முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊருக்காக - சிறுகதை.

அந்தப் பெரிய மனிதர் தான், ஊரில் எல்லாக் காரியத்திற்கும் முன் நிற்பார்.
கோயில் திருவிழா, சுதந்திர தின விழா, தெருக்கெட்டுப் பொங்கல், இப்படி எல்லாவற்றிர்க்கும் அவர் தான் முன் நிற்பார்.

ஒவ்வொரு விழாவிலும் அவரது பேச்சு நிச்சயம் இருக்கும், மேடையில் அருமையாகப் பேசுவார்.

"சாதிகள் இல்லை, நாம் அனைவரும் ஒரு தாய்ப் பிள்ளைகள், ஒற்றுமையாக இருக்க வேண்டும்...", இதுவே அவரது பேச்சின் மையக் கருத்தாக இருக்கும்.

அன்றும் ஒரு மேடையில் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

அவரது மனைவியும் மகனும் பெருத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அதை அவர் தடுக்கவும் இல்லை, சண்டையில் பங்கெடுக்கவும் இல்லை. மாறாய் புலம்பத் தொடங்கி விட்டார். வெளியே தான் பேசுவார் அந்தப் பெரிய மனிதர், வீட்டிற்குள் நுழைந்ததும் புலம்பல் தான். தன் மகன் தன்னைப் போல பெரும் புகழோடு வரமாட்டான், படிப்பில் அவன் மோசம் என்று புலம்பத் தொடங்கி விடுவார்.

"படிக்காத முட்டாளா, வியாபாரம் செய்றான் அவன், அவன் மகனெல்லாம் படிக்கிறான் நல்லா.. ஆனா.. என் புள்ள..", இப்படி அடுத்தவனை நினைத்து நினைத்தே புலம்பிக் கொண்டிருப்பார்.

அவருக்கு ஒரு மகளும் இருந்தாள், சுட்டிப் பெண், அழகி, பார்த்தவுடன் யாருக்கும் அவளைப் பிடித்து விடும்.

வயது இருபது. திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன அவளுக்கு.

"என்ன, உங்க பொண்ணுக்கு இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் வச்சுட்டிங்க..?" இப்படி பார்ப்பவர்கள் எல்லாம் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

"நல்ல பையன், அதான்.." என்று தன் மாப்பிள்ளையின் பெருமை பேச ஆரம்பித்து விடுவார் உடனே அவர்.

மணப்பெண்
திருமணம் முடிந்தது நல்ல விதமாக. அவரது மகள் அவ்வளவு அழகாக இருந்தாள் அந்தக் கல்யாணக் கோலத்தில்.

திருமணம் முடிந்ததும், அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தார்கள் மாப்பிள்ளையும் மகளும்.
வழக்கம் போல ஒருவர், "ஏன் இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் வச்சிட்டிங்க..", என்று அந்நேரம் கேட்டுக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதரிடம்.
அந்தப் பெரிய மனிதரும் பதிலாகச் சொல்லிக் கொண்டு இருந்தார் மாப்பிள்ளையின் பெருமைகளை.

அங்கு வந்த மாப்பிள்ளைக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது தன் மாமனார் தன்னைப் பற்றி மற்றவரிடம் புகழ்ந்து சொல்வதைக் கேட்க.

மகள் நினைத்துக் கொண்டாள் மனதிற்குள், "என் காதலன் வேற சாதி.. அதான் எங்க சாதிப் பையனோட, சீக்கிரமா எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு..!"

----------------------------------------------------------------------

இதோ ஊருக்காகத் தான் பேசினார் இவர், "சாதிகள் இல்லை.." என்று.

இதோ அதே ஊருக்காகத் தான், ஊர் தவறாகப் பேசும் என்று தான், "சாதிக்கு முக்கியத்துவம்" கொடுக்கிறார்.

சாதிகள் இல்லையடி பாப்பா???

கருத்துகள்

  1. செருப்பால அடிக்குற மாதிரி ஒரு கதை... செருப்பால அடிச்சும் துடசுக்குற சிலருக்கு புரியுமா தெரியல :(

    பதிலளிநீக்கு
  2. kavi bharathi6/17/2012 12:07 AM

    நீங்கள் சாதி பார்த்து தான் காதல் செய்வீர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிக் காதலிப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

      நீக்கு
  3. kavi bharathi6/17/2012 12:09 AM

    கனவாகிப்போன காதல்!!!!!

    உன்னை பார்த்த முதல் கணமே,
    உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ...
    உன் மீன் போன்ற விழிகளால் வலை
    விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்...
    உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ...
    இமை மூட பயந்தேன் , .
    நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்...

    உன்னை பார்த்த நிமிடங்களை ,
    பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்..
    உன்னை காணாத நொடிகளை,
    நகர்த்த முயற்சி செய்தேன்...

    உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு,
    கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ...
    என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா?
    என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் ..

    நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்..
    இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன்,
    உன்னில் உயிராக வாழ ...

    உன்னை விட்டு பிரிய போகிறேன்
    உன் அனுமதியின்றி கண்ணீருடன் ,
    உன் நினைவுகளை உன்னிடம் கடனாக பெற்று..

    .காரணம் கேட்காதே ...
    இது விதியின் வஞ்சனை,...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கவிதை. கதையை வாசித்தமைக்கு நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்