முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளே...! கடவுளே...!

நீண்ட நாட்களாக, உனக்கு ஒரு கடிதம் எழுத நினைத்திருந்தேன். நேரம் இல்லை, அதனால் தான் எழுத முடியவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். நிறைய நேரம் இருந்தது, என்ன எழுதுவதென்று தான் தோன்றவில்லை. இதோ, இன்று தோன்றுகிறது. கேட்கத் தோன்றுகிறது. எதை எதையோ, கேட்கத் தோன்றுகிறது.

எது கேட்டாலும் நீ கொடுக்கப் போவதில்லை நான் அறிவேன், ஆதலால், நான் கேட்கப் போவதில்லை. கேட்பதற்கு மாறாகக் கொடுப்பது உன் வழக்கம். அதனால், எதுவும் வேண்டாம் அப்பா.

சரி, கேட்பதற்காகத் தானே உன்னை நாடிடுவார்கள், கேட்பதற்காக இல்லை என்றால், நான் எதற்காக வந்திருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். கொடுப்பதற்காகவா?

நினைக்காதே, கடவுளுக்கே கொடுக்கும் அளவிற்கு இவளிடம் என்ன உள்ளது என்று. கொடுக்கத் தான் வந்திருக்கிறேன். உனக்கு நான் இன்று கொடுக்கத் தான் வந்திருக்கிறேன்.

என்ன கொடுக்க? பாவம் உன்னிடம் அது  இல்லை, அதைத் தான் கொடுக்கலாம் என்று வந்திருக்கிறேன். யோசித்துப் பார், உன்னிடம் என்ன இல்லை? கடவுளிடம் இல்லாததும் இருக்க முடியுமா? முடியும், யோசித்துப் பார், உன்னிடம் அது இல்லை, தேடிப் பார், உன்னிடம் அது இல்லை.

எது? எது? அது உன்னிடம் இல்லை. எது?

கண்ணீர். கண்ணீர். அது உன்னிடம் இருந்ததுண்டா? நீ அழுததுண்டா? உன்னை அழ வைத்துப் பார்ப்பது என் ஆசை இல்லை. நான் அத்தனை கொடூரமானவள் இல்லை.

ஆனால், இங்கு என்னோடு இருக்கும் பலரையும் நீ தினம் அழ வைத்துப் பார்க்கிறாயே? நியாயமா? சொல், நியாயமா?

துன்பம் இல்லையே ஆனால்,
இன்பத்தை ஒரு போதும்,
உணர முடியாது. 

நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், சிலருக்கு நீ இன்பமே கொடுக்காமல், கண்ணீர் மட்டும் தந்திருக்கிறாயே? இது ஏனோ?

அழுது பார். நீயும் அழுது பார். உன் விதியை சற்று மாற்றி எழுதி, அழுது பார். சொந்தங்கள் இழந்து, வாழ இடம் இல்லாமல், உன்ன உணவில்லாமல், அழுது பார். சோகத்தை உணர்ந்து பார்.

இன்பமே இல்லாமல், சில நாட்கள், அகதியாக வாழ்ந்து பார். புரியும், உனக்கும் புரியும்.

நீ அழுது பார்த்து விட்டாய் என்றால், ஆறுதல் சொல்ல, அரவணைக்க ஆளின்றி அழுது பார்த்து விட்டாய் என்றால், இங்கு எதுவும் இப்படி இருக்காது.

எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம், நீ அழுது பார், வருந்திப் பார், அது போதும்!

மதங்களைக் கடந்தவனே, அழுது பார். உன் பெயரைச் சொல்லி, போர் செய்யும் சிலரை நினைத்து அழுது பார். இந்தப் போராட்டங்களால், பெற்றோர் இழந்த குழந்தையாக நீ இருந்து, அழுது பார்.

போதும். அது போதும். அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். அழுது பார்.

( தவறாக ஏதேனும் குறிப்பிட்டிருந்தால், மன்னிக்கவும், இதை யாரையும் புண் படுத்தும் நோக்கத்தோடு எழுதவில்லை. அனைத்தும் கற்பனையே.)

கருத்துகள்

  1. //இதை யாரையும் புண் படுத்தும் நோக்கத்தோடு எழுதவில்லை. அனைத்தும் கற்பனையே//

    இது உங்கள் உணர்வுகளின் பதிவு இதை கற்பனை என்று சொல்லி விட முடியாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது, கடவுளுக்குக் கடிதம் எழுதுவதென்பது, கற்பனை தான் அல்லவா? இது சாத்தியம் அல்ல? சரி தானே?

      நீக்கு
    2. Kanmani,
      I agree with Vijayan. this is not a mere imagination. It's your emotions. Though it's not possible for HIM to read it here, HE can read from your mind..:)

      I am sure you don't hurt anyone with this letter..

      Happy Blogging :)

      நீக்கு
    3. :) ம்ம் நன்றி Christo

      நீக்கு
  2. பெயரில்லா7/29/2012 3:09 AM

    நல்ல கடிதம் கண்மணி! நிறைய சிந்திக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்