முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடிதம்!


அன்புள்ளவனே!

இது உன் அருமைத் தோழி, அழகுத் (கொஞ்சம் ஓவரா இருக்கோ?) தோழி, கண்மணி எழுதும் கடிதம். என்னடா இது தெனமும் தான் பேசறமே எதுக்கு இந்த லெட்டெர், இப்படித் தான் நீ யோசிக்கக்கூடும்! ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறையும் அழகும் உள்ளதே! அதற்குத் தான் இந்தக் கடிதம். அதுவும் எழுத்து வழக்கில் ஒரு அழகுத் தமிழ்க் கடிதம்!

கடிதம் எழுதுவதே பழைய முறையாக மாறி இருக்கலாம்! அதுவும் தமிழில் கடிதம், இன்று மிகவும் அரிது (அரிதுனா அர்த்தம் தெரியுமா உனக்கு? அப்டினா “rare”னு அர்த்தம்)

உனக்குத் தமிழ் அதிகம் வாசிக்க வராது”, என்று எனக்குத் தெரியும், உன் உயிர்த் தோழி அல்லவா நான்? எனக்குத் தெரியாமல் என்ன இருக்கிறது உன்னிடம்? ஒன்றும் இல்லை என்று தான் நேற்று வரை நினைத்திருந்த்தேன், ஆனால் இன்று ஒன்று உள்ளது, என்று தோன்றுகிறது! என்ன? என்னவென்று சொல்கிறேன், கேள்! (பொறுமையா இரு, எப்பவும் போல, லொட லொடனு எதாவது சொல்லிட்டு தான் மேட்டருக்கு வருவேன்)


இந்தக் கடிதம் நம்மைப் பற்றியது! ஆம். இது உனக்கும் எனக்கும் மட்டும் சொந்தமானது! அதுவும் எனக்குப் பிடித்த தமிழில், எனக்குப் பிடித்த உனக்கு! இதைத் தமிழில் எழுதக் காரணம், ஒன்று எனக்கு தமிழ் தான் ஆங்கிலதை விட சிறப்பாக வரும், இன்னும் ஒன்று, உனக்குத் தமிழ் சரியாக வாசிக்க வராதது. இந்தக் கடிதத்தை வாசிக்க நீ என்னிடம் தான் வருவாய் என்று எனக்குத் தெரியும், நானே, நான் எழுதிய கடிதத்தை வாசித்து உனக்குச் சொல்லும் அனுபவம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிணேன்! (உன்னோட ரியாக்சன நேர்ல பாக்கலாம்ல) அதனால் தான் இந்தக் கடிதம்!

கடும் கோபத்தில் உன்னை திட்டித் தீர்க்க வேண்டும் என்று தான் எழுதத் தொடங்கினேன், ஆனால், திட்ட ஏனோ வார்தைகளே வரவில்லை. ஆனாலும் கோபம், நேற்று நீயும் அவளும் ஒன்றாக “கோக்சாப்பிட்டீர்களே, அதைப் பார்த்ததில் இருந்து, உன் மீது என்பதை விட, அவள் மீது!

சந்த்ரிகா என்றல்ல, என்னைத் தவிர்த்து, நீ எந்தப் பெண்ணிடம் பேசினாலும் கோபம், அத்தனை கோபம்! இதுவரை நீ பேசிய அத்தனை பெண்களையும் ஜென்ம விரோதி போலத் தான் பார்த்துக் கொண்டு அலைகிறேன்!

நீ எனக்கு நெருங்கிய நண்பன் தான், ஆனாலும், அந்த நட்பையும் தாண்டி ஏதோ ஒன்று! உன் மீது! அன்று ஒரு நாள் அழகாகப் பாடுகிறேன் என்று ஒரு பாடல் பாடச் சொன்னாயே? நினைவில் இருக்கிறதா? அதைக் கேட்காமல் ஒரு நாளும் உறக்கம் வருவதில்லை! இப்படி சினிமாவில் கண்ட “சிம்ப்டம்எல்லாம் எனக்கு உண்மையில் நடப்பதைப் பார்த்து, கொஞ்சம் பதறித் தான் போனேன்!

இது வரை என் பெயர் கேட்டதும், “கண்மணி அன்போடு.... பாட்டுப் பாடியவர்கள் தான் அதிகம். ஆனால், இன்று, எனக்கே தோன்றுகிறது, நீ பாட வேண்டும் அப்படி என்று!

எரும, இப்போ புரியுதா, என்ன சொல்ல வரேன்னு? :P

இப்படிக்கு,

கண்மணி அன்போடு காதலி... <3 <3

[குறிப்பு: இது ஒரு கற்பனைக் கடிதம். “திடங்கொண்டு போராடுதளத்தில் நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது.

