முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் மட்டும் தான் சமைக்க வேண்டுமா?


உங்கள் வீட்டிலும், என் வீட்டிலும் அம்மா தான் சமைக்கிறார் இல்லையா? இருக்கலாம், சில வீடுகளில் ஆண்கள் சமைப்பதுண்டு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தான் சமைக்கிறார்கள்.

சிறுவயதில் இருந்தே, என் அம்மா சொல்வார், "பொம்பளப் பிள்ள, சமையல், வீட்டு வேலை எல்லாம் செய்யக் கத்துக்கணும்..."

இது அடிக்கடி என் அம்மா சொல்லும் "டயலாக்". அப்போது எனக்கு கேள்வி கேட்கத் தோன்றியதில்லை! "பெண்கள் தான் இதெல்லாம் செய்ய வேண்டுமா? ஆண்கள் செய்யக் கூடாதா?" என்று.

அந்த வயதில் என் அம்மா சொன்னாரே என்று, வீடு பெருக்குவது, தோசை சுடுவது, இப்படியாக சின்னச் சின்ன வேலைகள் எல்லாம் கற்கத் தொடங்கினேன். வீட்டில் மூன்று அறைகள் எனது தொகுதி.  பள்ளியில் சென்று பாடம் படித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும், தினமும் என் தொகுதியை நான் தான் பெருக்க வேண்டும். மற்ற இரண்டு அறைகளை அம்மா பெருக்கிக் கொள்வார்.

இப்படி எனக்கு விவரம் தெரிந்து, ஐந்தாம் வகுப்பில் இருந்து வீட்டு வேலை சொல்லித் தருகிறார்கள் எனக்கு. வீடு பெருக்குவதில் தொடங்கி, இன்று, பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது, என்று வீட்டு வேலைகள் எல்லாமே ஓரளவு சொல்லிக் கொடுத்துவிட்டார் என் அம்மா.

சமையல் செய்வதற்குக் கூட பயிற்சி தருகிறார்கள், இதோ இன்றும் விடுமுறையில் எனக்குத்  தனியாக சமையல் பயிற்சி வகுப்பு எடுக்கிறார் என் அம்மா. ஆனால், என் தம்பிக்கு எந்த வேலையும் சொல்லித் தருவதில்லை!!!! :(

சிறு வயதில் தான் விவரம் இல்லை. இப்போது இருபது வயது ஆகப் போகிறது, பெரிய ஆள் ஆகிவிட்டேனே! விவரம் வந்து விட்டது எனக்கு. :)

எப்படி என்கிறீர்களா? என் அம்மாவிடம் கேட்டேன், "ஏம்மா, என்னையே எல்லா வேலையும் செய்ய சொல்றீங்க, இந்த தம்பி இருக்கானே (அவனுக்கு பனிரெண்டு வயதாகிறது) அவன ஏம்மா ஒரு வேலையும் செய்ய சொல்ல மாட்றிங்க? பொண்ணு தான் எல்லா வேலையும் செய்யணுமோ?"

அம்மா சொன்னார், பெண்களால் தான் இந்த வேலைகள் எல்லாம் சிறப்பாய் செய்ய முடியுமாம். பிள்ளைக்கு என்ன தேவை என்று அம்மாவால் தான் எப்போதும் சரியாகப் புரிந்து கொள்ள முடியுமாம். பெண்களால் தான், அம்மாவால் தான் அன்பாகச் சமைக்க முடியுமாம். வீட்டு வேலைகள் எல்லாம் பெண்களின் கடமையாம். இன்று நான் இந்த வேலைகள் எல்லாம் கற்றுக்கொள்ளாவிட்டால், பிற்காலத்தில் அவதிப் பட நேருமாம்! 

இப்படி பெண்களால் மட்டும், இந்த வேலைகளை எல்லாம், சிறப்பாக, அழகுணர்வோடு, நுணுக்கமாக எப்படி செய்ய முடிகிறது?

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்"
இப்படி சொல்வார்களே, அது தான் காரணமோ? இதோ, என் அம்மா சொல்வது போல், செய்வது போல், இன்னும் எத்தனையோ அம்மாக்கள் சிறு வயது முதலே தங்களது மகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள், பயிற்சி தருகிறார்கள்.

ஒருவேளை, இப்படி பழகுவதால் தான், சிறப்பாகச் செய்கிறார்களோ? பெண்கள்?

சிறப்பாக சமைக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களும், மீண்டும் மீண்டும் சமைத்துப் பழகியதால் தான் சிறப்பாகச் செய்கிறார்கள், என்று கூட சொல்லலாம்.

அது சரி, இப்போது, நான் ஏன் சமையல் என்று பேசிக்கொண்டிருக்கிறேன்? காரணம்?

இருக்கிறது, பெண்கள் தான் சமைக்கிறார்கள் சரி, ஆனால், சமைப்பது பெண்களுக்கு மட்டும் தான் தெரியவேண்டும், என்று அவசியம் இல்லையே?

