இதோ பொங்கல் வருகிறது, பொங்கல் கொண்டாடவே விருப்பம் கொஞ்சம் குறைந்து விட்டது, கொஞ்சம் என்ன கொஞ்சம்? நிறையவே குறைந்துவிட்டது!
புத்தாடை அணிந்து, அம்மா வைத்த பொங்கலை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஆசையாய் எடுத்துப் போனாலும், அதை வாங்கப் போவதில்லை, பக்கத்து வீட்டு அக்கா! காரணம் அவர் வேறு மதமாம்!
எதிர் வீட்டு அக்கா வாங்கிக் கொள்வார், காரணம் அவர் என் சாதி தானாம்!
ஆனால், பக்கத்து வீட்டு அண்ணா வாங்குவார், சாப்பிடமாட்டார், என்னிடம் வாங்கி, அவர் வீட்டின் பின்பக்கம் இருக்கும் குப்பைத் தொட்டிக்கும், நாய்க் குட்டிக்கும் பங்கு வைத்துக் கொடுப்பார்! அவர் வேறு வகுப்பாம்!
வீட்டில் தான் இந்தக் கொடுமை, கல்லூரியில் எல்லோரும் என் நட்பு தானே? கொண்டாடுவோம் என்றால், அதுவும் நடக்காது.
கல்லூரி விடுதியில் வைத்த பொங்கலை எல்லோரும் உண்டார்கள், உண்டோம், ஒரு சிலரைத் தவிர, ஒரு சில தோழிகளைத் தவிர!
ஏன் உண்ணவில்லை அவர்கள்? வேறு மதமாம் அவர்கள்!
சாத்தான் பிடிக்குமோ அன்பாய் ஒருவர் கொடுக்கும் உணவை உண்டால்? அன்பு! அன்பு என்று பேசுபவர்கள் தான் இவர்களும், ஆனாலும், நான் கொடுக்கும், என் அன்பு நிறைந்த பொங்கல், அதைத் தீண்டவும் மாட்டார்கள்!
பொங்கலைப் பிடித்ததை விட, அவர்களது "மதம்" பிடிக்கும் போலும் அவர்களுக்கு!
நான் உண்கிறேன், ஒவ்வொரு முறையும், கிறிஸ்துமஸ் என்றும், ரமலான் என்றும் எல்லோர் கொடுக்கும் அன்பையும், உணவுகளை அல்ல, அன்பை! ஆம், அப்படித்தான் நினைத்துக் கொள்வேன் நான்.
ஆனால், என் அன்பை இவர்கள் ஏற்க மறுப்பது ஏன்?
"கல்லூரியில் பள்ளிகளில் சமத்துவப் பொங்கல்!", செய்தியில் சொன்னார்கள்.
வேதனையாக இருந்தது எனக்கு மட்டும், என் கல்லூரியில் தான் பொங்கலை விட மதம் பிடித்தவர்கள் அதிகமோ என்று! :( :(
ஆனால், எல்லோரையும் குறை சொல்லவும் இயலாது, என் தோழிகள் சிலர் இருக்கிறார்கள், என் போல, பொங்கல் பிடிக்கும் அவர்களுக்கு, மதம் அல்ல!
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
பாசத்தை மதிக்காதவர்கள் மத்தியில்,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
அன்பை விட,
மதம் விரும்புபவர்கள்
மத்தியிலே, இங்கு,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
அன்பு இல்லாத இவர்களுக்கு,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
பிரிந்து கிடக்கும் இவர்களிடையே,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
இணைய மறுக்கும் இவர்களிடையே,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்!!!???
அன்பை மட்டுமே மதிக்கும், விரும்பும், அனைவருக்கும், கண்மணியின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
புத்தாடை அணிந்து, அம்மா வைத்த பொங்கலை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஆசையாய் எடுத்துப் போனாலும், அதை வாங்கப் போவதில்லை, பக்கத்து வீட்டு அக்கா! காரணம் அவர் வேறு மதமாம்!
எதிர் வீட்டு அக்கா வாங்கிக் கொள்வார், காரணம் அவர் என் சாதி தானாம்!
ஆனால், பக்கத்து வீட்டு அண்ணா வாங்குவார், சாப்பிடமாட்டார், என்னிடம் வாங்கி, அவர் வீட்டின் பின்பக்கம் இருக்கும் குப்பைத் தொட்டிக்கும், நாய்க் குட்டிக்கும் பங்கு வைத்துக் கொடுப்பார்! அவர் வேறு வகுப்பாம்!
வீட்டில் தான் இந்தக் கொடுமை, கல்லூரியில் எல்லோரும் என் நட்பு தானே? கொண்டாடுவோம் என்றால், அதுவும் நடக்காது.
கல்லூரி விடுதியில் வைத்த பொங்கலை எல்லோரும் உண்டார்கள், உண்டோம், ஒரு சிலரைத் தவிர, ஒரு சில தோழிகளைத் தவிர!
