முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடை பயண நினைவுகள்!

I pray to be only yours
என் உயிரினுள்ளே இருக்கும் ஒரு பாடல் -அது தான்
நான் மீண்டும் மீண்டும் எழுத நினைக்கும் ஒரு பாடல்!

நீ எனக்காக மீண்டும் மீண்டும்
பாடிக்கொண்டே இருக்க,
நீண்டு கொண்டே போகும் குளிரில்,
நான் கண் விழித்துக்கிடக்கிறேன்.

வானம் பார்த்து,
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!

பாடு எனக்காக விண்மீன்களைப் பற்றிய அந்தப் பாடலை -உன்னுடைய
நாட்டியமாடும், விடாது சிரிக்கும் உலகத்தைப் பற்றிய அந்தப் பாடலை!

எனது கனவுகள் தூரமானவை - இப்படி
எனக்குத் தோன்றும்போது,
பாடு எனக்காக நீ வைத்திருக்கும்,
நல்ல திட்டங்களை!

வானம் பார்த்து,
 
A walk to remember - There's a song
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!

என் விதியை உன்னிடமே தருகிறேன்,
என்னை முழுவதுமாய் தருகிறேன்,
உன் பாடல்கள் மட்டுமே வேண்டுகிறேன்,
என்னால் முடிந்த மட்டும்,  
என் அன்பைப் பாடிக்கொண்டிருக்கிறேன்!
என் மூச்சின் உச்சத்திலே,
மீண்டும் உனக்கு அதைத் தருகிறேன்!


வானம் பார்த்து,
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!




பி.கு. : "A walk to remember" என்னும் ஆங்கிலப் படத்தில் வரும்,  "There's a song..." என்னும் பாடலை நான் மொழி பெயர்க்கச் செய்த முயற்சி இது!

நல்லா இல்லைனாலும் பொறுத்துக்கோங்க! :)

கருத்துகள்

  1. என்ன இப்படி சொல்லிட்டீங்க...? நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நல்லா இருக்கா! :) நன்றி நன்றி... நன்றி.... :)

      நீக்கு
  2. பெயரில்லா3/13/2013 6:35 AM

    கடைசி வரைக்கும் கண்மணி எழுதியது, ஏதோ இசைய பத்தி சொல்ல வரானு நினச்சு ஏமாந்துட்டேன் :( அப்றம் பின் குறிப்புல மொழிபெயர்ப்புனு போட்டிருக்கு :)
    நல்ல பதிவு! நல்ல பதிவு!

    "பாடு என்னக்காக விண்மீன்களைப் பற்றிய அந்தப் பாடலை -உன்னுடைய
    நாட்டியமாடும், விடாது சிரிக்கும் உலகத்தைப் பற்றிய அந்தப் பாடலை! "

    இந்த மொழிபெயர்ப்பில் பிடித்த வரிகள் :) தமிழ்ல படிக்க அழகா இருக்கு..


    way to go!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பாடு எனக்காக ..." இந்த வரி உங்களுக்கு உண்மையிலேயே பிடிச்சதா? இல்ல எனக்காக "என்னக்காக"னு தப்பா தட்டச்சு செஞ்சு இருக்றத புரியவைக்கிறதுக்காக சொன்னிங்களா?

      எப்டி இருந்தாலும் சரி, நான் நீங்க போட்ட கருத்துரைய வச்சு தான் அந்த பிழைய கண்டுபிடிச்சேன், சரி செஞ்சுட்டேன். நன்றி அதுக்கு.

      அப்றம், ரெண்டு தடவ நல்ல பதிவு சொல்லி இருகிங்க, அதனால, "நன்றி, நன்றி!"

      :) அழகா இருக்கா? :) நன்றி...!

      நீக்கு
  3. இது நல்ல மொழிபெயர்ப்பா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் ஒரு பாடலாக எனக்கு இது மிக மிக பிடித்திருக்கிறது.. இது சொல்லும் மென் சோகம் என மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் கண்மணி..
    // வானம் பார்த்து,
    கைகளை உயர்த்தி,
    நான் வேண்டிக்கொள்கிறேன்,
    உனதாக மட்டுமே,
    நான் இருக்க வேண்டுமென்று,
    நான் வேண்டிக்கொள்கிறேன்,
    உனதாக மட்டுமே,
    நான் இருக்க வேண்டுமென்று!
    நான் வேண்டிக்கொள்கிறேன்,
    உனதாக மட்டுமே,
    நான் இருக்க வேண்டுமென்று!
    இதோ இப்போது எனக்குத் தெரியும்,
    நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!// இந்த வரிகள் மிக மிக அற்புதம்.. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) எல்லாப் புகழும் உண்மையா இந்தப் பாட்ட ஆங்கிலத்துல எழுதினவருக்கே!

      நன்றி... :)

      நீக்கு
  4. எழுத்தாளரே , கலக்கிடீங்க, தொடரட்டும் உங்கள் முயற்சி. வாழ்த்துக்கள் கண்மணி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...