ஆண்களும் கூட சமைக்கக் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் ஒரு ஆண் என்றால், இந்தக் கேள்வி உங்களுக்கு,

"உங்களுக்கு, சமைக்கத் தெரியுமா? உங்கள் அம்மாவிற்கோ, மனைவிக்கோ, உடல் நிலை சரி இல்லாத போது, நீங்கள் சமைத்ததுண்டா?"

இல்லையா? அப்படி என்றால், நீங்கள் பாவம்! ஆம், உங்களுக்குப் பிடித்தவருக்கு சமைத்துக் கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம் எவ்வளவு பெரியது தெரியுமா? 
இந்தக் கேள்விக்கு பதில் "ஆம்" என்றால், உண்மையில் நீங்கள் அந்த ஆனந்தத்தை உணர்திருக்கக் கூடும். ஆம் தானே?

ஆண்கள் பொதுவாக வெளியே வேலைக்குச் செல்வார்கள், அதனால், வீட்டில் வேலை செய்வது இயலாது. ஆண்களும் வீட்டில் பாதி வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

ஆனால், உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு உடல் நிலை சரி இல்லாத போது, நீங்கள் வெளியே உணவு வாங்கி வந்து கொடுப்பதைக் காட்டிலும், நீங்களே அன்பாய் சமைத்துக் கொடுத்துப் பாருங்களேன்?

உறுதியாகச் சொல்கிறேன், நீங்கள் இப்படிச் செய்தால், பெண்கள் மீது பொறாமைப் படுவீர்கள்!

ஏன்? அதில் கிடைக்கும் ஆனந்தம், வேறு எதிலும் கிடைக்காது.  உங்களுக்குப் பிடித்தவருக்கு, அன்பைக் கலந்து சமைத்துக் கொடுப்பதில் அத்தனை ஆனந்தம் இருக்கிறது! 

 ஆண்கள் (என் அப்பா, அண்ணா, தம்பி, மாமா, சித்தப்பா, பெரியப்பா இப்படி பெரும்பாலும் இதுவரை நான் பார்த்தவர்கள் எல்லோருமே ஒரு சிலரைத் தவிர) பொதுவாக சமைப்பது, வீட்டு வேலை செய்வது என்றால், ஏதோ, கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறார்கள். 

திருமணம் ஆவதற்கு முன்பாக, வெளியூரில் தங்கி படிக்கும் போதோ, வேலை செய்யும் போதோ, சமைத்துச் சாப்பிட்டவர்கள், பெரும்பாலும் அதன் பிறகு சமைப்பதே கௌரவக் குறைச்சல் என்றே நினைக்கிறார்கள்.

ஆனால், என்னைக் கேட்டால், நான் சொல்வேன், அப்படி நினைப்பவர்கள் எல்லோருமே, வாழ்வில் ஒரு பெரும் ஆனந்தமான தருணத்தை இழந்துவிட்டவர்கள்!

பாவம் அவர்கள். 

ஒரு பெண்ணிடம் கேட்டுப் பாருங்கள், தான் வைத்த ரசம், அருமை என்று தன் கணவரோ, அப்பாவோ ஆசையாய் கையில் ஊற்றிக் குடித்தால், அவளுக்கு அப்போது எப்படி இருக்கும் என்று!

நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்று கூட இல்லை, ஒரு கை அதிகம் சாப்பிட்டாலே போதும், அது அத்தனை ஆனந்தமாக இருக்கும் அவளுக்கு!

இந்த ஆனந்தத்தை உணர்ந்ததில்லையா? நீங்களும் சமைத்து, இந்த ஆனந்தத்தை உணர்ந்து பாருங்கள்! புரியும்!

என்னடா... சோறு... அதுக்கு இவ்வளவு பெரிய பதிவா, ஆனந்தம், பேரானந்ததம்னு நெனைக்கிறீங்களா? 
ஆமா, சோறு (இப்படி தமிழில் சொல்வது கூட இல்லை பலர், சாதம்(இது தமிழ் இல்லை) - "rice" இப்படித் தான் சொல்கிறார்கள், தமிழில் சொன்னால் கூட தரக் குறைவாகக் கருதுகிறார்கள்) அதற்குத் தானே நீங்களும் நானும் இன்று எல்லாமே செய்கிறோம்! அதற்குத் தானே இந்த ஓட்டம் எல்லாமே? 

அதனால் தான் இந்தப் பதிவு, மிக முக்கியமான பதிவு :) :) :)

(குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பதிவு, நான் சமைக்கக் கற்றுக் கொண்டதன் விழைவு :P :) :D )

கருத்துகள்

  1. Pinitinga madam :)
    unmai unmai....
    enga amma samayal mudichuttu ethirpaakra ore vishayam,
    "saapadu epdi irunthuchu nu yaaravathu soningala?"

    intha maari chinna china vishyagal periya santhosshatha tharum.
    Arumaya soninga, konja varusham kalichu intha pathiva naa padikanum, padiche theerven :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) படிங்க படிங்க நல்லா படிங்க :)

      நன்றி :)

      நீக்கு
  2. ரொம்ப சரி! பெண்கள் பன்முகத்திறமை கொண்டவர்கள்; அதேபோல ஆண்களும் திறமைகளை வளர்த்துக் கொள்ளட்டுமே! என்ன தப்பு!
    நல்ல சிந்தனை கண்மணி!

