"சாமி மழ வரக்கூடாது!",
"ரெயின் ரெயின் கோ அவே"
என்று பட்டாசு கொழுத்த,
சிறுவர்கள் எல்லாம்
சேரும் நாள்!
உங்கள் வீட்டு மாடியிலா?
எங்கள் வீட்டு மாடியிலா?
ராக்கெட் விடுவது எங்கிருந்து?
"ஸ்ரீஹரிகோட்டா சைண்டிஸ்ட்" போல,
சுட்டிகள் எல்லாம்,
சண்டையிடும் நாள்!
புதுச் சொக்காயில்,
பெரிய ஓட்டை,
போட்டது யார்?
போட்டி போடும்,ஒரு நாள்!
கையெல்லாம் வெடிமருந்து,
வாயெல்லாம் பெரும் விருந்து,
"டேய்.., கை கழுவாம,
லட்டு சாப்டாத...",
அம்மாவின் சத்தத்தோடும்,
அதிரும் திருநாள்!
காயமே இல்லாமல்,
கட்டாயம் முடியாது,
கொஞ்சம் கண்ணீர் கொடுக்கும்,
கருப்பு நாள்!
அத்தை வீடு,
அக்கா வீடு,
வீடு வீடாய்,
இனிப்பு கொடுத்து,
கொண்டாடும் இனிய நாள்!
உலகில் இத்தனை வண்ணங்களா?
உடையில் இத்தனை ரகங்களா?
உங்களையும் என்னையும்,
வியக்க வைக்கும்,
விழா நாள்!
"இருப்போருக்கு" இத்தனையும்,
இல்லாதோருக்கு????
"நாமும் கொண்டாடுவோம் ஒருநாள்",
என்று மனதைத் தேற்றிக் கொள்ளும்,
ஏழைகளுக்கு,
ஏக்கப் பெருநாள்!
ஒவ்வொரு வரியும் உண்மை... விரைவில் அனைத்தும் மாறட்டும்...
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி ஐயா, விரைவில் மாறட்டும்,
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளித் திருநாளில் எல்லோரையும் சிந்திக்க வைத்து விட்டாய், கண்மணி!
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நன்றி மா
நீக்குநல்ல கவிதை, உங்கள் எழுத்து நடை அழகாய் இருக்கிறது சகோதரி, இன்னும் மெருகேற்றுங்கள், தொழிற் களத்திலே உங்கள் தொழில் தர்மம் பற்றிய கட்டுரையை படித்தேன், நானும் முதுகலை கணினிப் பயன் பாட்டு துறை மாணவன் என்ற முறையிலே அத்தகைய கொடுமையை அனுபவித்து வருகின்றேன். வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமிக்க நன்றி. தொழில் தர்மம் படிப்பதிலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
நீக்குநல்ல கவிதை, உங்கள் எழுத்து நடை அழகாய் இருக்கிறது சகோதரி, இன்னும் மெருகேற்றுங்கள், தொழிற் களத்திலே உங்கள் தொழில் தர்மம் பற்றிய கட்டுரையை படித்தேன், நானும் முதுகலை கணினிப் பயன் பாட்டு துறை மாணவன் என்ற முறையிலே அத்தகைய கொடுமையை அனுபவித்து வருகின்றேன். வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநன்மைகள் இருக்கிறது நான் மறுக்கவில்லை, தொழிற் களத்தில் என் பதிவு
பதிலளிநீக்குஎங்கேயும் எப்போதும்
இணைப்பு : http://tk.makkalsanthai.com/2012/11/tamil.html
என் வலைப் பதிவில் தமிழ் மண் எடுப்போம், ஈழத்தில்
இணைப்பு :
http://kavithai7.blogspot.in/2012/11/srilanka.html
அருமையான கவிதை கண்மணி.. எல்லோரும் வாழ்வில் முன்னேறுவோம்.. எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புவோம்
பதிலளிநீக்கு