ஏன் உண்ணவில்லை அவர்கள்? வேறு மதமாம் அவர்கள்!
சாத்தான் பிடிக்குமோ அன்பாய் ஒருவர் கொடுக்கும் உணவை உண்டால்? அன்பு! அன்பு என்று பேசுபவர்கள் தான் இவர்களும், ஆனாலும், நான் கொடுக்கும், என் அன்பு நிறைந்த பொங்கல், அதைத் தீண்டவும் மாட்டார்கள்!
பொங்கலைப் பிடித்ததை விட, அவர்களது "மதம்" பிடிக்கும் போலும் அவர்களுக்கு!
நான் உண்கிறேன், ஒவ்வொரு முறையும், கிறிஸ்துமஸ் என்றும், ரமலான் என்றும் எல்லோர் கொடுக்கும் அன்பையும், உணவுகளை அல்ல, அன்பை! ஆம், அப்படித்தான் நினைத்துக் கொள்வேன் நான்.
ஆனால், என் அன்பை இவர்கள் ஏற்க மறுப்பது ஏன்?
"கல்லூரியில் பள்ளிகளில் சமத்துவப் பொங்கல்!", செய்தியில் சொன்னார்கள்.
வேதனையாக இருந்தது எனக்கு மட்டும், என் கல்லூரியில் தான் பொங்கலை விட மதம் பிடித்தவர்கள் அதிகமோ என்று! :( :(
ஆனால், எல்லோரையும் குறை சொல்லவும் இயலாது, என் தோழிகள் சிலர் இருக்கிறார்கள், என் போல, பொங்கல் பிடிக்கும் அவர்களுக்கு, மதம் அல்ல!
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
பாசத்தை மதிக்காதவர்கள் மத்தியில்,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
அன்பை விட,
மதம் விரும்புபவர்கள்
மத்தியிலே, இங்கு,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
அன்பு இல்லாத இவர்களுக்கு,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
பிரிந்து கிடக்கும் இவர்களிடையே,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
இணைய மறுக்கும் இவர்களிடையே,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்!!!???
அன்பை மட்டுமே மதிக்கும், விரும்பும், அனைவருக்கும், கண்மணியின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
உண்மை தான்.. மத வேறுபாடு பார்ப்பவர்களும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான்.. நாம் எப்போது எது கொடுத்தாலும் அவர்கள் “சாமி முன்னாடி வைத்ததா?”, “பூஜை பண்ணியதா?” என்று தான் கேட்பார்கள். நீங்கள் சொன்னது உண்மை தான், ‘சாத்தான் பிடித்துவிடும்’ என்று தான் என் கிறிஸ்தவ நண்பன் சொன்னான். ஆனால் அவனுக்கு இதுவரை எந்த சாத்தானும் பிடித்ததில்லை எங்கள் வீட்டு தீபாவளி பலகாரம் தின்று (வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் போவது எல்லாம் சாத்தான் வகையில் சேராது). ஆனால் பாய் வீட்டு ஆட்கள் எல்லாம் இந்த விசயத்தில் தங்கம். நாம் கொடுக்கும் பலகாரங்களையும் உண்பர், நமக்கும் அவர்கள் பண்டிகையின் போது பிரியாணி கொடுப்பர் எக்ஸ்ட்ரா சிக்கன் பீஸோடு.. கிறிஸ்தவர்கள் கொஞ்சம் மத ஒற்றுமையை வளர்த்துக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.. அப்படி வளர்த்துக்கொள்ளவில்லையென்றாலும் நமக்கு கவலையில்லை. நாம் நன்றாக சந்தோஷமாக கொண்டாடுவோம். இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கண்மணி :-)
பதிலளிநீக்குநிறைய பிரியாணி சாப்பிட்டிருப்பீர்கள் போல! :) பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)
நீக்குஹா ஹா நேற்று கூட ஒரு பாய் வீட்டு விசேஷத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு தான் வீட்டுக்கு புறப்பட்டேன்.. அது ஒரு தனி ருசி.. அவர்கள் போல் யாராலும் பிரியாணி செய்ய முடியாது :-D
நீக்கு:) ம்ம் :)
நீக்குபொங்கல் திருநாளில் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறாய், கண்மணி.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
நன்றி மா, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
நீக்குஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நீக்குIniya pongal valzthukkal Kanmani :-) New year wishes too :-) May this year takes you to great heights. Nam ullam eppadiyo appadiyae kangal ulagatha paarkkum. Manasa santhosama paarthuko mathathu thaana nadakkum :-)
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
நீக்குஎங்க பக்கத்துக்கு வீட்டுகாரங்க இப்டிதான், என்ன பிறவிகளோ? அன்பை பற்றி பேசுவார்கள் ஆனால் ... இவர்களைத்தான் " குரைக்கிற நாய் கடிக்காது" என்பார்களோ ?
பதிலளிநீக்குஇருக்கலாம்!
நீக்கு