    பதிலளிநீக்கு
  3. //"உங்களுக்கு, சமைக்கத் தெரியுமா? உங்கள் அம்மாவிற்கோ, மனைவிக்கோ, உடல் நிலை சரி இல்லாத போது, நீங்கள் சமைத்ததுண்டா?"//

    //இல்லையா? அப்படி என்றால், நீங்கள் பாவம்!//

    ஆம் என்றால் அதை சாப்பிடுபவர்கள் பாவம் பரவாயில்லையா?

    ஏன் இந்த கொலைவெறி Madam????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :D :D :D

      அட, நீங்க சமைக்கத் தெரியாம சமைச்சா தான் அப்படி ஆகும், அதுக்கு தான் கத்துக்கோங்கனு சொல்றேன் :)

      நீங்க ஓரளவு சமைச்சாக் கூட, உங்க அம்மா அந்த சாப்பாட "சூப்பர்"னு சொல்வாங்க பாருங்க.

      நீக்கு
  4. பெயரில்லா12/06/2012 2:18 AM

    சாமர்த்தியமான கட்டுரை :) உண்மையும் கூட. நானும் வீடு வேலைகள் செய்து பழகியவன் அல்ல. சிறு வயதில் அதை கற்றுக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு உள்ளாகவும் இல்லை. விடுதிகளில் தங்கி படிக்க, வாடகை வீட்டில் தங்கி வேலை செல்ல நேரிடும் வரை. சமைபது ஒரு கலை, அதை சிறப்பாய் செய்ய தெரிந்தவர்கள் உடன் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் :D

    இப்பொழுதெல்லாம்,
    அன்னை தங்கை தோழிகளிடம் இடம்
    சமையல் குறிப்புகள் வாங்கி வைத்து
    தொலைபேசியில் தொல்லையாய் பேசி
    திட்டும் கொட்டும் வாங்கி
    சமைய்ப்பதை ரசிக்க துடங்கி விட்டேன் :)

    பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும் என எதிர்பார்க்க துடங்கிவிட்ட இந்த கால கட்டத்தில் ஆண்களும் சமைக்க தெரிந்துக்கொள்வதில் தவறு இல்லை (சமையத்தில் கை கொடுக்கும்). நம்மை நேசிப்பவர்களுக்காக எதையும் கற்றுவைத்துக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ, நீங்க "நல்லா" சமைக்கக் கத்துக்கப் போறீங்க...

      என்னோட வாழ்த்துக்கள், உங்கள் சமையல் பயிற்சி சிறப்பா அமைய!

      கருத்துரைக்கு நன்றி :)

      நீக்கு
  5. மெல்லிய நகைச்சுவையோடு எழுதுவது கடினம். வாழ்வை இயல்பாக அனுபவிக்கும் மனோநிலையில் இருப்பவர்களுக்குத்தான் அது கைகூடும். உங்களுக்கு அது இயல்பாக எழுத்து நடையில் வருகின்றது. நல்வாழ்த்துகள்.

    ஜோதிஜி திருப்பூர்

    பதிலளிநீக்கு
  6. நானும், கொஞ்சம் கொஞ்சம் செய்வேன், எல்லாம் அம்மா சொல்லி கொடுத்தது. நன்றாக எழுதுகிறீர்கள் சகோ

    பதிலளிநீக்கு
  7. ம்ம் நிறைய செய்ய கற்றுக்கொள்ளுங்கள்! :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  8. எனக்கு சமைக்க தெரிந்தாலும் என் அம்மா என்னை அடுப்படிக்குள் விடுவதில்லை.. ஆண் பிள்ளைகளை வீட்டு வேலையே செய்யாமல் கெடுப்பது அம்மாக்கள் தான்.. சென்னையின் தனிமை எனக்கு சமைக்க கற்றுக்கொடுத்தது.. இப்போதும் வீட்டில் சின்ன சின்ன சமையல் வேலைகள் நான் செய்தாலும் கத்தி கூப்பாடு போட்டு என்னை அடுப்படியில் இருந்து முதலில் வெளியில் அனுப்பி விடுவார்.. யோசித்து பார்த்ததில் அது அவரது சாம்ராஜ்யம், நான் உள்ளே நுழைவது அவருக்கு பிடிக்கவில்லை என தெரிந்தது.. இப்போது நானும் ஒதுங்கிக்கொண்டேன்.. ஒரே பயம் என்னவென்றால் இன்னும் சில வருடத்தில் அவரது சாம்ராஜ்யத்தை பங்கு போட இன்னொருவர் வந்தால் என்ன ஆகும் என்கிற பயம் தான் இப்போது அதிக வருத்தமளிக்கிறது.. பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  9. நல்ல பயம் தான், அது தான் சண்டை வருகிறது போலும் நிறைய குடும்பகளில். பயப்படாதீர்கள் அந்த சண்டைகள், ஈகோ எல்லாம் நல்லவை தான். அன்புச் சண்டைகள் :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்