முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குப்பை - சிறுகதை

அந்த இரண்டு சிறுவர்களும்  விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த தெருவோரக் குப்பைத் தொட்டி தான் அவர்களுக்கு விளையாட்டு மைதானம்! அழுக்கு உடையும், பரட்டைத் தலையும், பழுப்புப் பற்களுமே அவர்களது அடையாளம்.

குப்பையில் கிடந்த உடைந்த பொருள் ஒன்று அவர்களது கண்ணில் பட்டது, எடுத்துக் கொண்டார்கள் கையில், பளபளவென இருந்தது அது.

"டேய், கடைல போட்டா நெறைய காசு கிடைக்கும் டா..", ஒருவன் ஆலோசனை சொல்ல, "ஆமாடா.." இன்னொருவன் ஆமோதித்தான்.

கடையை நோக்கிப் பயணப்பட்டார்கள். போகும் வழியில் அவர்களுக்குள் ஒப்பந்தம், வருவதில் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வதென்று.

கடையில் சென்று கேட்டார்கள், "ஐயா.. இதுக்கு எவ்வளவு கெடைக்கும்?"

கடைக்காரர் அதை வாங்கிக் கொண்டு, உற்றுப் பார்த்தார், பிறகு இவர்களை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.

"இது எங்கடா இருந்தது?"

"குப்பைல"

"நூறு ரூவா கெடைக்கும், பித்தளப் பொருள் தான்."

"நூறு ரூவாயாம்டா.." இருவரும் காதுகளுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். நூறு ரூபாய் அவர்களுக்குப் பெரிய தொகையாக இருந்தது.

நூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஆனந்தமாக அந்தத் தெருவில், அரசர்கள் போல நடந்து சென்றார்கள்.

அந்தக் கடைக்காரருக்கோ ஆனந்தம், "உடைந்து போன ஒரு தங்கக் கோப்பையின் பகுதிக்கு, நூறு ரூபாய் கொடுத்து சிறுவர்களை ஏமாற்றி விட்டோம்", என்று.

அது எப்படியும் பத்தாயிரம் தேறும். கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்.

சிறுவர்கள் அந்த நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு, ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்தார்கள், உணவு உண்டு விட்டு, மதியம் உண்பதற்கு ரொட்டி வாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள்.

போகிற வழியில், இருவரும் ரொட்டியை சரி பாதியாக பங்கிட்டுக் கொண்டார்கள். அவர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்ததை ஒரு நாய் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தது.

"பாவம், பட்டினி போலும் அந்த நாய்", அதைப் பார்த்ததும் நினைத்தார்கள் இருவரும்.

ரொட்டியை பங்கிட்டுக் கொண்டார்கள் அந்த வாயில்லா உயிரிடமும்.

புன்னகையோடு, அது சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும் கண் இமைக்காமல் சிறிது நேரம்!

---------------------------

கோபுரத்தில் இருந்தும் சிலர் குப்பை.
குப்பையில் கிடக்குது சில மாணிக்கங்கள்!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்