முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓசில தோசை!

வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்….

”தமிழ்ல எழுதவே மறந்து போகுமோ!”, என்ற பயமும்; நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரையில் நான் வாசித்த “அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” என்கிற ரஞ்சனி அம்மாவின் மின்-புத்தகமும் தான், நான் இப்போது எதையோ என் கணினியில் கிறுக்க ஆரம்பித்திருக்கக் காரணம்.


Courtesy:  தோசை அம்மா தோசை!

பல மாதங்களுக்கு முன்பே, சொல்லப் போனால், ”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” மின்–புத்தகம் வெளிவந்த அதே நாள், இரவு, டவுன்லோட் செய்துவிட்டேன். “இன்று வாசிப்போம், நாளை வாசிப்போம்”, என்று தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக, FINALLY! நேற்று தான் வாசிக்கத் தொடங்கினேன்! (புத்தகம் வாசிக்கக் கூட நேரமில்லாத அளவு “பிஸி” என்று நினைக்காதீர்கள், சில நாட்களாக, இல்லை, இல்லை, ஒரு வருடமாக, “Time Management” மறந்து, கொஞ்சம் சோம்பேரியாக, படம் பார்த்து, பாட்டுக் கேட்டு, ஆங்கில நாவல்கள் படித்து, சென்னை ஊரை சுற்றிப் பார்த்து, பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்துவிட்டேன். ”எழுத வேண்டும், எழுத வேண்டும்”, என்று நினைத்து நிறைய தலைப்புகளைக் குறித்து வைப்பேன் நாட்குறிப்பில், ஆனால், அவற்றை எழுத நல்ல நேரம் தான் அமையவேயில்லை!)

”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…”, தலைப்பே மிகவும் ஈர்த்துவிட்டது என்னை! வாசிப்பவரை ஈர்ப்பது, முதலில் தலைப்பு தானே! (”ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க”னு தலைப்பு வச்சா தானே நாம வாங்குவோம்?)

ரஞ்சனி அம்மாவின் வலைப்பதிவுகளை அழகாக தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அம்மாவின் அனுபவக் கதைகள் எல்லாம்! அரியலூரில் இருக்கும் அவரின் ”சித்தியா” வீட்டிற்குச் சென்ற அனுபவத்தை வைத்துத் தொடங்குகிறது புத்தகம். மிகவும் ரசித்தேன் அரியலூரில் நண்டு சிண்டுகளோடு வந்த பகுதிகளை.

அடுத்ததாக, ஆங்கில ஆசிரியையாக இருந்த போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு - அடிபொளி! (இந்த வார்த்தை இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.) குறிப்பாக, கொரியன் மாணவர் “சிவப்புப் பொட்டு” பற்றி கேட்டதாக வந்த பகுதியை வாசித்து, சிரித்தேன்! (தென் கொரியா போக வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை, நிறைய கொரியன் படம், தொடர்கள் என்று பார்த்துப் பார்த்து! அதனாலோ என்னவோ, இந்தப் பகுதி மனதில் நன்கு பதிந்துவிட்டது)

பிறகு, விவேகானந்தர் பற்றிய புத்தகம் எழுதிய அனுபவம் குறித்து எழுதி இருந்த பதிவு, ஒரு புத்தகம் எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நாம் எழுதிய புத்தகம் வெளி வரும்போது, என்பது புரிந்தது!

அடுத்து, ”சிமெண்ட் சொம்பு” கதை - Strict மாமியார், பயந்த மருமகள்! சிரித்து ரசித்தேன்.

ஒரு சிலரது எழுத்தைப் படிக்கும் போது தான், நாமும் எழுதினால் என்ன என்று தோன்றும், எனக்கு அம்மாவின் எழுத்தைப் படிக்கும் போது, அப்படி!
நீங்களும் நிச்சயம் சாப்பிடுங்கள், அடுக்கு தோசையை! சுவை அருமை!

இலவசமாக இந்த மின் – புத்தகம், “இங்கு”!

ரொம்ப ரொம்ப நன்றி ரஞ்சனி அம்மா, திரும்ப எழுத வச்சதுக்கு!


I’m back, I’m back! (ஒரு சினிமாப் பாட்டு இருக்கே இப்படி? அதப் போட்டுக்கோங்க BGMக்கு) 

கருத்துகள்

  1. கண்மணி! உண்மையில் இன்று நீ எனக்குக் கண்மணி ஆனாய்! எனது e-book - க்கு உன்னிடமிருந்து விமரிசனம் எதிர்பார்க்காத ஒன்று. ரொம்பவும் ரசித்துப் படித்திருக்கிறாய் என்பது தெரிகிறது. நான் இப்போதிருக்கும் மனநிலையில் இந்த பதிவு தரும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நன்றி கண்மணி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மா :) உங்க புத்தகம் ரொம்ப பிடிச்சதால தான் எழுதுனேன்.

      நீக்கு
  2. பெயரில்லா5/01/2015 8:34 PM

    Supper .May God Bless with Health and Wealth !

    VS Balajee

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...