முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓசில தோசை!

வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்….

”தமிழ்ல எழுதவே மறந்து போகுமோ!”, என்ற பயமும்; நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரையில் நான் வாசித்த “அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” என்கிற ரஞ்சனி அம்மாவின் மின்-புத்தகமும் தான், நான் இப்போது எதையோ என் கணினியில் கிறுக்க ஆரம்பித்திருக்கக் காரணம்.


Courtesy:  தோசை அம்மா தோசை!

பல மாதங்களுக்கு முன்பே, சொல்லப் போனால், ”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” மின்–புத்தகம் வெளிவந்த அதே நாள், இரவு, டவுன்லோட் செய்துவிட்டேன். “இன்று வாசிப்போம், நாளை வாசிப்போம்”, என்று தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக, FINALLY! நேற்று தான் வாசிக்கத் தொடங்கினேன்! (புத்தகம் வாசிக்கக் கூட நேரமில்லாத அளவு “பிஸி” என்று நினைக்காதீர்கள், சில நாட்களாக, இல்லை, இல்லை, ஒரு வருடமாக, “Time Management” மறந்து, கொஞ்சம் சோம்பேரியாக, படம் பார்த்து, பாட்டுக் கேட்டு, ஆங்கில நாவல்கள் படித்து, சென்னை ஊரை சுற்றிப் பார்த்து, பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்துவிட்டேன். ”எழுத வேண்டும், எழுத வேண்டும்”, என்று நினைத்து நிறைய தலைப்புகளைக் குறித்து வைப்பேன் நாட்குறிப்பில், ஆனால், அவற்றை எழுத நல்ல நேரம் தான் அமையவேயில்லை!)

”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…”, தலைப்பே மிகவும் ஈர்த்துவிட்டது என்னை! வாசிப்பவரை ஈர்ப்பது, முதலில் தலைப்பு தானே! (”ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க”னு தலைப்பு வச்சா தானே நாம வாங்குவோம்?)

ரஞ்சனி அம்மாவின் வலைப்பதிவுகளை அழகாக தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அம்மாவின் அனுபவக் கதைகள் எல்லாம்! அரியலூரில் இருக்கும் அவரின் ”சித்தியா” வீட்டிற்குச் சென்ற அனுபவத்தை வைத்துத் தொடங்குகிறது புத்தகம். மிகவும் ரசித்தேன் அரியலூரில் நண்டு சிண்டுகளோடு வந்த பகுதிகளை.

அடுத்ததாக, ஆங்கில ஆசிரியையாக இருந்த போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு - அடிபொளி! (இந்த வார்த்தை இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.) குறிப்பாக, கொரியன் மாணவர் “சிவப்புப் பொட்டு” பற்றி கேட்டதாக வந்த பகுதியை வாசித்து, சிரித்தேன்! (தென் கொரியா போக வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை, நிறைய கொரியன் படம், தொடர்கள் என்று பார்த்துப் பார்த்து! அதனாலோ என்னவோ, இந்தப் பகுதி மனதில் நன்கு பதிந்துவிட்டது)

பிறகு, விவேகானந்தர் பற்றிய புத்தகம் எழுதிய அனுபவம் குறித்து எழுதி இருந்த பதிவு, ஒரு புத்தகம் எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நாம் எழுதிய புத்தகம் வெளி வரும்போது, என்பது புரிந்தது!

அடுத்து, ”சிமெண்ட் சொம்பு” கதை - Strict மாமியார், பயந்த மருமகள்! சிரித்து ரசித்தேன்.

ஒரு சிலரது எழுத்தைப் படிக்கும் போது தான், நாமும் எழுதினால் என்ன என்று தோன்றும், எனக்கு அம்மாவின் எழுத்தைப் படிக்கும் போது, அப்படி!
நீங்களும் நிச்சயம் சாப்பிடுங்கள், அடுக்கு தோசையை! சுவை அருமை!

இலவசமாக இந்த மின் – புத்தகம், “இங்கு”!

ரொம்ப ரொம்ப நன்றி ரஞ்சனி அம்மா, திரும்ப எழுத வச்சதுக்கு!


I’m back, I’m back! (ஒரு சினிமாப் பாட்டு இருக்கே இப்படி? அதப் போட்டுக்கோங்க BGMக்கு) 

கருத்துகள்

  1. கண்மணி! உண்மையில் இன்று நீ எனக்குக் கண்மணி ஆனாய்! எனது e-book - க்கு உன்னிடமிருந்து விமரிசனம் எதிர்பார்க்காத ஒன்று. ரொம்பவும் ரசித்துப் படித்திருக்கிறாய் என்பது தெரிகிறது. நான் இப்போதிருக்கும் மனநிலையில் இந்த பதிவு தரும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நன்றி கண்மணி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மா :) உங்க புத்தகம் ரொம்ப பிடிச்சதால தான் எழுதுனேன்.

      நீக்கு
  2. பெயரில்லா5/01/2015 8:34 PM

    Supper .May God Bless with Health and Wealth !

    VS Balajee

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்