முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் வாழும் நிச்சயமாக! ஆனால் தமிழர் கலாச்சாரம்?


நமது தமிழ் சூரியன் போல. புயல் அடிப்பதால் சூரியன் அணைவதில்லை பாருங்கள்.

"உணவுப் பழக்கம், உடை உடுத்துவது, விருந்தோம்பல், தமிழ் பெண்களுக்கே உரிய நாணம்?" இப்படி ஒவ்வொன்றிலும் தனித்துவம் வாய்ந்தவர்கள் நாம்!

ஆனால் இன்று? நமது தனித்துவம் மறைந்து வருவது கண்கூடாகத் தெரியுதே? எல்லாவற்றிலும் கலப்பு! உடுப்பு, படிப்பு, இப்படி எல்லாவற்றிலும் ஆங்கில வாசனை நுகர்ந்தே சுகம் கண்டு பழகிவிட்டோம்!

கூட்டுக் குடும்பங்கள் கரைந்து போய் விட்டன;
பாட்டிக் கதைகள் முதியோர் இல்லம் அடைந்தன!
விருந்தோம்பல் பசியால் மெலிந்து போயிற்று!
பெண்மையின் நாணம் கூட நாணி நாணி மறைந்து போய்விடும் போல!
எறும்புகள் பசியாற முற்றத்தில் கோலமிட்ட நம் ஈகை உள்ளம் இன்று சுருங்கிப் போனதேனோ? அர்த்தம் நிறைந்தவை நமது முன்னோர்களின் பழக்கங்கள் எல்லாம். அர்த்தமற்றவையாய் மாற்றிவிட்டோமே?

எழுதும் எழுத்தில், கவிதையோ கதையோ, ஆங்கிலம் கலந்தால் தான் இணையத்தில் விருப்பங்கள் அதிகம் கிடைக்கிறது!

ஆங்கிலமும் ஆங்கிலேயரும் நமக்கு எதிரிகள் அல்ல! ஆனால், நம் மொழியையும், கலாச்சாரத்தையும் நமக்கு எதிரி போல எண்ணுவது, தவறல்லவோ?

"காலத்திற்கேற்ப மாற்றம் தேவை தான். ஆயினும் இப்படிப்பட்ட மாற்றங்கள் நமது தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அவசியமானதா?"

இதை உங்களிடம் நீங்களே இருமுறை கேட்டுப்பாருங்கள். மாற்றம் என்னிடமும், உங்களிடமும் இருந்து பிறக்கட்டுமே?

கருத்துகள்

  1. SUjatha oru katturai gyabagathukku varuthu...
    Tamil kalachaaram ah ? mudhalla tamilar gal irukangala nu paarunga...
    Online la tamil iruppathe intha maaro blogs la than theriyuthu..
    Aporam, neenga solra maari kalacharam kai vitttu poitu than irukku, 1st century la vaztha maari ippo namma vazhrathu illa..

    munnetram ngra name la namma romba fast ah alinjitu varom ngrathu oru kasappana unmai...

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான். மாற்றம் உயர்வுப் பாதையை நோக்கி இல்லை, மாறாக அழிவை நோக்கிச் செல்கிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உங்களை சகோ சீனு வலைச் சரத்தில் அறீமுகம் செய்துள்ளார் , பார்க்க :
    http://blogintamil.blogspot.in/2013/02/tamil-bloggers-3.html

    பதிலளிநீக்கு
  4. ஆங்கிலமும் ஆங்கிலேயரும் நமக்கு எதிரிகள் அல்ல! ஆனால் அவை இரண்டும் நம் தமிழை நமக்கு எதிரியாக மாற்றி விட கூடாது.. நல்ல கருத்து.. (எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்....)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்