முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் முதல் காதல்!


எப்படி இப்படி ஒரு காதல் வந்ததென்று, வியக்க அவசியமில்லை.
சிறு வயது முதலே உன்மீது எனக்குக் காதல் இருந்தது உள்ளூரே!

எல்லாத் தந்தையையும் போல, என் தந்தைக்கும் என் காதலில் நம்பிக்கை இல்லை.

இந்தக் காதல் என் வாழ்வை நன்றாக அமைக்குமோ? தயக்கம் கொண்டார்.
வேறு ஒரு காதலைக் கை காட்டி, காதலி என்றார்.

தந்தையிடம் வாதாடி, தோற்றுத் தான் போனேன்.
அவர் கை காட்டியதையே காதலித்தேன். காதலிக்கிறேன் இன்றும்.
"விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை விரும்ப கற்றுக் கொள்ள வேண்டும்", யாரோ சொன்னதாய் நினைவு.
சரியாகப் பின்பற்றினேன் இதை.

இருப்பினும், என் முதல் காதல், நான் நேசித்து சுவாசித்து, உருகி ஏங்கிய காதல்! புத்தியில் அது மறைந்து போய் இருந்தாலும், மனதில் நீங்காது இருந்து வந்தது! பழைய காதலை எண்ணி ஏங்கிய இரவுகள் மிக நீளமானவை.

அன்று இரவு, தோன்றியது, எப்படியேனும் என் முதல் காதலில் வென்றிட வேண்டும். எனக்குப் பிடித்தது, நான் நேசித்தது. எனக்கு நிச்சயம் வேண்டும்! மனம் முழங்கியது.

இன்று வழி கண்டேன்,
இளங்கலை தமிழ் படிக்க முடிவு செய்துள்ளேன் :)

என் முதல் காதல், தமிழ் படிக்க வேண்டும் என்பது.


தந்தையோ, "தொழில் நுட்பம் படி" என்றார். வாழ்வு சிறக்கும், நிறைய புதியதாய் கண்டுபிடிக்கலாம். உயிரியல் தொழில்நுட்பம் படிக்கிறேன் இன்று.
அருமையான தொழில்நுட்பம் தான். மிகவும் பிடித்துள்ளது தான்.
ஆயினும், என் முதல் காதல் போல் வருமா? என் தமிழை நான் நேசித்துப் படிப்பது போல வருமோ?

ஆகையால், இளங்கலை - தமிழ் - அஞ்சல் வழிக் கல்வி - முடிவு செய்து விட்டேன்.

என் காதல், என் கையில்!
மிகுந்த மகிழ்ச்சி!

பிடித்ததைப் படிக்க முடியவில்லை, பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்,
சோர்ந்து போக வேண்டாம்! நீங்கள் நினைத்தால், ஏதேனும் ஒரு வழியில் நிச்சயம் உங்கள் காதலை அடையலாம்!

லட்சியம் அடைய வாழ்த்துக்கள்!

கருத்துகள்

  1. நல்ல வழி . அருமையான முடிவு. எனக்கும் படிக்கும் ஆசை வந்து விட்டது. நன்றி தங்கையே :) வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா, சேந்து படிக்கலாம் நாம!

      நீக்கு
  2. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. very nice!

    //என் காதல், என் கையில்!
    மிகுந்த மகிழ்ச்சி!//
    காதல் இனிதே அமைய
    வாழ்த்துக்கள் சகோதரி...காதல் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்