உங்களுக்கு நல்ல பசி! காலையில் இருந்து சாப்பிடவே இல்லை! நல்ல வேலை, நேரம் இப்போது மதியம் மூன்று மணி என்று வைத்துக் கொள்ளுங்கள்!
சாப்பிட, பழைய சாதம் வேண்டுமா? அல்லது, பாயாசம் சேர்த்து இருக்கும் அறுசுவை சாப்பாடு வேண்டுமா என்று கேட்டால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
பெரும்பாலானோர் அறுசுவை உணவு தான் என்பார்கள், ஆனால், என்னைக் கேட்டால், பழைய சாதம் தான் வேண்டும் என்பேன்!!
ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, அந்த பழைய சாதம் என் அம்மா கையால் செய்ததாக இருக்க வேண்டும்!
இப்படி எல்லாம் நான் சமீப காலமாக யோசிக்கத் தொடங்கிவிட்டேன், அதுவும், அதிகம் சாப்பாடு குறித்தே இருக்கின்றன யோசனைகள் எல்லாம்!
அடடே என்ன ஆயிற்று கண்மணிக்கு? பயப்படாதீர்கள், "வெயில் அதிகமானதால் ஒருவேளை மூளை கலங்கிவிட்டதோ எனக்கு?", என்று!
காரணம், விடுதியில் இருந்தது தான்! வீடு, அம்மா அப்பா தம்பி இவர்களைப் பிரிந்து இருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது விடுதிக்குச் சென்ற பிறகு தான்!
இதுவரை வீட்டை விட்டு பிரிந்து சென்றதே கிடையாது நான்! சொல்லிக் கொண்டிருப்பேன் முன்பெல்லாம், "இந்த வீட்ட விட்டு வேற எங்கயாவது போக சொன்னா, வேகமா போய்டுவேன்", என்றெல்லாம்!
அப்படிச் சொல்லிக் கொண்டு தான், என் அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், நன்றாகப் படிக்கப் போகிறேன், பட்டம் விடப்போகிறேன் என்று வசனம் எல்லாம் பேசி, உள்ளூரில் இருக்கும் கல்லூரிக்கே, விடுதியில் சென்று சேர்ந்தேன்!
தோழிகள் எல்லாம் சொன்னார்கள், வேண்டாம், வேண்டாம், என்று! ஆனால், நான் கேட்டேனோ? இல்லவே இல்லை!
போன புதிதில் ஒன்றுமே தோன்றவில்லை, ஆனால், ஒரு மாதம் போனதும் தான் தெரிந்தது, இது கொஞ்சம் கடினம் தான் என்று, ஒரு மாதம் வரை ஏதோ சுமாராகத் தோன்றிய விடுதி உணவு, உள்ளே இறங்கப் போர் செய்யத் தொடங்கியது ஒரே மாதத்தில். எப்போதுடா வீட்டிற்குப் போவோம், அம்மா கையால் சாப்பிடுவோம் என்று காத்துக் கொண்டு கிடப்பேன்!
அது என்ன தான் மாயமோ அம்மாவின் சாப்பாடு மட்டும் இருபது வருடமாக சாப்பிட்டும், அதே தித்திப்போடு இருக்கிறது இன்றும், சலிக்கவே இல்லை!
காரணம், அதில் அவர் ரகசியமாய் கலந்துவிடும் அன்பு தான் என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது.
ஒரு வருடம் விடுதியில் இருந்த பிறகு இப்போது என்னிடம் கேட்டால், "வீட்டிலேயே இருக்கிறேன்", என்று தான் சொல்வேன்!
ஒரு வருடம் விடுதியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன், துணி துவைப்பதில் இருந்து, தலை பின்னுவது வரை கற்றுக் கொண்டேன்! சோகம் என்றோ, ஆனந்தம் என்றோ ஒரு தோழி சொல்லும் போது, அதை எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும், கற்றுக் கொண்டேன்.
வகுப்பறையில் தோழிகளைப் பற்றி அதிகம் அறியாத விஷயங்கள் எல்லாம், விடுதி அறைகளில் புரிந்து கொண்டேன்!
