முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூக்குப் பொடி டப்பா - முருகன் தாத்தா!

"ஏலே பயலே... தாத்தாவுக்கு மூக்குபொடி டப்பாவைத் தேடிக் குடுலே!...", தன் கட்டிலில் துலாவியவாறே கத்தினார் முருகன் தாத்தா!

ஒல்லியான தேகம், சட்டை போடுவதை விட்டு பல நாட்கள் ஆகி இருந்தது. ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் தான் தாத்தா சட்டை போடுவார். இல்லை என்றால் ஒரு துண்டு தோளில், ஒரு "கைலி", இது தான் அவரது உடுப்பு.
Courtesy: Flickr.com

மூக்குபொடி இல்லாமல் அவரால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. தீர்ந்து விட்டால், பக்கத்து வீட்டுத்  தாத்தாவிடம்  வாங்கியாவது போட்டு விடுவார். அதே போல, அவரது சிறிய மூக்குப் பொடி டப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுவது அவருக்கு வாடிக்கை. தினமும் மூன்று வேளையும் தேடுவார். தேடினாலும் அவருக்குக் கிடைக்காது. பக்கத்திலேயே இருந்தாலும் கிடைக்காது! வயதாகிறது அல்லவா, அதனால் தான். இப்படி தான் இறுதியில் பேரனைக் கூப்பிடுவார், "ஏலே பயலே..." என்று.

"இந்தத் தாத்தாவுக்கு வேலையே இல்ல, எப்பபாரு, என்னையே கூப்டு மூக்குப்  பொடி தேட விடறது...", அலுத்துக் கொண்டே வருவான் சுந்தரம்.

"ஏலே, இந்த மூக்குப் பொடி டப்பியக் காணோம்.. பாருடா.. எங்கனு பாரு..", தேடிக் கொண்டே சொல்வார்.

"இந்தா தான இருக்கு...", வந்த வேகத்தில் எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டு, விளையாட ஓடிவிடுவான் சுந்தரம்.

சுந்தரம், முருகன் தாத்தாவின் கடைசிப் பெண்ணின் மகன். படு சுட்டி. கையில் எது கிடைத்தாலும் பிரித்து மேய்ந்து விடுவான், அதாவது உடைத்து விடுவான். அதுவே அவன் பொழுது போக்கு.

"தாத்தா... தாத்தா... சோறு பொங்கி வெளயாடுவோம் தாத்தா.. வாங்க.. வெளயாடுவோம்...", இப்படி சதா தாத்தாவை தொல்லை செய்வாள் குழலி.

குழலி, முருகன் தாத்தாவின் மகனின் பெண். செப்பு விளையாடுவது, அதுவும் தாத்தாவோடு விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

"ம்ம்.. வாடா.. வெளயாடுவோம்.. தாத்தாவுக்கு பொங்கச் சோறு செஞ்சு தா என்ன?", சிறுபிள்ளையாய் விளையாடுவார் குழலியிடம் முருகன் தாத்தா.

"ம்ம் தாத்தா... இந்தா பொங்கச் சோறு... சாப்டுங்க, ரொம்ப சுடுது, பாத்து...", என்று தனது செப்பில் இருக்கும் சிறு தட்டை, காலி தட்டை தாத்தாவிடம் கொடுப்பாள் குழலி.

"பூ பூ... , ரொம்ப சுடுது... ரொம்ப நல்ல இருக்கு பொங்கச் சோறு...", ஊதிக்கொண்டு தனது போக்கை வாயை அசைத்து இல்லாத பொங்கலைச் சாப்பிடுவார் முருகன் தாத்தா.

அதைப் பார்க்கையில் குழலிக்கு அத்தனை ஆனந்தமாக இருக்கும். உண்மையிலேயே தான் சமைத்த பொங்கல் அருமையாய் இருக்கிறது என்று சொன்னார் போல பெருமையாய் நினைப்பாள்.

தாத்தா என்றால் அவளுக்கு அத்தனை பிரியம்.

தாத்தாவுக்கு குழலியைப் பிடிக்கும் அளவுக்கு, மற்ற பேரன் பேத்திகளைப் பிடிக்காது.

