முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடை பயண நினைவுகள்!

I pray to be only yours
என் உயிரினுள்ளே இருக்கும் ஒரு பாடல் -அது தான்
நான் மீண்டும் மீண்டும் எழுத நினைக்கும் ஒரு பாடல்!

நீ எனக்காக மீண்டும் மீண்டும்
பாடிக்கொண்டே இருக்க,
நீண்டு கொண்டே போகும் குளிரில்,
நான் கண் விழித்துக்கிடக்கிறேன்.

வானம் பார்த்து,
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!

பாடு எனக்காக விண்மீன்களைப் பற்றிய அந்தப் பாடலை -உன்னுடைய
நாட்டியமாடும், விடாது சிரிக்கும் உலகத்தைப் பற்றிய அந்தப் பாடலை!

எனது கனவுகள் தூரமானவை - இப்படி
எனக்குத் தோன்றும்போது,
பாடு எனக்காக நீ வைத்திருக்கும்,
நல்ல திட்டங்களை!

வானம் பார்த்து,
 
A walk to remember - There's a song
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!

என் விதியை உன்னிடமே தருகிறேன்,
என்னை முழுவதுமாய் தருகிறேன்,
உன் பாடல்கள் மட்டுமே வேண்டுகிறேன்,
என்னால் முடிந்த மட்டும்,  
என் அன்பைப் பாடிக்கொண்டிருக்கிறேன்!
என் மூச்சின் உச்சத்திலே,
மீண்டும் உனக்கு அதைத் தருகிறேன்!


வானம் பார்த்து,
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!




பி.கு. : "A walk to remember" என்னும் ஆங்கிலப் படத்தில் வரும்,  "There's a song..." என்னும் பாடலை நான் மொழி பெயர்க்கச் செய்த முயற்சி இது!

நல்லா இல்லைனாலும் பொறுத்துக்கோங்க! :)

கருத்துகள்

  1. என்ன இப்படி சொல்லிட்டீங்க...? நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நல்லா இருக்கா! :) நன்றி நன்றி... நன்றி.... :)

      நீக்கு
  2. பெயரில்லா3/13/2013 6:35 AM

    கடைசி வரைக்கும் கண்மணி எழுதியது, ஏதோ இசைய பத்தி சொல்ல வரானு நினச்சு ஏமாந்துட்டேன் :( அப்றம் பின் குறிப்புல மொழிபெயர்ப்புனு போட்டிருக்கு :)
    நல்ல பதிவு! நல்ல பதிவு!

    "பாடு என்னக்காக விண்மீன்களைப் பற்றிய அந்தப் பாடலை -உன்னுடைய
    நாட்டியமாடும், விடாது சிரிக்கும் உலகத்தைப் பற்றிய அந்தப் பாடலை! "

    இந்த மொழிபெயர்ப்பில் பிடித்த வரிகள் :) தமிழ்ல படிக்க அழகா இருக்கு..


    way to go!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பாடு எனக்காக ..." இந்த வரி உங்களுக்கு உண்மையிலேயே பிடிச்சதா? இல்ல எனக்காக "என்னக்காக"னு தப்பா தட்டச்சு செஞ்சு இருக்றத புரியவைக்கிறதுக்காக சொன்னிங்களா?

      எப்டி இருந்தாலும் சரி, நான் நீங்க போட்ட கருத்துரைய வச்சு தான் அந்த பிழைய கண்டுபிடிச்சேன், சரி செஞ்சுட்டேன். நன்றி அதுக்கு.

      அப்றம், ரெண்டு தடவ நல்ல பதிவு சொல்லி இருகிங்க, அதனால, "நன்றி, நன்றி!"

      :) அழகா இருக்கா? :) நன்றி...!

      நீக்கு
  3. இது நல்ல மொழிபெயர்ப்பா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் ஒரு பாடலாக எனக்கு இது மிக மிக பிடித்திருக்கிறது.. இது சொல்லும் மென் சோகம் என மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் கண்மணி..
    // வானம் பார்த்து,
    கைகளை உயர்த்தி,
    நான் வேண்டிக்கொள்கிறேன்,
    உனதாக மட்டுமே,
    நான் இருக்க வேண்டுமென்று,
    நான் வேண்டிக்கொள்கிறேன்,
    உனதாக மட்டுமே,
    நான் இருக்க வேண்டுமென்று!
    நான் வேண்டிக்கொள்கிறேன்,
    உனதாக மட்டுமே,
    நான் இருக்க வேண்டுமென்று!
    இதோ இப்போது எனக்குத் தெரியும்,
    நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!// இந்த வரிகள் மிக மிக அற்புதம்.. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) எல்லாப் புகழும் உண்மையா இந்தப் பாட்ட ஆங்கிலத்துல எழுதினவருக்கே!

      நன்றி... :)

      நீக்கு
  4. எழுத்தாளரே , கலக்கிடீங்க, தொடரட்டும் உங்கள் முயற்சி. வாழ்த்துக்கள் கண்மணி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்