முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவுக் கணவன்!


நீயும் நானும்!

நான், நாள் முழுக்க நடந்ததை,
இரவெல்லாம் கதையாய்ச் சொன்னால்,
"ஏன் இப்டி படுத்துற?" செல்லமா மிஞ்சி,
காதலோட கேக்கணும்!

நான் எழுதிய கவிதையெல்லாம்,
வாசிச்சு வாசிச்சுக் காட்டினா,
சலிப்புப் பார்வை பாக்றது போல,
தேவதையாப் பாக்கணும்!

வேலைக்குப் போயிட்டு வீடு வந்தா,
என்னோட கண்ணாமூச்சி ஆடனும்,
கண்டுபுடிச்சதும் சீண்டணும்,
அள்ளி உப்பு மூட்ட தூக்கணும்!

தப்புத் தப்பா செஞ்சு நின்னா,
தட்டி நாலு போடணும்,
சண்டைபோட்டுத் திட்டணும்,
என்ன அழ வைக்கணும்!

அழுது ஒரு நாள் முழுக்க,
சோகமா நானிருக்கணும்,
நாள் முடிவுல நீ வரக்குடாது,
நான் தான் மனிப்புக் கேட்கணும்!

உன் மேல தப்புன்னு,
நான் சண்ட போட்டா,
நீ, "என் தப்பு தான்டா.."
செல்லமா மன்னிப்புக் கேக்கணும்!

எனக்குக் காய்ச்சல்னா,
உனக்குப் பாதி தருவேன்,
உனக்குக் காய்ச்சல்னா,
எனக்கு நீ பாதி தரணும்!

என்னையே சுத்துற,
நாய்க்குட்டி போல இருக்கக் கூடாது,
கோபத்தைக் கொட்டுற,
எரிமலையா இருக்கக் கூடாது!

உள்ளே பாசம் இருக்கணும்,
வெளியே காட்டாம நடிக்கணும்,
நடிக்றதும் முழுசா தெரியாம,
என்னப் பாத்து சிரிக்கணும்!

நல்ல படிப்பு வேணும்,
நல்ல அறிவு வேணும்,
நாட்டு மேல கூட,
கொஞ்சம் காதல் வேணும்!

அம்மா அப்பாப் பாசம்,
நிறைய நிறைய வேணும்,
அவங்களுக்கு அடுத்துதான்,
மனைவினு நெனப்பும் வேணும்!

காதலிக்கும் நேரமெல்லாம்,
குழந்த போல இருக்கணும்,
என்னப் போல இல்லாம,
எனக்கு எதிரா இருக்கணும்!

ஓட்ட வாய் நான்,
பேசவே குடாது நீ,
தொட்டாச் சிணுங்கி நான்,
இரும்பா இருக்கணும் நீ!

பேரழகனா வேண்டாம்,
பணக்காரனா வேண்டாம்,
நல்லவனாப் போதும்,
என் மனசத் தெரிஞ்சவனா வேணும்!

சொன்னா சொல்லுவேன்,
நாள் முழுக்க,
அப்பா பாத்தா,
அடி விழுமுங்க!
:D :) :P ♥ 

கருத்துகள்

  1. எனக்குக் காய்ச்சல்னா,
    உனக்குப் பாதி தருவேன்,
    உனக்குக் காய்ச்சல்னா,
    எனக்கு நீ பாதி தரணும்!

    Seekram oru nalla kanavan kidaika vaazthukkal sagothari :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நான் யாரோன்னு நெனச்சேன், தீபக் கார்த்திக் நீங்க தானா இது. மிக்க நன்றி :)

      நீக்கு
  2. very nice. நான் எதிர் பார்த்த கவிதைகளுள் ஒன்று. நான் விரும்பிய கவிதை. அருமையான கவிதை. இப்படியொரு கவிதை கொடுத்ததுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்