முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா#11 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்:

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

அவனுக்கு என்னால தான் இப்படி ஆகிடுச்சுன்னு எப்பவும் எனக்கு வருத்தம். தெனமும் ஆஸ்பத்திரில போய் அவனக் கூட இருந்து பாத்துக்கிட்டேன்.

அவனுக்கு கால் போயடுச்சேன்னு கூட வருத்தம் இல்ல, நான் தெனமும் கூட இருக்கேன்னு சந்தோஷம். ஆனாலும் அப்பப்போ அழுவான், "ஏன் ஓவு.. என்ன இவ்ளோ நல்லாப் பாத்துக்கிறியே, நெசமாவே என்னப் புடிக்குமா? ஆனா, இனி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் எப்படிப் பாத்துக்க முடியும்... நீ தான் என்னப்  பாத்துக்கணும்... "

அவன் அழறப்போ எல்லாம், எனக்கு என்ன சொல்லனே தெரியாது, "அதெல்லாம் ஒண்ணும்ல உனக்கு சரியாப் போகும்...", இப்படி நான் சொன்னாலும் அவனுக்கு என்ன தெரியாதா, போன கால் திருப்பி வராதுன்னு.

எங்க வீட்ல எல்லாரும் சொல்லுவாங்க, அந்த நொண்டிப் பயலவா கட்டிக்கப் போற? நல்லா இருந்தா நாங்களே கட்டி வச்சிருப்போம், இப்போ போய் எப்டி...?

"பேசாம அந்தப் பணக்கார மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ. நல்லா இருக்கும். வீட்லயே தண்ணி வசதி எல்லாம் இருக்காம்.
நீ இம்புட்டு நாளா கட்ட அடுக்கி காஞ்சது போதாதா? இனியும் இந்த நொண்டியக் கட்டிக்கிட்டு அழுகப் போறியா வாழ்க்க முழுசா?"

எங்க வீட்ல இப்டி பேசப் பேச எனக்கு என்ன செய்யனே தெரியல, ஆனாலும், இன்னிக்கு இந்தக் கடிநாய் இப்டி கெடக்கான்னா அதுக்கு எம்மேல வச்சிருந்த பிரியம் தான காரணம்? இந்த நெனப்பே என்ன கொடஞ்சது.

அவன் மேல விருப்பம் எப்பவும் இருந்ததில்ல, ஆனா, அவன் நெலமைக்கு நான் தான காரணம்?

ஒரு வழியா, அவன் ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வந்துட்டான். நடக்க ஒரு கம்பு இல்லாம முடியாது. அவனோட அம்மா ரொம்பப் பாவம்,  வயசான காலத்துல அவனுக்கு எல்லா வேலையும் பாத்துகிட்டு கெடந்துச்சு. அவன் வீட்டுக்கு வந்தப்றம் நான் அந்தப் பக்கமே போகல, ஏன்னும் தெரியல.

ஒரு நாள் அவன் வீட்டுக்குப் போனேன், ஏதோ, அவன பாத்துட்டு வரலாமேன்னு போனேன். உக்காந்திருந்தான், விட்டத்த வெறிச்சுப் பாத்துக்கிட்டு, பாக்கவே பாவமா இருந்தது.

"சேகரு..", நான் கூப்டது கூட கேக்கல அவன் காதுல, இன்னும் பலமாக் கூப்டேன், "சேகரு...", இப்போ திடுக்குனு திரும்புனான் என் பக்கம்.

"என்ன ஓவு.. இந்தப் பக்கம்? அதிசயமா?",  அந்தக் கொரல்ல கோவம் இல்ல, பாசம், ஏக்கம் நெறயக் கெடந்தது.

"இல்ல, சும்மா தான்..", என்ன சொல்லன்னு தெரியாமச் சொன்னேன்.

"சரி வா, எப்டி இருக்க? அம்மா கிட்ட ஏதும் வாங்க வந்தியா? வெளிய போயிருக்கு அம்மா..", ஆளே மாறி இருந்தான், இவ்ளோ மெதுவா இது வரைக்கும் அவன் பேசுனதே கெடயாது! கால் போனதுல, இவன் கிட்ட இருந்த மொறட்டுத் தனமும் சேந்து போயிடுச்சா? எனக்கு அவன இப்டி பாக்க ரொம்பப் பாவமா இருந்தது. முந்தி எவ்வளவு ஆத்தரம் வருமோ, இப்போ அவ்ளோ பாவமா இருந்தது. அந்த ஆத்தரம் கூட கொஞ்சம் பொய்யானதா தான் இருந்துச்சு, ஆனா இந்த அனுதாபம்? உண்மையாவே ரொம்பப் பாவமா இருந்தது.

" இல்ல, நான் உன்னப் பாக்கத் தான் வந்தேன்..."

