முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யார் சொன்னது? (அழகின் ரகசியம்)

Beauty

வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்!

நொறுங்கிப் போகச் செய்தாய்,
நன்றாக இல்லை என்றாய்,
ஆனால், யார் நீ கணிப்பதற்கு,
நீயே குறைகளோடு இருக்கையில்?
உன்னிடம் நிறைய இருக்கிறது,
நீ மாற்றிக் கொள்ள வேண்டியது!
ஆனால், நான் என வருகையில்,
வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்!

நான் அழகு தேவதை அல்ல,
ஆனால் நான் அழகி தான்!

உனக்கு உரிமை உண்டு,
அழகான வாழ்க்கை வாழ!

யார் சொன்னது?
யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று?
யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று?
யார் சொன்னது, நீ மட்டும் தான்
காயப்படுத்துகிறாய் என்று?
நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே,
யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று?
யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று?
யார் சொன்னது?

இது சற்று வேடிக்கை தான்,
வேறு எதுவும் வேடிக்கையாக இல்லை,
நீ மட்டும் வேடிக்கையோ?
நீ புரியவை உன்னை அவர்களுக்கு!
அவர்கள் உண்மையை மறைப்பார்கள்,
அது வெளிச்சத்தைக் காணாத,
ஒரு கலை போன்றது!
உன்னை விண்மீன்களுக்கு
கீழே வைத்து,
வானத்தைத் தொட,
விடவேமாட்டார்கள்!


நான் அழகு தேவதை அல்ல,
ஆனால் நான் அழகி தான்!


உனக்கு உரிமை உண்டு,
அழகான வாழ்க்கை வாழ!


யார் சொன்னது?
யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று?
யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று?
யார் சொன்னது, நீ மட்டும் தான்
காயப்படுத்துகிறாய் என்று?
நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே,
யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று?
யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று?
யார் சொன்னது?

யார் சொன்னது,
உனக்குத் திறமை இல்லை என்று?
யார் சொன்னது, உனக்கு மேன்மை இல்லையென்று?
யார் சொன்னது, நீ திரையில் மின்ன முடியாதென்று?
நான் சொல்வதைக் கேள்!
நான் சொல்வதைக் கேள்!
யார் சொன்னது, நீ தேறமாட்டாய் என்று?
யார் சொன்னது, நீ உன்னதம் இல்லையென்று?
யார் சொன்னது? யார் சொன்னது?
சொல்லாயோ என்னிடம்?
ஆம், யார் சொன்னது?

யார் சொன்னது?
நீ அழகில்லை என்று யார் சொன்னது?





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இது who says என்னும் ஒரு ஆங்கிலப் பாடலின் மொழி பெயர்ப்பு. சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்தப் பாடல் போல அதே இசையில் பாட இயலாது, ஆனால், அதே அர்த்தம் வருமாறு எழுதி இருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்தது இந்தப் பாடலைக் கேட்ட உடன். எல்லோரும் குறை தான் சொல்வார்கள், நீ அழகில்லை என்பார்கள், ஆனால், உண்மையில் புற அழகை விட, அக அழகே உயர்ந்தது - என்பது போன்ற பொருள் வருவதாக எனக்குப் புரிந்தது இந்தப் பாடலில். சரியாகப் புரிந்து கொண்டேனா என்று தெரியவில்ல்லை.

யார் என்ன சொன்னாலும், நாம் நமக்குப் பிடித்ததை, சிறப்பாகச் செய்து வந்தால்,
நம்மீது நாம் நம்பிக்கை வைத்து, ஊக்குவித்து, நம்மை நாமே தட்டிக் கொடுத்து வாழ்ந்து வந்தால், வெற்றி நிச்சயம்!

உலகின் பார்வைக்கு அழகாகத் தோன்ற, அழகு தேவதையாய் இருக்க அவசியம் இல்லை, நமக்கு நாம் அழகியாக, அழகான செயல்கள் செய்பவராய் இருந்தால் போதும், சரி தானே?

அப்படித் தானே உங்கள் அம்மாவும், என் அம்மாவும் அழகாக இருக்கிறார்கள்?

கருத்துகள்

  1. /// நாம் நமக்கு பிடித்ததை... ///

    ரசித்து மொழி பெயர்ப்பு செய்து உள்ளீர்கள்...

    சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்துக்கள்.. நம்மின் முதல் காதலன், முதல் ரசிகன் நாமாகத்தான் இருக்க வேண்டும்.. தன்னம்பிக்கைக்கு அச்சாரம் இந்த சுய ரசிப்புத்தன்மை தான்.. வாசிக்கும் போதே நல்ல ஊக்கம் கொடுக்கும் பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம், நன்றாக இருந்தது கேட்கும் போது, அதனால் தான் மொழி பெயர்த்தேன். நன்றி.

      நீக்கு
  3. இந்த பதிவில் நீங்கள் போட்டிருக்கும் ஹெலென் கெல்லரின் வாசகத்தை பார்க்கும் போது, கீட்ஸ் “Ode on an Greecian Urn" என்னும் பாடலில் சொல்லிய "Heard melodies are sweet, Unheard melodies are sweeter" என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. மேம்போக்காக பார்த்தால் சாதரணமாக இருக்கும் இது, கொஞ்சம் யோசித்துப்பார்த்தல் மிக மிக ஆழமான கருத்தாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சாதாரணமாக தெரியும் பல விஷயங்கள், உற்று நோக்கினால் மிகவும் சிறப்பானவை என்பது புரியும்.

      நீக்கு
  4. கவிதை அற்புதம் !! அழகான வரிகள். மொழிபெயர்ப்பும் உறுத்தவில்லை !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. இந்தக் கவிதை முழுவதுமே மொழிபெயர்ப்பு தான்.
      நன்றி :)

      நீக்கு
  5. பெயரில்லா5/05/2013 10:50 PM

    நல்லா இருக்கு கண்மணி. ஆனால் ஆங்கில பாடல்களை அப்படியே வார்த்தை மாறாமல் மொழிபெயர்க்க வேணுமா என்ன. கருத்து அந்த பாடல் உடையதாய் இருந்தாலும் நம் பாணியில் எழுதலாம்ல. ஒருமுறை அதை முயற்சி செய்து பாரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம் சரி முயற்சி செய்து பார்கிறேன் :) நன்றி!

      நீக்கு
  6. பெயரில்லா7/24/2014 2:37 AM

    Selena gomez who says thane
    super translation

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்