முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அத்தனைக்கும் ஆசைப்படு!


ஆயிரம் கனவுகள் இருந்தபோதும்,
ஒருசில மட்டுமே நனவாகும்!
கோடிகள் அதிலே இருந்துவிட்டால்,
ஆயிரம் நனவாகும் வாய்ப்பு தரும்!

நினைவு தெரிந்த நாள் முதலாய்,
ஆசை நிறைய, நிறைய உண்டு.
களிமண் பொம்மை உடைய வேண்டாம்,
காகிதக் கப்பல் கிழிய வேண்டாம்.

பாலின் நிறம் வெண்மை வேண்டாம்,
புல்லின் நிறம் பசுமை வேண்டாம்.
"இப்படி ஆசை இருந்த போது,
எப்படியம்மா நிறைவேறும்?
அது எப்படியம்மா நிறைவேறும்?"

இப்படி சொன்ன சிலருக்காக,
நல்லன சில நான் ஆசைப்பட்டேன்!
நம் நாட்டவர் கண்ணீர் கலைந்திடவும்,
சோகங்கள் எல்லாம் அழிந்திடவும்.

இதற்கும் இல்லை என்று சொன்னால்,
பேதை எங்கே சென்றிடுவேன்,
"அத்தனைக்கும் ஆசைப்படு"
சொன்னது யார்?
சொல்லுங்கள் அவரிடம்,
ஆசையே சாபம் என்று!

கருத்துகள்

  1. // சொல்லுங்கள் அவரிடம்,
    ஆசையே சாபம் என்று!// அழகாய் முடித்தீர்கள்

    //நம் நாட்டவர் கண்ணீர் கலைந்திடவும்,
    சோகங்கள் எல்லாம் அழிந்திடவும்.// மாற்றம் வேண்டும் என்று ஆசைப்படுவோம்.... ஆசைக்கும் கனவிற்கும் வித்தியாசம் நூலளவு தான்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மை தான். ஆசைபட்டுக் கொண்டு சும்மா இருக்காமல் ஏதேனும் செயலில் செய்தால் நன்மை தான்.

      நீக்கு
  2. எனக்கு மட்டும் அந்த சிவபெருமானை போல் 'வரம்' கொடுக்கும் 'சக்தி' இருந்திருந்தால்.... இந்தா பிடி என்று தங்களுக்கு வரம் அருளியிருக்கலாம் என்ன செய்வது எனக்கு அந்த சக்தி இல்லையே :) :)

    எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி! தொடர்ந்து கவி மழை பெய்யட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி :) :) கவி மழை பொழியும். தொடர்ந்து நனைய வாருங்கள்! :)

      நீக்கு
  3. ஆசை சாபம் அன்று அதை மெய்யாக்கும் முயற்சி இல்லாமல் சோம்பி விதியையும் , காலத்தையும் , மற்றவரையும் குறை கூறுவதே சாபம்

    கவிதை வரிகள் அருமை ஆனால் பொருள் தான் கொஞ்சம் உதைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்.. சிலசமயம் எவ்வளவு முயன்றாலும் சில காரியங்கள் நடப்பதில்லயே? அதான் அப்படி எழுதினேன்.

      நன்றி.

      நீக்கு
  4. அத்தனைக்கும் ''ஆசைப்படு''
    காலம் வரும்வரை காத்திரு,,
    கொடுத்த கடமையை சரிவர செய்திடு
    கோடிகளும் நினைவாகும்...!

    நல்லது கண்மனி!!

    ஏன் ''நம்ம'' பக்கம் நேற்று வரவில்லை..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் நனவாகும்.
      நன்றி.
      மன்னிக்கவும். கல்லூரியில் வைத்து இந்தப் பதிவு செய்தேன்.
      சிறிது நேரம் தான் இணைப்புக் கிடைத்தது. அதான் பதிவு போட இயலவில்லை

      நீக்கு
  5. சரிதான்....ஆசையே அனைத்திற்கும் காரணம்...இப்ப நீங்க படுவது கூட ஆசைதான்...ஆசை சாபம் மற்றும் வரம் இரண்டின் சேர்க்கை..இப்ப நீங்க இணையம் வழி எழுதுவது கூட ஆசையின் வெளிப்பாடுதான்.ஆசைபடுங்கள்,ஆசைபடாதிருக்க ஆசைப்படுங்கள்..
    தொழிற்களத்தில் என் முதல் சிறுகதை மறக்காமல் வாசிங்க: http://tk.makkalsanthai.com/2012/09/godshortstory.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) :) ஆசைப்படாமல் யாராலும் இருக்க முடியாது என்பது தானே உண்மை! நன்றி...

      நீக்கு
  6. பாத்துங்க , ஜக்கி வாசுதேவ் உங்க மேல வழக்கு போட்டுட போறார்.

    பதிலளிநீக்கு
  7. Ahem ahem..from where you looted this title :P :P

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்