ரொம்பவே காமெடியா இருந்தாலும், நல்லா இருக்குனே சொல்லிட்டுப் போங்க? :D :P ]

கருத்துகள்

  1. நல்லாருக்கு..
    இதுல அங்கங்க டிங்கரிங் பண்ணி நாங்க பயன்படுத்திக்கறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! என்னது டிங்கரிங்கா? பிச்சு! :) :P

      நீக்கு
  2. ஓஹோ...! வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. அருமையான காதல் கடிதம் கண்மணி... உடனடியாக உற்சாகமாக போட்டிக்கான காதல் கடிதம் எழுதியது மிக்க மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  4. வெற்றி பெற வாழ்த்துகள்!!!!!!!!
    சொல்லிலும், செயலிலும்...

    பதிலளிநீக்கு
  5. நிஜமாவே நல்லாயிருக்குப்பா...ஆனா என்ன ஒண்ணு எருமன்னுட்டுங்களே அவுகள அதான் வருத்தமாயிருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :P அது சும்மா, செல்லமா சொல்லுறது! :D

      மிக்க நன்றி!

      நீக்கு
  6. எரும, இப்போ புரியுதா, என்ன சொல்ல வரேன்னு? :P

    என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை... இதில் என்னால் கற்பனையைப் பார்க்க முடியவில்லை.

    கடிதங்களே அரிது... அதுவும் தமிழில் கடிதம் மிக அரிது... உண்மை தான்...

    இந்த கடிதம் உண்மையான ஒரு அனுபவத்தை தந்தது...
    வெற்றிப் பெற வாழ்த்துக்கள்....
    போட்டியிலும்... வாழ்விலும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) வட போச்சே! கற்பனைக்கும் மதிப்பெண் இருக்குனு சொன்னாங்க! எனக்கு அது கெடையாதா...! :P

      அட, இது உண்மைல போட்டிக்கு எழுதுனது தாங்க!

      நன்றி! :)

      நீக்கு
    2. நம்புகிறேன்....மென்மேலும் உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள்

      நீக்கு
  7. காதலே அருமை தான்.. அதனால் அதை வைத்து எழுதும் கடிதமும் அருமையானதாகத்தான் இருக்கும்.. ஒன்றுமே இல்லையென்றாலும் ஒவ்வொரு காதலிக்கும் அவள் காதலன் எழுதும் கடிதம் ஸ்பெசலான ஒன்று தான்.. இதே போல் தான் காதலனுக்கு அவன் காதலி எழுதும் கடிதம் ஸ்பெசல் தான்.. இதில் நாம் எழுதும் காதல் கடிதம் மற்றவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நாம் யாருக்காக எழுதினோமோ அவருக்கு பிடித்தால் போதும்.. போட்டியில் ஜெயித்தாலும் ஜெயிக்கவில்லையென்றாலும் கடிதத்தை 100 ஃபோட்டோ காப்பி போட்டு அனுப்ப வேண்டிய ஆட்களுக்கு அனுப்பிவிடலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்களுக்கா? என்ன கொடும கண்மணி இது!

      நன்றி!

      நீக்கு
  8. ahem ahem... Kanmani... Love letterah illa Kolai miratala?? Asathita....

    பதிலளிநீக்கு
  9. நன்றாக இருக்கிறது கண்மணி!
    ஜூலை 20 வரை காலம் இருக்கிறது. உன்னால் இன்னும் நன்றாக எழுத முடியும். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா! :) இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும்!

      நீக்கு
  10. சோதனை முயற்சியோ !! ,போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் .ஜுலை 20 தான் Last Date ,Try ur best ,,, All the best

    பதிலளிநீக்கு
  11. இவ்ளோ பாஸ்டா பர்ச்டா போட்டிக்கு தயாராகி விட்ட கண்மணிக்கு வாழ்த்துக்கள் !. சோதனை முயற்சியாக பல கடிதங்கள் தங்கள் வலைப்பூவில் குவியும் என்று நினைக்கிறேன் ! :) Try ur best ஜுலை 20 தானே கடைசி தேதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, இதே கடிதத்தை தான் கொஞ்சம் சரி செய்து வைத்துக் கொள்ளப் போகிறேன்! நன்றி!

      நீக்கு
  12. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா6/12/2013 11:38 AM

    ஹா ஹா,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. கடிதம் நன்றாக இருக்கிறது.... இன்னும் மெருகேற்றவேண்டும்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்