முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 3 ---> சிக்ன(க)ல்






( முதல் இரண்டு பாகங்கள் படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க., ## தொடர் கதை - பாகம் 1 - சிக்ன(க)ல் !!! ##
## தொடர்கதை ---> பாகம்-2 ---> சிக்ன(க)ல்!!! ##   படித்துவிட்டு , இங்க வாங்க!! )


வெயிலின் கொடுமை சற்று குறைந்திருந்தது, வேகமாக வந்து கொண்டிருந்தான், கிருஷ்ணா தன் பைக்கில் . சிக்னல் அந்த நேரம் சிவப்பைக் காட்ட , நின்றான் !!! சிவப்பு , பச்சையாக மாற., கிருஷ்ணா வேகமெடுத்துக் கிளம்பினான்.,


பச்சை விழுந்ததை கவனிக்காமல்., அந்தப் பக்கம் இருந்து , கைபேசியில் பேசிக் கொண்டே ., சாலையைக் கடந்தாள் ஒரு பெண்., வேகமெடுத்த கிருஷ்ணா அவள் மீது மோதி விழுந்தான்., அவளும் சறிந்தாள்...


"ஏய்.. பாத்து வரது இல்ல..." கத்த நினைத்து அவளைப் பார்த்து நிமிர்ந்த கிருஷ்ணா , வாயடைத்து நின்றான்...


அந்த அழகுப் பதுமையின் அழகில் மயங்கி நின்றான்.,


சிறு காயங்களுடன்., அதிர்ந்து பார்த்தாள் ,அவள் .


" சாரி,  சாரி, சுவாதி , அடிபட்டுடுச்சா..?? " , தவறு அவளுடையது ஆயினும் இவனே மன்னிப்புக் கேட்டான்!!!


ஆம் ,  முதல் சந்திப்பு போலவே இன்றும் சிக்னல் தான் சந்திப்பிற்கு வழி வகுத்து நின்றது..


"அதிக வேகமும், கைபேசியில் பேசுவதும் , சாலையில் ஆபத்து " தான் எனினும்., கிருஷ்ணாவிற்கு அது அதிர்ஷ்டமாகிப் போனது இங்கே..


" சுவாதி hospital  போ மொதல்ல., பாரு அடிபட்ருக்கு ", அவனுக்கு தான் அதிக காயம் என்றாலும்., அவளது சிறு காயங்களே அவனுக்குப் பெரிதாக வலித்தது!!!


" பரவால கிருஷ்ணா., எனக்கு ஒண்ணுல சின்ன scratch  தான்., உனக்கு தான் அடிபட்ருக்கு., நீ hospital  போ " நேரில் முதன் முறை பேசுவதே இருவருக்கும் விபத்தாகிப் போனது.,


"வா நானே hospital கூட்டிட்டு போறேன்., ரெண்டு பேரும் போலாம்" கிருஷ்ணா சுவாதியையும் சேர்த்தே அழைத்துச் சென்றான்.


இருவரும் மருத்துவ மனை சென்றனர்.,


தன்னால் தான் கிருஷ்ணாவுக்கு பலத்த காயம் என்று எண்ணி., அக்கறையுடன் அவனுடன் மருத்துவமனை சென்றாள் சுவாதி..


மருத்துவம் பார்த்து , மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும்.,


 "  உன் வீடு எங்க சொல்லு நானே கொண்டு விடறேன் " 


" இல்ல கிருஷ்ணா உனக்கு அடிபட்ருக்குனு தான் hospital-கே கூட வந்தேன்., நான் பாத்துகறேன்., நீ வீட்டுக்கு போ பரவால" சுவாதி அருகில் இருந்த busstop  செல்ல முயன்ற போது தான் கவனித்தாள் , கையில் இருந்த purse எங்கோ தொலைந்து போய் இருந்ததை.



சுவாதியின் முகம் சுருங்குவதைப் பார்த்தே புரிந்து கொண்டான் கிருஷ்ணா., "என்னாச்சு சுவாதி??! ஏன் பதட்டமா இருக்க??"


"இல்ல., accident-ல purse miss  ஆயட்சு..",இழுத்தாள் சுவாதி


" அதான் நான் கேட்டதுக்கும் வேணாம்னு சொல்லிட்ட, வீட்ல கொண்டு பொய் விடறேன் வா.,"


தயங்கினாள் சுவாதி " இவனோடு வீடு வரை செல்வது ..." ,


செல்வதா வேண்டாமா என்று பெரிய போராட்டமே நடந்தது மனதில் !!!


                                                       ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


சென்றாளா சுவாதி??? படிக்க நாளை வாங்க 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....