எத்தனை தான் இருந்தாலும், இனியும் வேண்டாமடா என்று, இறுதியில் வீட்டிற்கே வந்துவிட்டேன், அம்மா அப்பாவோடு இருக்க!
இப்போ சொல்லுங்க? பழைய சாதமா? பாயாசமா? எது வேணும்?
சாப்பிட, பழைய சாதம் வேண்டுமா? அல்லது, பாயாசம் சேர்த்து இருக்கும் அறுசுவை சாப்பாடு வேண்டுமா என்று கேட்டால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
பெரும்பாலானோர் அறுசுவை உணவு தான் என்பார்கள், ஆனால், என்னைக் கேட்டால், பழைய சாதம் தான் வேண்டும் என்பேன்!!
ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, அந்த பழைய சாதம் என் அம்மா கையால் செய்ததாக இருக்க வேண்டும்!
இப்படி எல்லாம் நான் சமீப காலமாக யோசிக்கத் தொடங்கிவிட்டேன், அதுவும், அதிகம் சாப்பாடு குறித்தே இருக்கின்றன யோசனைகள் எல்லாம்!
அடடே என்ன ஆயிற்று கண்மணிக்கு? பயப்படாதீர்கள், "வெயில் அதிகமானதால் ஒருவேளை மூளை கலங்கிவிட்டதோ எனக்கு?", என்று!
காரணம், விடுதியில் இருந்தது தான்! வீடு, அம்மா அப்பா தம்பி இவர்களைப் பிரிந்து இருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது விடுதிக்குச் சென்ற பிறகு தான்!
இதுவரை வீட்டை விட்டு பிரிந்து சென்றதே கிடையாது நான்! சொல்லிக் கொண்டிருப்பேன் முன்பெல்லாம், "இந்த வீட்ட விட்டு வேற எங்கயாவது போக சொன்னா, வேகமா போய்டுவேன்", என்றெல்லாம்!
அப்படிச் சொல்லிக் கொண்டு தான், என் அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், நன்றாகப் படிக்கப் போகிறேன், பட்டம் விடப்போகிறேன் என்று வசனம் எல்லாம் பேசி, உள்ளூரில் இருக்கும் கல்லூரிக்கே, விடுதியில் சென்று சேர்ந்தேன்!
தோழிகள் எல்லாம் சொன்னார்கள், வேண்டாம், வேண்டாம், என்று! ஆனால், நான் கேட்டேனோ? இல்லவே இல்லை!
போன புதிதில் ஒன்றுமே தோன்றவில்லை, ஆனால், ஒரு மாதம் போனதும் தான் தெரிந்தது, இது கொஞ்சம் கடினம் தான் என்று, ஒரு மாதம் வரை ஏதோ சுமாராகத் தோன்றிய விடுதி உணவு, உள்ளே இறங்கப் போர் செய்யத் தொடங்கியது ஒரே மாதத்தில். எப்போதுடா வீட்டிற்குப் போவோம், அம்மா கையால் சாப்பிடுவோம் என்று காத்துக் கொண்டு கிடப்பேன்!
அது என்ன தான் மாயமோ அம்மாவின் சாப்பாடு மட்டும் இருபது வருடமாக சாப்பிட்டும், அதே தித்திப்போடு இருக்கிறது இன்றும், சலிக்கவே இல்லை!
காரணம், அதில் அவர் ரகசியமாய் கலந்துவிடும் அன்பு தான் என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது.
ஒரு வருடம் விடுதியில் இருந்த பிறகு இப்போது என்னிடம் கேட்டால், "வீட்டிலேயே இருக்கிறேன்", என்று தான் சொல்வேன்!
ஒரு வருடம் விடுதியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன், துணி துவைப்பதில் இருந்து, தலை பின்னுவது வரை கற்றுக் கொண்டேன்! சோகம் என்றோ, ஆனந்தம் என்றோ ஒரு தோழி சொல்லும் போது, அதை எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும், கற்றுக் கொண்டேன்.
