"அவரு ரொம்ப நல்லா எழுதுவாரு, ஆனா, இப்போ எல்லாம் அவரு ப்ளாக்-ல எழுதுறதே இல்ல.. எல்லாம் முகப்புத்தகத்துல தான். இதனால நெறைய பேருக்கு அவர் எழுதுறது சில நேரம் போய்ச் சேரமாட்டிக்குது..", இப்படி நன்றாக எழுதும் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம், நானும் நண்பர் ஒருவரும். உண்மை, கட்டுரைகள் கதைகள், இப்படி எழுதுவது குறைந்து, சிறு சிறு வாசகங்களாக, நக்கல் பேசும் வரிகளாக மாறிவிட்டன இப்போது எழுத்துக்கள் எல்லாம். "சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது", என்பது சிறப்புதான் என்றாலும், விரிவாக ஒன்றை எழுதுவதும் திறமை தானே? சரி, நாம் கதைக்கு வருவோம், ஒருவர் நன்றாக முகநூலில் எழுதுகிறார், அது உங்களுக்குப் பிடித்து இருக்கிறது, உங்கள் வலைப்பூவில் அதைப் போட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இப்படி நான் நினைத்தால், "copy - paste" செய்து, ஒரு இணைப்புக் கொடுத்து இருப்பேன். ஆனால், இதற்கு மாற்றாக ஒரு வழி உள்ளது. நேரடியாக அந்த நபர் முகநூலில் எழுதியதை நீங்கள் அப்படியே உங்கள் வலைப்பூவில் போடலாம். எப்படி? அந்த நபர் எழுதி இருக்கும் பதிவை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, கீழ் வருமாறு செய்யல...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!