முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாவமடி நான்!


உண்மையில் எனக்குத் தெரியாது!
புத்தகம் படிக்கத் தெரிந்த அளவு,
பிறரது புத்தியைப் படிக்க!

கடினம் தான் எனக்கு,
கணிதம் போடுவதோடு சேர்த்து,
கொஞ்சம் ஞாபகம் கொள்வதும்!

எல்லோரும் கேலி செய்தீர்கள்,
கேலி என்ன கேலி?
கோபமே கொண்டீர்கள்!
உண்மை தான்,
பாடப் புத்தகத்தில் வரும்,
வைரஸ்கிருமியின்
பெயர்களை நினைவில்
பதிய வைத்துக் கொண்டேன்!

ஏனோ, மனிதரின் பெயர்கள்,
மனதில் பதியவே மறுக்கிறது,
அடிக்கடி மறக்கிறது!

பெயர் தான் மறந்ததே தவிர,
பாசம் மறப்பதில்லை!
பிரிவும் பிடிப்பதில்லை!


அதோ, அன்றொரு நாள்,
எனக்கு தேநீர் வாங்கித் தந்தாயே,
நீயும் நானும் ஒரே சாலையில்,
நடந்து போனோமே?

பனிக்கூழ் வாங்கக் கூடாது,
பாட வேண்டும் நான்,
மறுவாரம்,
பாட்டுப் போட்டி எனக்கு,
பாசமாய் சொல்வாயே,
பனிக்கூழ் சாப்பிடாதே என்று!

"படம் வரஞ்சு தா பிரியா"
நான் கேட்க,
எனக்காக படம்,
அழகான படம் 
வரைந்து நீ தர,

 அதை வாங்கி,
அழகாய் பையில் 
போட்டுக் கொண்டேனே?
தீபாவளி வாழ்த்துச் சொல்லி?

அதில் "கண்ணு",
நீ எழுதிய வார்த்தையில் இருந்த,
நிகரில்லா அன்பு,
மறக்கவில்லையடி எனக்கு!

எல்லாமே எனக்கு மறந்து போகும்,
நினைவு படுத்த நீ இருக்க,
மறந்தாலும் வருந்தவில்லை இதுவரை!

உண்மை தான்,
சுயநலக் காரியோ நான்?
எதுவுமே உனக்காக செய்ததாக,
நினைவிருக்கவில்லை எனக்கு!

உண்மை தான்,
பாசம் தெரியாதவளோ நான்?
பாவம் என்னை நேசிக்கும்,
உன் போன்ற தோழிகள் எல்லாம்!

உண்மை தான்,
நாடகக் காரியோ நான்?
ஞாபக மறதி எனக்கு,
பாடம் தவிர மற்ற விசயங்களில் எல்லாம்!

அய்யோ! இதுவரை மறந்தால்,
நீ இருந்தாய் அருகில்,
நினைவூட்டி வழிநடத்த,
நீ கோபம் கொண்ட பிறகு,
அட, யார் இருப்பார் நினைவூட்ட?

பேசாமல் போகாதேடி,
பாவம் உந்தன் கண்ணுமணி!
பிரியா, பேசாமல் போகாதேடி,
பாவம் நான் உன் செல்லமடி!

இனி இப்படிச் செய்யமாட்டேன்,
மன்னிப்புக் கேட்க மாட்டேன்,
கண்ணீர் வந்தாலும்,
தோழி பேசவில்லையே,
கண்ணீரோடு ஏக்கம் நிறைந்தாலும்,
மன்னிப்புக் கேட்க மாட்டேன்!

பெருமிதக் காரியோ நான்?
பொய்சொல்லியோ நான்?
எப்படி இருந்தாலும் இருக்கட்டும்!
ஏற்றுக் கொள்வேன் எல்லாம்!

ஆனால், பேசாமல் போகாதேடி,
பாவம் உந்தன் கண்மணி!
என் தோழி, பேசாமல் போகாதேடி,
சோகம் என்னை சூழுமடி!

சுயநலம் இருக்கலாம்,
ஜோடிப்பு இருக்கலாம்,
துரோகம் கூட இருக்கலாம்!

என்ன தான் இருந்தாலும்,
உரிமை உள்ளது எனக்கு,
உன்னிடம் உரிமை உள்ளது எனக்கு,
பேசிவிடு, பாவமடி நான்!
:'(  :'( 

கருத்துகள்

  1. semma touching Kannu :)
    Hope you and your friend will sort out the issues soon :) Wish you a happy life :)

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. பெயரிலேயே பிரியம் கொண்டவர்
    பிரியாவிடை எப்படி பெறுவார்?

    பிரிவு விரைவில் பிரியும்
    உங்களை விட்டு...

    பிரியம் கை கூடட்டும்
    பிரிவை விட்டு ....

    ஓ ... சிறந்த பேச்சாளி , கவிஞர், எழுத்தாளர், படிப்பில் முதல் மாணவி என்று தெரியும், பாடகி கூடவா? வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் பாடுவேன் கொஞ்சம். என் வலைப்பூவில் கூட ஒரு சில பாடல்கள் இருக்கின்றன, கேட்டுப் பாருங்களேன்?

      நாங்கள் சேர்ந்துவிட்டோம், நன்றி :)

      நீக்கு
  4. பெருமிதக் காரியோ நான்?
    போயசொல்லோயோ நான்?

    இதில் ஏதோ நெருடல் தெரிகிறதே , கவனிக்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) ஆம், தட்டச்சுப் பிழை! பொய் சொல்லியோ நான், அது தவறாக பதிந்து இருக்கிறது. சரி செய்துவிட்டேன். நன்றி :)

      நீக்கு
    2. செழியனுக்கு ஆசிரியர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன :-)

      நீக்கு
    3. ஆமா! சரியா சொன்னிங்க. கடுமையான ஆசிரியர்! :) :)

      நீக்கு
  5. சோகத்தை கூட அந்தக்கால கவிஞர் போல், இந்தக்கால சினிமாக்காரகள் போல் கவிதை பாடி வெளிப்படுத்துகிறீர்கள்.. நல்ல கவிதை.. எந்த நல்ல நட்பும் சண்டையால் பிரிந்ததில்லை.. சீக்கிரம் உங்கள் தோழி உங்களிடம் பேசுவார், புது உத்வேகத்துடன், அதிகமான அன்புடன்.. வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) சமாதானம் ஆகிவிட்டோம் நாங்கள்! :) நன்றி :)

      நீக்கு
  6. தோழியின் கோவம் எவ்வளவு தூரம் உன்னை பாதித்திருக்கிறது என்று உன் வரிகளில் தெரிகிறது கண்மணி!
    பிரியா! எங்கள் கண்மணி நீங்கள் பேசாததால் மிகவும் தவிக்கிறாள், சீக்கிரம் பேசிவிடுங்கள்!

    இன்னும் கொஞ்சநாள் பேசாமல் இருந்தால் எங்களுக்கு இதைப் போன்று இன்னொரு அற்புதமான கவிதை கிடைக்கும் ஆனாலும் கண்மணி பாவம், உங்கள் செல்லம் அதனால் உடனே பேசுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நன்றி மா, பிரியா சமாதானம் ஆகியாச்சு! :) நன்றி :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்