முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 6 ---> சிக்ன(க)ல்






(பாகம் ஐந்து படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 5 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)


பதற்றத்தோடு அவளின் கண்களின் பிரகாசத்தில் கூசி நின்றான்..


சுவாதி , " என்ன கிருஷ்ணா? என்னவோ பேசணும்னு, எதுவும் சொல்லாம இருக்ற...??? "


"அது.. இல்ல, இல்ல... சுவாதி .. நீ தப்பா எடுத்துக்க கூடாது...??? " என்று வார்த்தைகளை தெருவோரம் சவ் மிட்டாய் விற்கும் வியாபாரி போல இழுத்து மென்று விழுங்கிக் கொண்டு இருந்தான்...


ஆணையும் இலக்கி., பதற்றம் தந்து., நாண வைக்கும் சக்தி , காதலுக்குத் தான் இருக்கிறது என்று முழுதாய் உணர்ந்து நின்றான்..


இழுத்ததிலேயே... லேசாகப் புரிந்தது போல் உணர்ந்தாள் சுவாதி..


"சொல்லு தப்பா எடுத்துக்க மாட்டேன்..? என்ன கிருஷ்ணா.. லேட் ஆகுது எனக்கு.." 


" இரு சுவாதி சொல்லிடறேன் ." கிருஷ்ணா பதறினான்.


நடுவே புகுந்தாள் busstop சென்றிருந்த சுவாதியின் தோழி..


" ஏ சுவாதி எங்க அப்பா phone பண்றாங்க, சீக்ரமா வீட்டுக்கு நான் போகணும்.. வா.. late ஆகுது எனக்கு.."


" சாரி கிருஷ்ணா... நான் கெளம்பனும்., நீ என்னனு text பண்ணறப்போ சொல்லு., bye.."


 " சுவாதி ... சுவாதி இரு.. என் gift வாங்கிட்டுப் போ... " கத்தியவாறே ஓடிச் சென்று அவன் வாங்கி வந்த பரிசுப் பொட்டலத்தை
அவளிடம் கொடுத்தான்...


அவளும் " ok கிருஷ்ணா bye " என்று அவசரமாகக் கிளம்பினாள்.


சுவாதி தூரத்தில் சென்று மறையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான் கிருஷ்ணா.


பார்ப்பதில் மட்டும் கூட., அத்தனை சுகம் கிடைக்கும் என்று அன்று தான் உணர்ந்திருந்தான் அவன் .


அவள் சென்று மறைந்ததும்.,அவள் தந்த பரிசைப் பிரிக்க நினைத்தான்..


ஆர்வம் கொப்பளிக்க அங்கேயே பிரித்து விட்டான்...


அவன் எதிர் பார்த்தது போல., கடிகாரமோ.,பொம்மையோ., show piece- ஒ இல்லாமல் புத்தகம் பரிசளித்து இருந்தாள் சுவாதி..


புத்தகத்தின் பெயரே விநோதமாக இருந்தது கிருஷ்ணாவிற்கு.,


" உஷார் உள்ளே பார் !!! " எழுதியது சோம வள்ளியப்பன். 


" Happy birhtday krish.,
 I know , you don't have the habit of reading., 
this book will be useful.,  
please do read , just for me - with love  shwathi. " என்று கையொப்பம் இட்டிருந்தாள் சுவாதி.


எழுதி இருந்த எல்லா வார்த்தைகளை விடவும் " love" என்ற வார்த்தை அவனை இமயம் சேர்த்திருந்தது அந்த நொடியில்., குதித்தான் சந்தோஷத்தில்


எல்லா விஷயத்திலும் சற்று வித்தியாசமாகத் தோன்றினாள் சுவாதி அந்நேரம் அவனுக்கு.


பூங்கொத்து., பொம்மை., show piece என்று கொடுக்கும் காலத்தில்., தன் மீது அக்கறையோடு , தன் நன்மைக்கு என்று புத்தகம் பரிசளித்த சுவாதி உயர்ந்து நின்றாள் ஒரு கணம்.


                                                         ----------------------------


சுவாதி பேருந்தில்.,


ஆர்வத்தோடு பிரித்தாள் கிருஷ்ணாவின் பரிசை..


ஊஞ்சலில் ஆடும் பெண்ணை ., தாலாட்டுகிறான் காதலன் முத்தமிட்டவாறே., கீழே " love" என்று எழுதி இருந்தது .


புரிந்தது சுவாதிக்கு பளீரென.


தோழியும் இதை கவனித்து விட., " பாத்து சுவாதி., கிருஷ்ணா gift என்னவோ சரியா படல.. ", என்றாள் .


" ம்ம் நான் பாத்துகறேன்.." , என்று முகத்தில் எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி இருந்த சுவாதியின் மனதை தோழியாலும் கணிக்க இயலவில்லை....


பெண்ணின் மனம் பெண்ணிற்கும் புரியவில்லை...


புரியாத பெரும் புதிராக இருந்தது.. சுவாதியின் மனம்..


--- காதலோ இது???


                                                   ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥






சுவாதி கிருஷ்ணாவிடம் எவ்வித உணர்ச்சியை வெளிப்படுத்தினாள் ???


படிக்க நாளை இரவு வரை காத்திருங்கள்...


கருத்துகள்

  1. கிருஷ்ணாவிட நீங்கதான் அந்த சவ்வு மிட்டாய் உவமைக்கு போருத்தமனவங்க..please write it quicly...

    பதிலளிநீக்கு
  2. பெண்ணின் மனம் பெண்ணிற்கும் புரியவில்லை....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக