என்ன பேசப் போகிறோம்?
நம்மைப் பற்றி தான். ஆம், நாம் என்றால் இங்கு யாரைக் குறிக்கிறது இந்த "நாம்"?
நாம் --> ஆண், பெண்! இது இரண்டு தான்.சரி, அதில் என்ன? என்கிறீர்களா?
பொதுவாகவே, ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது என்பதை பாவமாகப் பார்க்கும் சமூகம் நம்முடையது!??!!
ஆம், நட்பாகப் பேசினால் கூட சில சமயம், இல்லை, பல சமயம், தவறாகத் தான் பார்க்கிறது. சரி, அதனால் என்ன என்கிறீர்களா?
ஆணும், பெண்ணும் பேசுவதில் தவறே இல்லை! இப்போது, இந்தப் பதிவை வாசிக்கும் நீங்களே ஓர் ஆணாக இருப்பின், உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்வதில், தவறில்லை. தவறில்லை தானே?
ம்ம், பிறகு என்ன? ஏன் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைத் தவறு என்கிறார்கள்?
பெண் பிள்ளை என்றால், பொன்னோ பொருளோ, என்று பொத்தி வைக்கிறார்கள்?
பல நேரங்களில் இந்த ஆண் பெண் கருத்துப் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றத்தொடு நிற்பதில்லை!!! இது, இதனால் தானோ என்னவோ, பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்!
ஏதோ ஒரு தருணத்தில், வேறு மாதிரியாக வார்த்தைகள் மாறும்போது தான் பிரச்சனை!
முறையோடு பேசுவது அவசியம். ஒரு பெண்ணோ, ஆணோ, புன்னகையோடு பேசுகிறார் என்பதற்காக, அதிகம் உரிமை எடுத்துப் பேசுவது, தவறு தானே?
என்னைப் பொறுத்தவரை, தவறே தான்.ஒரு கோடு, ஒரு எல்லைக் கோடு இருக்க வேண்டும், அதைத் தாண்டாத வரையில் நன்மையே! தாண்டினால்?
ஆணோ, பெண்ணோ, யாராக இருப்பின், ஆணோ, பெண்ணோ, யாரிடம் பேசுவதாக இருப்பினும், "வார்த்தைகளில்" கவனம் இருக்கட்டும், கண்ணியம் இருக்கட்டும்!!!
நான் உங்களைக் குறிப்பிடவில்லை பொதுவாகத்தான் சொல்கிறேன்!
இதோ, இதுவரை உங்களை நான் ஏதேனும் சங்கடத்துக்கு உள்ளாகும் படி பேசி இருந்தால், மன்னிக்கவும். முடிந்த அளவு, நான் அப்படிப் பேசாமல் இருக்கத் தான் முயற்சிக்கிறேன்!
பி.கு. - இதப் படிச்சிட்டு,கேள்வி எல்லாம் கேட்டு, கருத்துரை போடாதீங்க!
நம்மைப் பற்றி தான். ஆம், நாம் என்றால் இங்கு யாரைக் குறிக்கிறது இந்த "நாம்"?
நாம் --> ஆண், பெண்! இது இரண்டு தான்.சரி, அதில் என்ன? என்கிறீர்களா?
பொதுவாகவே, ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது என்பதை பாவமாகப் பார்க்கும் சமூகம் நம்முடையது!??!!
ஆம், நட்பாகப் பேசினால் கூட சில சமயம், இல்லை, பல சமயம், தவறாகத் தான் பார்க்கிறது. சரி, அதனால் என்ன என்கிறீர்களா?
ஆணும், பெண்ணும் பேசுவதில் தவறே இல்லை! இப்போது, இந்தப் பதிவை வாசிக்கும் நீங்களே ஓர் ஆணாக இருப்பின், உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்வதில், தவறில்லை. தவறில்லை தானே?
ம்ம், பிறகு என்ன? ஏன் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைத் தவறு என்கிறார்கள்?
பெண் பிள்ளை என்றால், பொன்னோ பொருளோ, என்று பொத்தி வைக்கிறார்கள்?
பல நேரங்களில் இந்த ஆண் பெண் கருத்துப் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றத்தொடு நிற்பதில்லை!!! இது, இதனால் தானோ என்னவோ, பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்!
ஏதோ ஒரு தருணத்தில், வேறு மாதிரியாக வார்த்தைகள் மாறும்போது தான் பிரச்சனை!
முறையோடு பேசுவது அவசியம். ஒரு பெண்ணோ, ஆணோ, புன்னகையோடு பேசுகிறார் என்பதற்காக, அதிகம் உரிமை எடுத்துப் பேசுவது, தவறு தானே?
வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்! |
என்னைப் பொறுத்தவரை, தவறே தான்.ஒரு கோடு, ஒரு எல்லைக் கோடு இருக்க வேண்டும், அதைத் தாண்டாத வரையில் நன்மையே! தாண்டினால்?
திட்டுவாங்கிக் கொள்ளும் முன் புரிந்து கொண்டால், நல்லது! எல்லை தாண்டிப் பேசி, நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டாமே?!!?
ஆணோ, பெண்ணோ, யாராக இருப்பின், ஆணோ, பெண்ணோ, யாரிடம் பேசுவதாக இருப்பினும், "வார்த்தைகளில்" கவனம் இருக்கட்டும், கண்ணியம் இருக்கட்டும்!!!