வகுப்பறையில் தோழிகளைப் பற்றி அதிகம் அறியாத விஷயங்கள் எல்லாம், விடுதி அறைகளில் புரிந்து கொண்டேன்!
எத்தனை தான் இருந்தாலும், இனியும் வேண்டாமடா என்று, இறுதியில் வீட்டிற்கே வந்துவிட்டேன், அம்மா அப்பாவோடு இருக்க!
இப்போ சொல்லுங்க? பழைய சாதமா? பாயாசமா? எது வேணும்?
எதுவும் வேண்டாம்... புரிந்து கொண்ட அன்பு என்றும்... என்றென்றும்... தொடர வேண்டும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....
எதுவுமே வேண்டாமா? :) அது தான் அன்பு இருந்தால் போதுமே, எல்லாம் கிடைத்தது போல தானே? நன்றி :)
நீக்குஎனக்கும் பழைய சாதமே மிகவும் பிடிக்கும், அதுவும் இந்த வேளையில் பழைய சாதத்து நீர்த்த தண்ணீர் தேவாமிர்தம்...
பதிலளிநீக்குவிடுதி வாழ்க்கை வாழ்ந்தது இல்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை, ஆட்டம் பட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம், சென்னையில் சிலமாத பேச்சிலர் ரூம் வாழ்க்கை மூலம் கிடைத்தது, மிஸ் செய்தது அம்மா செய்த சாப்பாட்டை மட்டுமே, எத்தனை பேர் கையால் விருந்து சாப்பிட்டாலும் அம்மா புளித்தண்ணி செய்தால் கூட அமிர்தம் தான்...
:) உண்மை தான். என் தோழி ஒருத்தி விடுதியில் இருக்கும் போது என்னை வீட்டு சாப்பாடு எடுத்து வர சொன்னாள், என்ன சாப்பாடு வேண்டும், சைவமா? அசைவமா?என்று கேட்டேன், அதற்கு அவள், வீட்ல இருந்து ஒரு பிடி மண் எடுத்துட்டு வந்தாலும் போதும் என்றாள். வீட்டு சமையல் வீட்டு சமையல் தான்!
நீக்குநல்ல கருத்து.. மூன்று வேளையும் பழைய சோறு+மாங்காய் ஊறுகாய்+பக்கோடா தூள்+சின்ன வெங்காயம்.. ஒரு மரத்தடி.. ஒரு நார்க்கட்டில்.. இது போதும் எனக்கு.. காலம் பூர அபப்டியே கெடப்பேன்.. பிரிவு என்பதே உறவை பலப்படுத்தத்தான்.. அந்த வகையில் விடுதி நம் குடும்பத்தின் மீது இன்னும் அன்பை செலுத்த வைக்கின்றன.. உண்மை தான்.. ஆனால் ஒற்றுமையும், தைரியமும் ஒரு day scholarஐ விட விடுதியில் தங்கி படிப்பவனிடம் அதிகமாக இருக்கும்.. இருந்தாலும் தைரியத்தை விட வீடு தான் முக்கியம் என நினைக்கும் கேஸ் நான்.. நமக்கு வீடு தான் சொர்க்கம்..
பதிலளிநீக்குநல்ல பதிவு.. வாழ்த்துக்கள்
இதைக் கேட்டதும் எனக்கு "மார்கழியில் குளிச்சுப் பாரு..." பாடல் நினைவிற்கு வருகிறது. அருமையான பாடல் அது, எனக்கு மிகவும் பிடிக்கும். எளிமையான வாழ்க்கையில் அத்தனை சுகம்!
நீக்குஆனால் அந்த எளிய வாழ்க்கையை அனுபவிக்க நம்மில் எத்தனை பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறது? எதிலும் அவசரம்.. நிம்மதியாக பாத்ரூம் கூட போக முடியாது.. ஆனால் இந்த அவசர வாழ்க்கையை விட்டும் வர முடியாது.. So sad..
நீக்குநன்றி! :)
பதிலளிநீக்கு