முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒத்தப்பட்டியை நோக்கி....!!!!



சுள்ளி கொளுத்தி,
சுற்றி அமர்ந்து ,
சுகமாய் விளையாடும் சிறுவர்கள்!!!

கிண்டிக் கிளறி .,
கொக்கரித்து ஓடும்.,
பெட்டைக் கோழிகள்!!!

குச்சிகளை நட்டி.,
குறைந்த செலவில்.,
" ஸ்டெம்ப் " செய்து விளையாடும்.,
கிரிக்கெட் சிறுசுகள்!!!

கிழிந்த அழுக்குக்
கைலி கட்டி.,
"ஹெட் போனில்" பாட்டுக் கேட்கும்.,
இளசுகள்!!!

சாக்கடை மேட்டில் .,
சுத்தம் அடையும்.,
பத்துப் பாத்திரமும்.,
பாமர அம்மாக்கள்!!!

பக்கத்தில் அமர்ந்து.,
"பீடி" ஊதிக் கொல்லும்.,
ஐயப்ப பக்தர்கள்!!!

" மொபைல் போன் " டவரில் ,
" ம்யூஸிக் " வாசிக்கும்.,
மைனாக்கள்., குருவிகள்!!!

மயான பூமியில்.,
கழுகுக்கு பதிலாய்.,
வெள்ளைக் கொக்குகள்!!!

கோவில் கண்ணாடியில்.,
விபூதி அழகு பார்க்கும்.,
பள்ளிச் சிறுவர்கள்!!!

போட்டி போட்டு.,
பந்தயம் ஓடும்.,
மாட்டு வண்டிகள்!!!

பாட்டியே வடை சுட்டு
விற்கும்.,
பெட்டிக் கடைகள்!!!

ஓடி வரும்.,
கழிவு நீருடன் ,
காட்டு ஆறுகள்!!!

பச்சையாய் பூமி.,
மாறிக் கிடக்கும்.,
வயக்காடுகள்!!!!

அவசரமாய்.,
"பம்ப் செட்டை"
சாலை ஓரச்
சுவரில் திறக்கும்.,
சுட்டிச் சிறுவர்கள்!!!

எல்லா இடத்திலுமே.,
கொட்டிக் கிடக்குது.,
கோடி அழகுகள்!!!

யாவையும் அழகாய்
காட்டித் தொலைகிறது.,
ரசிக்க விழைகிறது.,
இந்தப் பேதையின் கண்கள்!!!



கருத்துகள்

  1. அடடா!
    ரசிக்க வைக்கும் காட்சிகள்;
    அதை அழகு படுத்தும் வரிகள்...!

    நல்ல படைப்பு!

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. :) :) நன்றி.. கத்துக் குட்டி நான் !!!

    பதிலளிநீக்கு
  3. Congrats for Displaying beautiful scenery in beautiful sentences.Thank U

    பதிலளிநீக்கு
  4. ஒத்தப்பட்டிக்குச்(மம்சாபுரம் அருகில் உள்ள ஒத்தப்பட்டி தான் என நினைக்கிறேன்) சென்றிருந்தும் நான் உற்று நோக்காத காட்சிகள் தங்கள் பார்வையில் கவிதை வடிவில்.... நன்று.... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. @@ கார்த்திகேயன் , மம்சாபுரம் எனக்குத் தெரியாது :) ஆனால் இந்த ஒத்தப்பட்டி மதுரை செல்லும் வழியில் உள்ளது. மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோ, ஒரே மாதிரி பெயர் இருந்ததால் அதுவென்று நினைத்துவிட்டேன்... கிராமங்கள் என்றாலே அழகு தான்.... நன்றி....

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்