முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாக்குட்டிக்குப் பிறந்த நாள்!

அப்பாக்குட்டியும் நானும்!
என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும், இது எதைப் பற்றிய பதிவு என்று. ஆம், இன்று அப்பாக் குட்டியின் பிறந்த நாள். அப்பாக் குட்டி? அது யார்? தெரியாதா உங்களுக்கு? அட, அது என்னுடைய அப்பா!

சிறுவயதில் என்னை அவர் அப்படித் தான் அழைப்பார். இப்போது நான் பெரியவள் ஆனதும் அப்படி அழைப்பதில்லை! :( அதனால் என்ன? இப்போது நான் அவரை பதிலுக்கு அப்பாக் குட்டி என்று அழைக்கிறேனே!

இன்று என் அப்பாக் குட்டிக்கு பிறந்தநாள், அதே போல, என்னுடைய இரண்டு வகுப்புத் தோழிகளுக்கும் பிறந்த நாள்! :) ஒரு மிட்டாய் கிடைத்தாலே ஆனந்தம், இதில் இன்று "கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா?", என்பது போல, நிறைய மிட்டாய் கிடைக்கப் போகிறது! :)

மேலும் இன்று என் கல்லூரியில் ஆண்டு விழா வேறு! கேட்கவா வேண்டும், அப்பா அம்மா தம்பி எல்லோரும் வருகிறார்கள், ஒரே ஆனந்தம் தான் இன்று!

இத்தனை நாட்களாக, புத்தகம், சோறு, உறக்கம், இது மட்டுமே செய்து கொண்டிருந்த எனக்கு மாற்றாக, கொஞ்சம் கலை நிகழ்ச்சி, அற்புதமான ஆண்டு விழா உணவு, அப்பா, அம்மா, தம்பியோடு சேர்ந்து இருப்பது என்று நல்ல நல்ல நிகழ்வெல்லாம் நடக்க இருக்கிறது :)

எப்போதும் வேலை செய்து கொண்டு, எப்போதும் படித்துக் கொண்டு இருந்தாலும், வாழ்க்கை சலித்துவிடும் தான் போலும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பாக்குட்டி!
இன்று போல் என்றும் நானும் அப்பாகுட்டியும், அம்மாவும், தம்பியும், பிறகு என் தோழிகள், நீங்கள், எல்லோரும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இப்படி நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்?

என்றோ ஒரு நாளிதழில் படித்தது இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது, ஒரே போல எப்போதும் கடினமாக உழைப்பவர்களை விட, அவ்வப்போது விடுமுறை, கொண்டாட்டம் என்று இருக்க வேண்டுமாம். அப்படி இருப்பவர்களால் தான் மேலும் சிறப்பாக வேலை செய்ய இயலுமாம். எப்போதும் வேலை செய்து கொண்டே இருந்தால், சிறப்பாக இருக்காதாம் நாம் செய்யும் வேலை.

அதனால், இன்று ஆனந்தமாக இருக்கும் நாள் :) உங்களுக்கும் தான்!

கருத்துகள்

  1. தங்களின் தந்தைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்களின் அப்பாகுட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    //அவ்வப்போது விடுமுறை, கொண்டாட்டம் என்று இருக்க வேண்டுமாம். அப்படி இருப்பவர்களால் தான் மேலும் சிறப்பாக வேலை செய்ய இயலுமாம்.// மிக சரி. ரிலாக்ஸ் இல்லாத வாழ்க்கை சக்கரத்தின் பல் என்று வேண்டுமானாலும் தேய்ந்து போகலாம்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4/16/2013 1:41 AM

    கண்மணி என பொதுவாக பிள்ளைகளை கொஞ்சுவது வழக்கம். உன்ன மட்டும் கோபத்துல
    திட்டுனாலும் கொஞ்சிடே திட்டிரமாற இருக்கும்னு நினைக்கறேன் அப்பாக்கு :)
    அவர் இந்த பதிவை படிப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு எனது வாழ்த்துக்கள் நேரடியாக :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் அப்படித் தான் இருக்கும் கொஞ்சுவது போல. ஆனால் என்னை அப்பா திட்டுவதே இல்லை! :) நான் சமத்துப் பிள்ளை! :D நன்றி...

      நீக்கு
    2. பெயரில்லா4/17/2013 6:43 AM

      சமத்து பிள்ளையா.. அப்பாவ கேட்டா தெரியும், சமத்தா வாலா-னு :D

      நீக்கு
    3. :D கேளுங்க கேளுங்க! உண்மைல நான் சமத்து தான்.

      நீக்கு
  4. belated to him. then, you got fellowship . right. congrats do wel the research.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் அப்பாக்குட்டியின் பிறந்தநாளைக்கு ரொம்ப லேட்டாக வந்திருக்கிறேன். எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள். நீங்களும் உங்கள் அப்பாக்குட்டியும் இதேபோல என்றும் இருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நன்றி மா. தங்களது வாழ்த்துக்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி! :) :)

      நீக்கு
  6. என் பிறந்தநாளை மறக்காமல் இருப்பனு நினைக்கிறன்.உன் அப்பாக்குட்டி பிறந்தநாள் அன்று என்பதால:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி மறப்பேன் கவி :) உனக்கும் என் அப்பா நினைவு வரும் தானே, உன் பிறந்த நாள் அப்போ?

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்