முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்று காலை, அதிகாலை!


என் குரலில் இந்தப் பதிவைக் கேட்க,


படிக்க வேண்டும் என்றால் மட்டும் தான்,
படுக்கையை விட்டு அதிகாலை எழுவேன்,
பத்து மணி தான் இல்லை என்றால்!

இரவெல்லாம் படித்தால் தான்,
இன்பமாக இருக்கிறது,
காலையில் கொஞ்சம் தூக்கம்,
கண்கள் கேட்கிறது!

இன்று பரிட்சையும் இல்லை,
படிக்கவும் இல்லை - ஆனால்,
பனி விழும் அதிகாலையிலேயே,
படுக்கையை விட்டு எழுந்தாயிற்று!

குளிர் நீரிலே குளித்தாயிற்று - அம்மாவோடு,
கோயில் கோயிலாய் சென்றாயிற்று,
"கோயிலுக்குச் சென்றால் தான் உண்டா?"
கேள்விகளை எல்லாம் ஓரம் கட்டியாயிற்று.




"அன்பின் இடத்தே இறைவன்",
என் நம்பிக்கை அது - பிறகு,
ஏன் கோயிலுக்குச் சென்றேன்,
எதற்காக மண்டியிட்டேன்?

"மார்கழி ஒன்னு,
கோயிலுக்குப் போனா நல்லது!",
அம்மாவின் அன்பான ஆசைக்காக!
என் கொள்கைக்காக!



"அன்பின் இடத்தே இறைவன்"
தெய்வத்தோடு சென்று,
கற்களை வணங்கி நின்றேனே,
காலையிலேயே -அதிகாலையிலேயே!

----------------------------------

காலையில் காலாற நடந்தால் நல்லது என்பார்கள், அம்மா வேறுமாதிரி சொல்கிறார் அதையே, இருப்பினும் நல்லது தானே சொல்கிறார்!

கருத்துகள்

  1. அம்மாவின் அறிவுரையை, பகுத்தறிவு பேச்சால் மீறாமல் நடந்தமை நல்ல பகுத்தறிவு. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் பயணம்.

    பதிலளிநீக்கு
  2. மார்கழிக்கு அழகான வரவேற்பு கவிதை கண்மணி!

    பதிலளிநீக்கு
  3. "அன்பின் இடத்தே இறைவன்"
    தெய்வத்தோடு சென்று,
    கற்களை வணங்கி நின்றேனே,

    அருமையான வரிகள்
    ஒலி இணைப்பும் தேன் குரலும் மிக நன்று.

    http://abiatchennai.blogspot.in/2012/12/blog-post.html

    பதிலளிநீக்கு
  4. //தெய்வத்தோடு சென்று,
    கற்களை வணங்கி நின்றேனே,//அருமையான வரிகள்...
    அம்மா மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு தெரிகிறது இந்த வரிகளில்

    குரல் அருமை.இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி :) அம்மாவை நேசிக்காத, மதிக்காதவர்கள் இருப்பார்களா என்ன?

      நீக்கு
  5. நன்றாக சிந்தனை செய்கின்றீர்கள், உள் அர்த்தம் பொதிந்த வகையிலே கவி எழுதுவது சிலருக்கே வரும். உங்களிடம் அந்த திறமை ஒளிந்து கிடக்கிறது. மெருகேற்றவும்.
    ஒலி வடிவில் கேட்டது புதுமை. சொல் ஏற்ற இ(ற)ரக்கம் கவனிக்கவும். உங்கள் ஊரில் ஹலோ பண்பலை 106.5 கேட்குமானால், இரவில் டைரி என்ற நிகழ்ச்சியை கேட்டு பாருங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி :) ம்ம் இனி கவனிக்கிறேன் ஒலி பதிவு செய்கையில்.

    வானொலி கேட்க இயலுமா என்று தெரியவில்லை, முயல்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //விடியா இரவின் இருட்டில், நிலவிற்கு நான் வைத்த முத்தங்கள்!// அழகு ...

    பதிலளிநீக்கு
  8. //விடியா இரவின் இருட்டில், நிலவிற்கு நான் வைத்த முத்தங்கள்!// அழகு ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்