(பாகம் ஐந்து படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 5 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)
பதற்றத்தோடு அவளின் கண்களின் பிரகாசத்தில் கூசி நின்றான்..
சுவாதி , " என்ன கிருஷ்ணா? என்னவோ பேசணும்னு, எதுவும் சொல்லாம இருக்ற...??? "
"அது.. இல்ல, இல்ல... சுவாதி .. நீ தப்பா எடுத்துக்க கூடாது...??? " என்று வார்த்தைகளை தெருவோரம் சவ் மிட்டாய் விற்கும் வியாபாரி போல இழுத்து மென்று விழுங்கிக் கொண்டு இருந்தான்...
ஆணையும் இலக்கி., பதற்றம் தந்து., நாண வைக்கும் சக்தி , காதலுக்குத் தான் இருக்கிறது என்று முழுதாய் உணர்ந்து நின்றான்..
இழுத்ததிலேயே... லேசாகப் புரிந்தது போல் உணர்ந்தாள் சுவாதி..
"சொல்லு தப்பா எடுத்துக்க மாட்டேன்..? என்ன கிருஷ்ணா.. லேட் ஆகுது எனக்கு.."
" இரு சுவாதி சொல்லிடறேன் ." கிருஷ்ணா பதறினான்.
நடுவே புகுந்தாள் busstop சென்றிருந்த சுவாதியின் தோழி..
" ஏ சுவாதி எங்க அப்பா phone பண்றாங்க, சீக்ரமா வீட்டுக்கு நான் போகணும்.. வா.. late ஆகுது எனக்கு.."
" சாரி கிருஷ்ணா... நான் கெளம்பனும்., நீ என்னனு text பண்ணறப்போ சொல்லு., bye.."
" சுவாதி ... சுவாதி இரு.. என் gift வாங்கிட்டுப் போ... " கத்தியவாறே ஓடிச் சென்று அவன் வாங்கி வந்த பரிசுப் பொட்டலத்தை
அவளிடம் கொடுத்தான்...
அவளும் " ok கிருஷ்ணா bye " என்று அவசரமாகக் கிளம்பினாள்.
சுவாதி தூரத்தில் சென்று மறையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான் கிருஷ்ணா.
பார்ப்பதில் மட்டும் கூட., அத்தனை சுகம் கிடைக்கும் என்று அன்று தான் உணர்ந்திருந்தான் அவன் .
அவள் சென்று மறைந்ததும்.,அவள் தந்த பரிசைப் பிரிக்க நினைத்தான்..
ஆர்வம் கொப்பளிக்க அங்கேயே பிரித்து விட்டான்...
அவன் எதிர் பார்த்தது போல., கடிகாரமோ.,பொம்மையோ., show piece- ஒ இல்லாமல் புத்தகம் பரிசளித்து இருந்தாள் சுவாதி..
புத்தகத்தின் பெயரே விநோதமாக இருந்தது கிருஷ்ணாவிற்கு.,
" உஷார் உள்ளே பார் !!! " எழுதியது சோம வள்ளியப்பன்.
" Happy birhtday krish.,
I know , you don't have the habit of reading.,
this book will be useful.,
please do read , just for me - with love shwathi. " என்று கையொப்பம் இட்டிருந்தாள் சுவாதி.
எழுதி இருந்த எல்லா வார்த்தைகளை விடவும் " love" என்ற வார்த்தை அவனை இமயம் சேர்த்திருந்தது அந்த நொடியில்., குதித்தான் சந்தோஷத்தில்
எல்லா விஷயத்திலும் சற்று வித்தியாசமாகத் தோன்றினாள் சுவாதி அந்நேரம் அவனுக்கு.
பூங்கொத்து., பொம்மை., show piece என்று கொடுக்கும் காலத்தில்., தன் மீது அக்கறையோடு , தன் நன்மைக்கு என்று புத்தகம் பரிசளித்த சுவாதி உயர்ந்து நின்றாள் ஒரு கணம்.
----------------------------
சுவாதி பேருந்தில்.,
ஆர்வத்தோடு பிரித்தாள் கிருஷ்ணாவின் பரிசை..
ஊஞ்சலில் ஆடும் பெண்ணை ., தாலாட்டுகிறான் காதலன் முத்தமிட்டவாறே., கீழே " love" என்று எழுதி இருந்தது .
புரிந்தது சுவாதிக்கு பளீரென.
தோழியும் இதை கவனித்து விட., " பாத்து சுவாதி., கிருஷ்ணா gift என்னவோ சரியா படல.. ", என்றாள் .
" ம்ம் நான் பாத்துகறேன்.." , என்று முகத்தில் எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இன்றி இருந்த சுவாதியின் மனதை தோழியாலும் கணிக்க இயலவில்லை....
பெண்ணின் மனம் பெண்ணிற்கும் புரியவில்லை...
புரியாத பெரும் புதிராக இருந்தது.. சுவாதியின் மனம்..
--- காதலோ இது???
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
சுவாதி கிருஷ்ணாவிடம் எவ்வித உணர்ச்சியை வெளிப்படுத்தினாள் ???
படிக்க நாளை இரவு வரை காத்திருங்கள்...
கிருஷ்ணாவிட நீங்கதான் அந்த சவ்வு மிட்டாய் உவமைக்கு போருத்தமனவங்க..please write it quicly...
பதிலளிநீக்குபெண்ணின் மனம் பெண்ணிற்கும் புரியவில்லை....
பதிலளிநீக்கு