முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 6 ---> சிக்ன(க)ல்






(பாகம் ஐந்து படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 5 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)


பதற்றத்தோடு அவளின் கண்களின் பிரகாசத்தில் கூசி நின்றான்..


சுவாதி , " என்ன கிருஷ்ணா? என்னவோ பேசணும்னு, எதுவும் சொல்லாம இருக்ற...??? "


"அது.. இல்ல, இல்ல... சுவாதி .. நீ தப்பா எடுத்துக்க கூடாது...??? " என்று வார்த்தைகளை தெருவோரம் சவ் மிட்டாய் விற்கும் வியாபாரி போல இழுத்து மென்று விழுங்கிக் கொண்டு இருந்தான்...


ஆணையும் இலக்கி., பதற்றம் தந்து., நாண வைக்கும் சக்தி , காதலுக்குத் தான் இருக்கிறது என்று முழுதாய் உணர்ந்து நின்றான்..


இழுத்ததிலேயே... லேசாகப் புரிந்தது போல் உணர்ந்தாள் சுவாதி..


"சொல்லு தப்பா எடுத்துக்க மாட்டேன்..? என்ன கிருஷ்ணா.. லேட் ஆகுது எனக்கு.." 


" இரு சுவாதி சொல்லிடறேன் ." கிருஷ்ணா பதறினான்.


நடுவே புகுந்தாள் busstop சென்றிருந்த சுவாதியின் தோழி..


" ஏ சுவாதி எங்க அப்பா phone பண்றாங்க, சீக்ரமா வீட்டுக்கு நான் போகணும்.. வா.. late ஆகுது எனக்கு.."


" சாரி கிருஷ்ணா... நான் கெளம்பனும்., நீ என்னனு text பண்ணறப்போ சொல்லு., bye.."


 " சுவாதி ... சுவாதி இரு.. என் gift வாங்கிட்டுப் போ... " கத்தியவாறே ஓடிச் சென்று அவன் வாங்கி வந்த பரிசுப் பொட்டலத்தை
அவளிடம் கொடுத்தான்...


அவளும் " ok கிருஷ்ணா bye " என்று அவசரமாகக் கிளம்பினாள்.


சுவாதி தூரத்தில் சென்று மறையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான் கிருஷ்ணா.


பார்ப்பதில் மட்டும் கூட., அத்தனை சுகம் கிடைக்கும் என்று அன்று தான் உணர்ந்திருந்தான் அவன் .


அவள் சென்று மறைந்ததும்.,அவள் தந்த பரிசைப் பிரிக்க நினைத்தான்..


ஆர்வம் கொப்பளிக்க அங்கேயே பிரித்து விட்டான்...


அவன் எதிர் பார்த்தது போல., கடிகாரமோ.,பொம்மையோ., show piece- ஒ இல்லாமல் புத்தகம் பரிசளித்து இருந்தாள் சுவாதி..


புத்தகத்தின் பெயரே விநோதமாக இருந்தது கிருஷ்ணாவிற்கு.,


" உஷார் உள்ளே பார் !!! " எழுதியது சோம வள்ளியப்பன். 


" Happy birhtday krish.,
 I know , you don't have the habit of reading., 
this book will be useful.,  
please do read , just for me - with love  shwathi. " என்று கையொப்பம் இட்டிருந்தாள் சுவாதி.


எழுதி இருந்த எல்லா வார்த்தைகளை விடவும் " love" என்ற வார்த்தை அவனை இமயம் சேர்த்திருந்தது அந்த நொடியில்., குதித்தான் சந்தோஷத்தில்


எல்லா விஷயத்திலும் சற்று வித்தியாசமாகத் தோன்றினாள் சுவாதி அந்நேரம் அவனுக்கு.


பூங்கொத்து., பொம்மை., show piece என்று கொடுக்கும் காலத்தில்., தன் மீது அக்கறையோடு , தன் நன்மைக்கு என்று புத்தகம் பரிசளித்த சுவாதி உயர்ந்து நின்றாள் ஒரு கணம்.


                                                         ----------------------------


சுவாதி பேருந்தில்.,


ஆர்வத்தோடு பிரித்தாள் கிருஷ்ணாவின் பரிசை..


ஊஞ்சலில் ஆடும் பெண்ணை ., தாலாட்டுகிறான் காதலன் முத்தமிட்டவாறே., கீழே " love" என்று எழுதி இருந்தது .


புரிந்தது சுவாதிக்கு பளீரென.


தோழியும் இதை கவனித்து விட., " பாத்து சுவாதி., கிருஷ்ணா gift என்னவோ சரியா படல.. ", என்றாள் .


" ம்ம் நான் பாத்துகறேன்.." , என்று முகத்தில் எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி இருந்த சுவாதியின் மனதை தோழியாலும் கணிக்க இயலவில்லை....


பெண்ணின் மனம் பெண்ணிற்கும் புரியவில்லை...


புரியாத பெரும் புதிராக இருந்தது.. சுவாதியின் மனம்..


--- காதலோ இது???


                                                   ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥






சுவாதி கிருஷ்ணாவிடம் எவ்வித உணர்ச்சியை வெளிப்படுத்தினாள் ???


படிக்க நாளை இரவு வரை காத்திருங்கள்...


கருத்துகள்

  1. கிருஷ்ணாவிட நீங்கதான் அந்த சவ்வு மிட்டாய் உவமைக்கு போருத்தமனவங்க..please write it quicly...

    பதிலளிநீக்கு
  2. பெண்ணின் மனம் பெண்ணிற்கும் புரியவில்லை....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்