இது தான் என்னுடைய இறுதிப் பதிவு, எனக்கு வாழவே பிடிக்கல, இந்த உலகமே என்ன எதிரியாப் பாக்குது, எனக்கு வாழ வழியே இல்ல! நான் அதனால தீக்குளிக்கப் போறேன்!!!
"அட என்னடா இது, தீக்குளிக்கப் போறாளா இந்தப் பொண்ணு??"னு நெனைக்கறீங்களா? அட சும்மா சொன்னேன்! ஆனா இத சொல்றப்போ எனக்கு அவ்வளவு வருத்தம் தெரியுமா? :( :(
அரசாங்கம் செய்ற ஒரு விஷயம் பிடிக்கலையா? இல்ல, உங்க தலைவருக்கு எதிரா ஏதும் நடக்குதா? அட, தீக்குளிச்சு எதிர்ப்பு தெரிவியுங்கப்பா!!! :( :(
ஏன்? ஏன் இப்படி தீக்குளிக்கணும்? நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கு, அதுக்காக ஏன் நம்மள நாமே வருத்திக்கணும்?
புகைப்படம்: google images |
- பரிட்சையில் தோல்வி,
- காதல் தோல்வி
- வியாபாரத்தில நட்டம்
- கடன் தொல்லை
- குடும்பப் பிரச்சனை
- வேளையில் பிரச்சனை!
அட, நான் இப்படி வாய் கிழியப் பேசறேன்! நானே தற்கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்கேன்!? ஆமா, உண்மையா தான். இது எங்க அம்மாவுக்கே இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும், நீங்களும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்க!??
ரகசியம் சரியா? இதோ என் தற்கொலை கதை!
அப்போ, எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும், சின்னப் பொண்ணு நான் :) (இப்போ எனக்கு 19! :) வளந்துட்டேன்) அப்போ எல்லாம் நிறைய சேட்டை செய்வேன், ( இப்போ நான் ரொம்பச் சமத்து!) அம்மா கிட்ட நான் அடி வாங்காத நாளே இருக்க முடியாது. ஒரு நாள் ஏதோ சேட்டை செஞ்சேன்னு எங்கம்மா நல்ல அடி! அப்படி அடி வாங்குனேன்! :(
ஒடன ஒரு யோசனை தோனுச்சு, "என்ன உலகமடா இது, நம்ம செத்துப் போய்டலாம்னு"நெறைய தொலைக்காட்சில தற்கொலை பண்றதெல்லாம் பாத்திருக்கேன் நான், அதனால, முடிவு செஞ்சேன், நம்ம ஏதாவது மாத்திர நெறைய சாப்டா செத்துப் போய்டுவோம்னு! நான் மாலை நேரத்துல டியூஷன்(tution) போவேன் அப்போ. சரி, டியூஷன் போகறதுக்கு முன்னாடி மாத்திர நெறைய சாப்டுட்டு போயிடலாம்னு முடிவு செஞ்சேன். சாமி எல்லாம் கும்டேன்! எதுக்குன்னு கேக்கறிங்களா? "சாமி எனக்கு சாகும்போது வலிக்கக் குடாதுனு " வேண்டிக்கிட்டேன்! :D
மாத்திரைய சாப்டுட்டு போயிட்டேன் டியூஷனுக்கு. ஒரு மணி நேரம் ஆச்சு, தல சுத்தும்னு பாத்தேன் சுத்தல, சரி இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் போலன்னு நெனச்சேன்! ரெண்டு மணி நேரம் ஆச்சு! அப்பவும் ஒன்னுமே ஆகல! வீட்டுக்கே வந்துட்டேன், அப்பவும் எனக்கு ஒன்னுமே ஆகல! ரொம்ப சுறு சுறுப்பா இருந்தேன் வழக்கத்துக்கு மாறா!
அன்னிக்கு இரவே எங்க அம்மா வந்து, "ரொம்ப அடிச்சிட்டனா? வலிக்குதா இன்னும்" னு சமாதானம் பேசிட்டாங்க! அப்போ நெனச்சேன், "அட நல்ல வேள நம்ம சாகலன்னு"
ஆனா? ஏன் சாகல நான்? :) :) :) ஏதோ மாத்திர தான சாப்டேன், நான் சின்னப் பிள்ளைல அப்போ, வெவரம் தெரியாம சத்து மாத்தரைய சாப்டிருக்கேன்! :) :) :)
நல்ல வேளை, ஏதும் ஆகல எனக்கு.
இந்தக் கதைய, என்னோட கதைய ஏன் சொல்றேன்னா. "தற்கொலை" இது ரொம்ப சிறு பிள்ளைத் தனமான முடிவு, என்னைப் பொறுத்த வர. இப்போ அன்னிக்கு நான் மட்டும், உண்மையாவே ஏதோ மாத்திர சாப்டு உயிர் போய் இருந்தா???? அம்மா.. என்னால நெனச்சும் பாக்க முடியல! இப்போ அந்தப் பழைய நாட்கள நெனச்சுப் பாத்தா சிரிப்பா வருது எனக்கே! :) :) சரி சரி சிரிக்காதிங்க நீங்க!
இப்போ பெருசா பாரமா இருக்கற ஒரு விஷயம் பிற்காலத்துல ஒரு எளிமையான விஷயமா இருக்கும்! சரி தானே?!
இப்பவும் எனக்கு எப்போவாவது ரொம்ப வருத்தமா இருந்தா, சின்ன வயசுல நான் செஞ்ச "தற்கொலை" விளையாட்ட நெனச்சுப்பேன். சோகம் மறைஞ்சு போயிடும்னு ஒரு நம்பிக்க வரும்!
நமக்கு ஏற்படும் துன்பத்துக்காக,
- உணவு உண்ணாம இருப்பது.
- நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வது
- "தற்கொலை" செய்து கொள்வது!
இதெல்லாம் செய்வது நல்லதில்ல! இதெல்லாம் சின்னப் பொண்ணு நானு, எனக்கே சிறுபிள்ளைத் தனமா தெரியுது. உங்களுக்கும் தானே?
இனி உங்களுக்கு ஏதாவது சோகம்னா என்னோட "தற்கொலை" கதைய ஞாபகம் வச்சுக்கோங்க, :) :) சோகம் சும்மா வேகமா பறந்துடும் உங்கள விட்டு! :)
எனக்கு விருது கொடுத்துருக்காங்க... அதனை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..
பதிலளிநீக்குஎன் தளத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்...
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி :) :) இதோ வரேன் வாங்கிக்க :)
நீக்குவாழ பல வழிகள் உண்டு என்பதை பதிவின் மூலம் அறிய முடிந்தது .
பதிலளிநீக்குநல்ல பதிவு சகோ
நன்றி :)
நீக்குகண்மனி , தங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மகிழ்ச்சி.என் வலைப்பூவில் பதிவர் சந்திப்பில் நான் சந்தித்த சாதனைபதிவர் பற்றி ....
பதிலளிநீக்குhttp://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html
எனக்கும் மிக்க மகிழ்ச்சி :)
நீக்குதற்கொலை எந்த சூழலிலும் அவசியமற்றதுதான். நல்ல பதிவு:)
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குகடந்த காலம் என்பது, நினைவுகள் அசை போட இனிப்பாகத் தான் இருக்கும்.
பதிலளிநீக்குநிகழ்கின்ற நொடிதனில்...
சிந்தனைக் கொலைகள் ஏராளம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உங்களால் உணர முடிகிறதா...
தொடர்ந்து எழுதுங்கள்.
- சந்திரபால்.
தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.
நீக்கு