முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 10 ---> சிக்ன(க)ல்



(பாகம் 9 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 9 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க)

"" sir.. நாங்க மித்த lovers மாதிரி ஊர் சுத்தல sir ., உங்களுக்காகவும்
என்னோட parents காகவும் தான் கட்டுப்பாடோட காத்துட்டு இருந்தோம்... இப்போ கூட உங்க சம்மதம் இருந்தா மட்டும் தான் கல்யாணம் நடக்கும்.. யோசிங்க.. இதுக்கு மேல உங்க விருப்பம்.. நான் அடுத்த வாரம் திரும்ப வரேன் sir.. அதுக்குள்ள நீங்க யோசிச்சு பாருங்க... கூட கடைசி வர இருக்க போறது.. அவளும் நானும் தான்.. எங்களுக்கு புடிச்ருக்கு sir.. யோசிங்க.. நான் வரேன் .. sir.. ., போயிட்டு வரேன் சுவாதி., போயிட்டு வரேன் மா..", தன பக்க நியாயம் சொல்லி., சுவாதியின் தாயிடமும் அவளிடமும் இருந்து விடை பெற்றான்..!!!

" நீ எப்போ வந்தாலும் என் முடிவு இது தான் தம்பி.. மாறாது... நீயே கொஞ்ச நாள் போனா மறந்திருவ என் பொண்ண.. அவளும் மறந்திடுவா.. " குமார சாமி கொதித்துப் பேசினார்..

" மறக்க மாட்டோம் sir.. நாங்க மறக்க மாட்டோம்... நான் வரேன்.. நீங்க மனசு மாறுற வரைக்கும் நாங்க காத்திருப்போம்.." கணத்த மனதோடு விடை பெற்றான் கிருஷ்ணா...

" கிருஷ்ணா... இரு... போகாத... அப்பா.. please பா.. கிருஷ்ணா நல்லவன் பா.. என்ன நல்லா பாத்துப்பான்.. please..... அப்பா சரின்னு சொல்லுங்கப்பா... please.... " கண்களில் வெள்ளம் ஓட , தன் தந்தையின் கால்களிலேயே விழுந்திருந்தாள் சுவாதி... 

" கால்ல விழுந்தா.. கரஞ்சிடுவனா.. எனக்கு என் மரியாதை தான் முக்கியம்... " , மகளின் கண்ணீரிலும் கரையவில்லை அவரின் மனம்...

" ஏங்க.. நம்ம பொண்ணு மேல எவ்ளோ பாசம் இருந்தா, அந்தத் தம்பி இவ்ளோ பொறுமையா காத்திருப்பேன்னு சொல்லும்..? நம்ம பொண்ணு இது வர உங்க கால்ல விழுந்துருக்காளா ?? உங்ககிட்ட எதாச்சும் வேணும்னு அடம் புடிச்ருக்காளா.. ? எவ்ளோ நல்ல பொண்ணா ., நம்ம பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாம படிச்சு., இன்னிக்கு நல்ல வேலைலயும் இருக்கா.. ஒத்துகோங்க.. அவ ஆசப் பட்டுக் கேட்டு அடம் புடிக்கிற மொத விஷயமே... இது தான்.. முடியாதுனு சொல்லி இவங்கள நோகடிக்காதிங்க... பாவம்ங்க.. இதுனால நம்ம மரியாதை கொறஞ்சு போகாது... எனக்கும் இந்த தம்பிய ரொம்ப புடிசுருக்குங்க.. " , அதுவரை அமைதியாய் இருந்த சுவாதியின் அம்மா.. கல்யாணி.. மகளின் காதலுக்காக குரல் கொடுத்தாள் கணவனை எதிர்த்து...

எத்தனை பேசியும் அடங்கவில்லை குமார சாமியின் சாதி வெறி..

" ரொம்ப பேசாத.. கல்யாணி..." ; " இது வர என்ன ஒரு வார்த்த எதிர்த்து பேசாத
பொண்ணையும் பொண்டாடியையும்.. எதித்து பேசுற அளவு வந்துட்டாங்க... எல்லாத்துக்கும் காரணம் நீ தான் தம்பி... என் குடும்பத்துல குழப்பம் உண்டு பண்ண வேண்டிக்கிட்டு வந்தியா? என்னால , உனக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க முடியாது... காத்திருந்தா நான் சாகுற வர காத்திருங்க ரெண்டு பெரும்.. போயிட்டு வா நீ இப்போ..." கோவத்தில் கத்தினார் குமார சாமி...

" மனிச்சுடுங்க.. உங்க குடும்பத்துல கொழப்பம் உண்டு பண்ண நான் வரல..., உங்க பொண்ணுக்காக எவ்ளோ நாள் வேணாலும் காத்திருப்பேன்.. உங்க பொண்ணு மனசு வச்சு., சரின்னு சொன்னா. நீங்க யாருக்கு வேணாலும் அவள கல்யாணம் பண்ணிக் குடுங்க.. " ., பொறுமையாக தன் காதலின் ஆழத்தையும்..  நம்பிக்கையையும் வெளிப்படுத்தி., " வரேன் சுவாதி., காத்திருப்போம் நம்ம.. போயிட்டு வரேன்மா.. வரேன் sir..." , கிளம்பினான் கிருஷ்ணா...

" அப்பா... போரான்பா...கிருஷ்ணாவ போக வேணாம்னு சொல்லுங்கப்பா....." , கதறி அழுதாள் சுவாதி...

" என்ன கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு யாராவது பொண்ணு பாக்க வந்தா... சொல்லுவேன்... கிருஷ்ணாவ பத்தி சொல்லுவேன்... அவன தவற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்... உங்க மனசு மாறுற வர காத்திருப்போம்..." அழுதவாறே பேசிவிட்டு அறைக்குள் சென்றாள் சுவாதி...

" ஒரு வருஷம் போனா மறந்துடுவா... வெளில விடாத இவள.. வேலைக்கும் போக வேணாம் எங்கயும் போக வேணாம்.. phone ., computer எதையும் தொட விடாத... பாப்போம் என்ன காத்திருக்காங்கன்னு... " , வீட்டிலேயே பூட்டி வைத்தார் சுவாதியை....

அழுது கொண்டே கடந்தது சுவாதி ., கிருஷ்ணாவின் நாட்கள்.

அது வரை அனுபவித்திராத எரிச்சல் கிருஷ்ணாவின் மனதுள்ளே...

வேலைக்குப் போனாலும் சுவாதியே சிரித்தாள் அவனது கண்ணுக்குள்...

சிரித்து சிரித்தே அவனது நாட்களை சோகமாக மாற்றிக் கொண்டு இருந்தாள்..

கட்டிலில் படுத்து கண்ணீருடனே கடந்தன சுவாதியின் இரவும் பகலும்...!!!


                                                                  ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

காதல் வென்றதா....???!!!!!

காத்திருங்கள்.. அடுத்த பகுதியில் படிக்கலாம்...!!

கருத்துகள்

  1. pothum mudila avanga appa kathaikulla neenga eluthasiriyara kathaila pirikiringa mudila...pls...che ponnada ammana ippadi irukkanum... ponnuna seethaiyaa irukkurathuku ithu onnum ithikasam illa iyalbu so swathiya irukkanum...theliva mudivedukkanum

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்