலைப்பூ எழுதுவது அவருக்குத் தெரியும், ஆனால், என் வலைப்பூவை அவை வாசிக்கிறாரா என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால், என்னைப் பார்த்து அப்பாவிற்கும் ஆசை வந்துவிட்டது!

ஆம், என்னிடம் வந்து, "எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்..", இப்படிச் சொன்னார்.

:) :) :) எனக்கு அத்தனை ஆனந்தம். சரி என்று அப்பாவுக்கு எப்படி வலைப்பூ தொடங்க வேண்டும் என்று சொன்னேன்.

பாவம், அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகே உட்கார வைத்து, எல்லாம் சொல்லிக்கொடுத்தேன், இதோ இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறார். முகப்புத்தகம், மின்னஞ்சல்... இப்படி எல்லாம் சொல்லிக்கொடுத்தேன், ஒரு முறை சொன்னால் அப்பாவுக்கு புரியாது, இரு முறை சொல்ல வேண்டும்...

"ச, போங்கப்பா.. ஒரே மக்கா இருக்கீங்க...", இப்படி விளையாட்டாய் கோபித்துக் கொண்டும், திட்டிக் கொண்டும் சொல்லிக் கொடுத்தேன் :)

இப்படி எனக்கு "அ ஆ.." சொல்லிகொடுத்த ஆளையே இன்று அதட்டி ஆசான் ஆகிவிட்டேன் :P :P :D :)

நான் ரொம்ப கண்டிப்பான ஆசிரியை தெரியுமா.. :)

என்னுடைய தந்தை இன்று எழுதிய பதிவைக் கூட பலமாக கேலி செய்தேன் என்றால் பாருங்களேன்.. :)

இது போல், ஒரு நாள் பிள்ளைகளிடம் கற்றுக் கொள்வதில், எல்லாப் பெற்றோருக்கும் அத்தனை ஆனந்தமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இதோ, என்னிடம் கற்றுக் கொண்டு என் தந்தை உள்ளுக்குள் அவ்வளவு சிரித்தாரே...

என் தந்தையின் பதிவு படிக்கலாம் இங்கே! (ரொம்ப மோசமான பதிவு இல்ல?) :) என்ன இருந்தாலும் நம்மள மாதிரி எழுத முடியுமா.. :) :)

கருத்துகள்

  1. Ha ha..same thing in my family... Dad and me..:) It happens in the families of most bloggers! Happy blogging family!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு... தங்களின் எழுத்து நடை நன்றாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. இதோ செல்கிறேன்... தங்களின் தந்தை தளத்திற்கு...

    நன்றி....

    பதிலளிநீக்கு
  4. இப்போத்தான் போய் பார்த்துட்டு வந்தேன்... நல்லாத்தான் துவக்கியிருக்காரு....என் பார்வையில் உங்களை விட அவர் நல்லா வருவார்ன்னு நினைக்கிறேன் ஹி ஹி ஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கப்பா நல்லா வந்தா எனக்கு தானே பெருமை :) :D

      நீக்கு
  5. பெருமைப்படுகிறேன், கூடவே பொறாமையும் படுகிறேன்...! நான் பதிவிடுவது எங்கள் வீட்டாருக்கு தெரியும் ஆனால் என் பதிவுகள் ஒன்றை கூட என் அப்பாவோ அம்மாவோ படித்தது இல்லை, எதோ நான் படி என்று சொல்லி கொடுக்கும் சில பதிவுகளை அவ்வப்போது என் தங்கை படிப்பாள்.நான் எழுதுவது என் தந்தையின் பெயரில் தான் (என் பெயர் விஜயன் இல்லை !)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, நீங்க வேற, எங்கப்பாவும் தினமும் எல்லாம் என் பதிவ படிக்க மாட்டாங்க, வேலை நெறைய இருக்குனு சொல்லிடுவாங்க, அதான் இப்போ அவங்களையும் பதிவு போட வச்சிட்டேன், இனி தினமும் என் பதிவ வாசிக்க முயற்சி செய்வாங்கன்னு நம்பறேன்.

      நன்றி, ஆமா.. உங்க உண்மையான பெயர் என்ன?

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்