தயவு செய்து, உங்களிடம் பேசுபவரை சங்கடத்துக்கு உள்ளாக்காதீர்கள்!
நான் உங்களைக் குறிப்பிடவில்லை பொதுவாகத்தான் சொல்கிறேன்!
பி.கு. - இதப் படிச்சிட்டு,கேள்வி எல்லாம் கேட்டு, கருத்துரை போடாதீங்க!
நம்மை பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ நாம் பிறரிடம் அவ்வாறு நடக்க வேண்டும்.. தனிமனித ஒழுக்கம் இருந்தால் தான் உருப்படியான, பயம் இல்லாத நல்லவர்கள் வாழும் சமுதாயம் அமையும்..
பதிலளிநீக்குஆம், உண்மை.
நீக்கு//நம்மை பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ நாம் பிறரிடம் அவ்வாறு நடக்க வேண்டும்..//
இது ஆண் பெண் நட்பிற்கு சற்றுப் பொருந்தாது என்று நினைக்கிறேன்.
தனி மனித ஒழுக்கம் அவசியம்! "மிகவும்!"
//நட்பாகப் பேசினால் கூட சில சமயம், இல்லை, பல சமயம், தவறாகத் தான் பார்க்கிறது. சரி, அதனால் என்ன என்கிறீர்களா?//
பதிலளிநீக்குஏற்று கொள்கிறேன்
//ஆணும், பெண்ணும் பேசுவதில் தவறே இல்லை! இப்போது, இந்தப் பதிவை வாசிக்கும் நீங்களே ஓர் ஆணாக இருப்பின், உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்வதில், தவறில்லை. தவறில்லை தானே?//
பதிவுலகை பொறுத்தவரை (சமுக தளங்களை பொறுத்த) ஆண் பெண் என்பதை தவிர்த்து அவர்கள் முன்னிறுத்தும் கருத்தே எங்கள் கருத்தை பகிர்ந்து கொள்வதில் முன்னிலை படுகிறது என நினைக்கிறேன்
//ம்ம், பிறகு என்ன? ஏன் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைத் தவறு என்கிறார்கள்?//
பார்க்கிறவர்களின் பார்வை பொருத்தது
//பெண் பிள்ளை என்றால், பொன்னோ பொருளோ, என்று பொத்தி வைக்கிறார்கள்?//
ஆண் கெட்டு போனா அவன் பெயர் மட்டுமே கெட்டு போவதாகும், பெண் கெட்டு போனால் குடும்பத்தின் பெயரும் சேர்ந்து கெட்டு போய்டும்னு நினைக்கிற நிலை மாறும் வரை தொடரும் என நினைக்கிறேன்.
//பல நேரங்களில் இந்த ஆண் பெண் கருத்துப் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றத்தொடு நிற்பதில்லை!!! இது, இதனால் தானோ என்னவோ, பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்!//
இருக்கலாம்
//முறையோடு பேசுவது அவசியம். ஒரு பெண்ணோ, ஆணோ, புன்னகையோடு பேசுகிறார் என்பதற்காக, அதிகம் உரிமை எடுத்துப் பேசுவது, தவறு தானே?//
உரிமை என்பது கூட தனி ஆள் சம்மந்தப்பட்டு மாறும். காரணம் சிலருக்கு அரை மணி நேரம் கதைப்பதில் உள்ள திருப்தி சிலருக்கு நாள் முழுவதும் கதைத்தாலும் இருப்பதில்லை அதே போல தொட்டு கதைக்கும் இளைஞர் சமூகமும் உண்டு கிட்ட நெருங்கா இளைஞர் நட்பு சமூகமும் உண்டு. உரிமை என்பது அவர்களின் மட்டத்துக்கு மாறும்.. ஆகவே முறையான புரிந்துணர்வோடே உறவை வளர்த்தல் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
நம்முடன் பேசுபவர் எவ்வளவு உரிமை கொடுக்க நினைக்கிறாரோ, அதை விட அதிகம் எடுத்துக் கொண்டு பேசுவது, சரியல்ல என்று நினைக்கிறேன்.
நீக்குகருத்துக்கு மிக்க நன்றி.
சிவகாசியில் பட்டாசு சத்தம் எங்க ஊர் வரை கேட்குதுங்கோ..
பதிலளிநீக்குகேக்கணுமே...
நீக்குஎனக்கு பிடித்த மொழி மௌனம்...
பதிலளிநீக்குநன்றி...
ஆம், மௌனம் - விருப்பம், வெறுப்பு இரண்டையுமே சொல்லிவிடும் தான்.
நீக்குநன்றி, ஐயா.
mine too!
நீக்குஉங்கள் கருத்துடன் 100% ஒத்து போகிறேன். நானும் இதே போலே தொழிற் களத்திலே " நம்மைப் பற்றி நம்மிடமே பேசுவோமே..." என்று ஒரு பதிவு இட்டு உள்ளேன்.
பதிலளிநீக்குஇதோ இணைப்பு : http://tk.makkalsanthai.com/2012/11/blog-post_4224.html
அந்தப் பதிவை வாசித்தேன், உண்மை தான் நீங்கள் சொல்லி இருப்பது.
நீக்குநன்றி..