குழலியின் தந்தை தான், முருகன் தாத்தாவைப் பார்த்துக் கொண்டார்.

"சோறு போடும் பிள்ளையின் மகள்" என்பதாலோ என்னவோ, குழலியை தான் பிடிக்கும், எப்போதும் அவளைத் தாத்தா திட்டுவது கூட இல்லை. மேலும், சுந்தரம் - பவளத்தின் வீட்டில் அவ்வளவு வசதியும் கிடையாது! இவர்களைத் தாத்தாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. எப்போதும் திட்டிக் கொண்டிருப்பார் அவர்களை.

குழலிக்கும் தாத்தாவை ரொம்பப் பிடிக்கும். எந்நேரமும் விளையாட்டாய் இருக்கும் அவளுக்கு தாத்தாவோடு.

குழலி பெரியவளானாள்,  தாத்தாவை இப்போதெல்லாம் அவளுக்குப் பிடிப்பதில்லை. அவர் அவளோடு "மட்டும்" விளையாடியது அவளுக்குப் பிடிக்கவில்லை!

----------------------------------------------

"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே! "

இந்தக் கூற்று எவ்வளவு உண்மை? குழந்தை கொண்டாடும் இடத்தில் , கொண்டாடுபவர் எப்படி எண்ணம் கொண்டவர் என்று எண்ணாமலேயே விளையாடிக் கொண்டு இருக்கும், ஆனந்தமாய். இறைவனும் என்ன அப்படியா?

கொண்டாடினால், தீயவருக்கும் துணை செல்வாரா?

இன்றெல்லாம் ஒருவேளை, நல்லவர்களாய் இருந்தும், பலர் துன்பப்படுவது, அதனால் தானோ?

உங்களுக்குத் தெரிந்தால், கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்?



கருத்துகள்

  1. //அவர் அவளோடு "மட்டும்" விளையாடியது அவளுக்குப் பிடிக்கவில்லை!//

    கடவுளும் அப்படிதான் தீதும்,நன்மையையும் கொண்டடுபவரின் எண்ணத்தை பொறுத்தே அமையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஒ... அப்போ, கொண்டாடுபவர் தீயவரா இருந்தா, கடவுள் தீயவர் செய்றதுக்கு உதவுவாரோ?!! :O

      கருத்துக்கு நன்றி...

      நீக்கு
    2. சகோதரி நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர் நன்மை செய்பவரை காப்பதும், தீது செய்பவர் அவரை கொண்டாடினாலும் தக்க தருணத்தில் தண்டிப்பார். எ.கா: நித்தியானந்தா,ஜெயந்திரர்,காஞ்சி தேவநாதன் இப்படி பலபேர். O.K

      நீக்கு
    3. ஒ.. அப்படி சொன்னிங்களா, இப்போ தெளிவா புரிஞ்சது!

      நீக்கு
  2. //கொண்டாடினால், தீயவருக்கும் துணை செல்வாரா?// ரொம்ப அழகா ஒரு கதை எழுதிட்டு இப்படி ஒரு கேள்வி கேக்றீங்க...

    சத்தியமா சொல்றேன் என்னைக்கும் தலைவர் வழி தான் ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்ருவான் ... இதுக்கு அடுத்து உங்களுக்கு தெரியும் நீங்களே மீதிய தினக் பண்ணிகோங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்டியா? கடவுள் நெறைய கொடுப்பார் கெட்டவங்களுக்கு? ஆனா? கை விட்டுடுவார்?
      அவர் கை கொடுக்குறதுக்கு முன்னாடி, நல்லவங்க வாழ்க்கை முடிஞ்சிடும் போல இருக்கே?!

      கருத்துக்கு மிக்க நன்றி...

      நீக்கு
    2. ம்ம்ம் "கொஞ்சம்" என்னவோ உண்மை தான்

      நீக்கு
  3. நீண்ட நாட்களாக தமிழ் ஆங்கில அகராதியை குழந்தைகளுக்காக தேடிக் கொண்டு இருந்தேன். மிக்க நன்றி. இன்று தான் ஆங்கில தளத்தையும் பார்த்தேன்.

    அற்புதம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்