"என்னப் பாக்கவா? முன்ன எல்லாம் என்னப் பாத்தாலே புடிக்காது, இப்போ என்ன? என்னப் பாக்க?" விரக்தியா சிரிச்சுட்டே சொன்னத கேட்டப்போ, எனக்கு எம்மேல தான் ஏதோ பெரிய தப்பு இருக்கோணு தோனுச்சு.

"அதெல்லாம் இல்ல, நீ வெளிய ஆளே காணோமேன்னு வந்தேன்.ஏன் சேகரு, இப்டி உகாந்த்ருக்க? வெளியவே வாரதில்ல? வீட்டுக்குள்ளயே கெடக்கியே? வெளில வாரது தான?"

"வெளில வந்து? எல்லாரும் நொண்டிப் பயனு என் காது படவே பேசவா?", கொஞ்சம் கோபமாவே பேசுனான்.

"அப்டி எல்லாம் யாரும் பேச மாட்டாங்க, நீ வா.."

"சும்மா இரு ஓவு.." மறுபடியும் கொஞ்சம் பாசமா பேசுனான்.

எனக்கு என்ன பேசன்னு தெரியல, ஒரு ஓரமா எங்கயோ பாத்தாப்ல உக்காந்தேன். அவனும் எதும் பேசல கொஞ்ச நேரம்.

திடுக்குனு என்ன தோணுச்சோ, தெரியல, "ஓவு.. உனக்கு கல்யாணம் எப்போ...?", இப்படிக் கேட்டான்.

என்ன சொல்லுறதுன்னு தெரியல, அவனையே பாத்தேன்.

"சொல்லு, உன்ன தான், எப்போ கல்யாணம்?"

"இல்ல, தெரில, வீட்ல ஏதும் சொல்லல...", ஏதோ சொல்லி சமாளிச்சேன்.

"ஒ.. அந்த பெரிய எடத்து மாப்ள? அவரு திரும்ப வரலையா?"

"அவங்க கேட்டாங்களாம் வீட்ல, இப்போ ஏதும் சொல்றதுக்கில்லன்னு வீட்ல சொல்லிட்டாங்க.. அத்த"

"ஒ.. சீக்கிரமா கல்யாணத்தப் பண்ணச் சொல்லு ஓவு...", அவன் இப்படிச் சொல்லுவான்னு நான் ஏற்கனவே நெனச்சேன்..

"இல்ல, பாப்போம், உனக்கு இப்டி இருகையில.. எனக்கு எப்டி கல்யாணம்..."

"எனக்கு எப்பவும் இனி சாகுற வர இப்டி தான் இருக்கும், அதுக்குன்னு நீ கல்யாணம் பண்ணிக்காம வீட்லயே கெடப்பியா?"

"இல்ல.. என்னால தான உனக்கு இப்டி.."

"இல்ல, இது உன்னால என்ன, நான் ஒழுங்காப் பாத்து போய் இருக்கணும், ஒனக்கே தெரியும்ல, நான் வேகமா வண்டில போவேன்னு.. அதான்.. என் நேரம்... இதுக்கு நீ என்ன பண்ணுவ...? எனக்கு இப்டி ஆகாம இருந்திருந்தா, நீ அந்தப் பெரிய எடத்து மாப்ளைய தான கட்டிருப்ப? சொல்லு..? அவன தான உனக்குப் புடிச்சது? அது தான ஒ கனவு?"

அவன் பேசிட்டே போனான், எனக்கு என்ன பேசன்னே தெரியல. என்ன முடிவு செய்யணு புரியல.

"இல்ல, சேகரு.. நான் போயிட்டு வாறேன்...", வேகமா அங்க இருந்து கெளம்பினேன்.

"சரி ஓவு, போயிட்டு வா.. கடசியா சொல்றேன், நீ அவனையே கட்டிக்கோ.. எனக்கு ஒன்னும் இல்ல, வருத்தம் இல்ல...", இல்லன்னு சொன்னாலும், அவனுக்கு எவ்வளவு வருத்தம்னு எனக்குப் புரிஞ்சது.

யோசிச்கிட்டே இருந்தேன், தெனமும். என்ன செய்யணு எனக்கு ஒன்னும் புரியல.

------------------------------------------------------------------

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கதையைத் தொடர்கிறேன்.

ஏதோ, சிறு பிள்ளைத் தனமாய், எனக்கு தோன்றுவதை எல்லாம் எழுதுகிறேன்.

எப்படி இருந்தது, சொல்லி விட்டுச் செல்லுங்கள்.

ஓவம்மா தொடருவாள், அடுத்த பகுதியில்.

கருத்துகள்

  1. உங்களின் ஓவம்மா கதை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஓவம்மாவிற்கு எனது ஜேவம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) ஜே ஜே... உனக்கு ஜே ஜே...!

      பாட்டு மாதிரி சொல்றிங்க.

      ரொம்ப நன்றி... :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்