இனியவனே,
உனக்காகக் காத்துக்
கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து,
வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத்
தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ
சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று,
உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து!
எத்தனை முறை தான்
நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும்
இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக
என்பதால்!
சரி, என் புலம்பல்
இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே?
இங்கு அத்தை மாமா,
இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா
இருக்குமா”,
என்று அத்தையிடம் பாராட்டு
வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது!
இப்போது அதிகம்
வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி
ஒரு ராகுல் தான், என்ன மாதிரி ரேனு
இல்ல போ...) சமத்தாகிவிட்டான் போலத் தெரிகிறது! அத்தை நேற்று எனக்குக் குங்குமப்
பூ வாங்கித் தந்தார்கள், பேரன் சிகப்பாய் பிறக்க வேண்டுமாம்! அத்தனை பிரியமாய்
என்னைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வப்போது ராகுல் தான் உதைக்கிறான்! என் அடி
வயிற்றில் உள்ளிருந்து அவன் உதைப்பது, “அப்பா, எங்கமா”, என்று கேட்பது போலவே இருக்கிறது.
அவனுக்கு தினமும் இரவு
நான் உன்னைப் பற்றித் தான் கதை சொல்லிகிறேன் தெரியுமாடா? “உன் அப்பா, ஆர்மில
இருக்காங்க, நீ பொறக்கப் போறப்போ கண்டிப்பா இங்க வந்திடுவாங்க, உன்னப் பாக்க,
நீயும் அப்பாவ மாதிரி ஆர்மில சேரனும்
என்ன?”, இப்படி தினமும் சொல்லி வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவனும் “சரி” என்பது போல ஒரு உதை உதைக்கிறான் தெரியுமா? அவன்
உதைக்கும் போதெல்லாம் என் வயிற்றில் கை வைத்துப் பார்க்க நீ இல்லையே என்ற வருத்தம்
எனக்கு!
ஒவ்வொரு முறை அவன்
உதைக்கும் போதும், எத்தனை இன்பம் வருமோ, அத்தனையும் நீ அருகில் இல்லை என்று
நினைக்கையில் சோகமாகிப் போகிறது! சீக்கிரம் வாடா!
கற்பனை செய்து
கொள்கிறேன், நீ என் வயிற்றில் கை வைத்து ராகுல் உதைப்பதை ரசித்து மகிழ்வது போல்
ஒவ்வொரு முறையும்! ஆனாலும், அது கற்பனை என்று தெரிகிறதே எனக்கு! கற்பனை என்று
தெரியாமல், கற்பனை செய்யும் அளவுக்கு, இன்னும் எனக்கு பயிற்சி வேண்டுமோ? நீ
அருகில் இல்லாமல் இருக்கும் இந்த நேரம், எத்தனை கொடுமையானதாய் இருக்கிறது
தெரியுமா? ஆனாலும், அந்தச் சோகம் எல்லாம் காணாமல் போகிறது, உன்னைப் பற்றிப்
பெருமையாய் ராகுலிடம் சொல்லும் போது! தெரியுமா? அவனுக்கு நீ தான் ஹீரோவாம்!
காலையில் எழும் போது,
நீ எனக்கு நெற்றியில் முத்தம் வைத்து எழுப்புவதாய்த் தொடங்கும் என் கற்பனை, மதியம்
நாம் ஒன்றாகச் சாப்பிடுவதாய் நீண்டு, மாலை நீயும் நானும் ஒன்றாய் கை கோர்த்து
நடப்பதாக விரிந்து, இரவு நீ என் வயிற்றின் அருகே வந்து, மெதுவாய்க் கை வைத்து,
முத்தமிட்டு, ராகுலுக்குக் கதை சொல்வதாய் முடிகிறது! பிறகு பெரும்பாலான நேரம்,
ராகுலுக்கு உன்னைப் பற்றி, ரானுவத்தைப் பற்றிக் கதை சொல்லியே செலவாகிறது. ஒவ்வொரு
நாள் முடியும் போதும், ஒரு ஆனந்தம், உன்னைக் காணப் போகும் நாள் நெருங்குவதால்!
பிறகு நேற்று
பக்கத்து வீட்டுப் பூஜா பாப்பாவிற்குப் பிறந்த நாள், என்னை அழைத்து இருந்தார்கள். ”பெரிய கேக்” வெட்டி,
அத்தனை சிறப்பாகக் கொண்டாடினார்கள், எனக்கும் நம் ராகுல் பிறந்த நாளை அப்படிக்
கொண்டாட வேண்டும் என்று ஆசை!
சரி, பிறகு,
உடம்பையும் கொஞ்சம் பாத்துக்கோங்க லெஃப்டினண்ட் ஜி! இதோ, இதை எழுதிக் கொண்டு இருக்கும்
போது கூட, இவன் என்னை உதைக்கிறான்!
வழக்கம் போல, இந்தக்
கடிதத்தையும் நான் உனக்கு அனுப்பப் போவது இல்லை, எனக்குத் தெரியும், நான் இத்தனை
அதிகம் உன்னைப் பிரிந்து தவிக்கிறேன் என்று தெரிந்தால் உன் மனம் தாங்காது என்று, வேலை
முக்கியம் இல்லை என்று வந்தாலும் வந்துவிடுவாய்! என்றாவது ஒரு நாள் இதை உன்னிடம்
காட்டும் சமயம் வரும்போது, காட்டுவேன், உன் தோளில் சாய்ந்தவாறு, உன்னோடு சேர்ந்து,
நானும் இதை வாசிப்பேன்! அன்று நீ செல்லமாய் என் நெற்றியில் வைக்கும், காதல்
முத்தம், என் காயங்கள் எல்லாம் தீர்த்துவிடும்! பிறகு, எப்போதும் நீ என் அருகில்
இருப்பாய், அப்போது, ராகுல் பெரியவனாக வளர்ந்து இருப்பான்! உன் தலை முடியெல்லாம்
பால் போல் இருக்கும்!
இப்போது, எழுத
நினைத்தேன், எழுதிவிட்டேன், இனி இது என் நாட்குறிப்பில் உறங்கட்டும், என் அன்பின்
ஆதாரமாய் உறங்கட்டும், நாட்டிற்கு நீ வேண்டும், ஆதலால், என் கடிதம் உறங்கட்டும்!
என் பிரிவின் வலிகள், பாவம் உறங்கட்டும்! என் வீரன் வரும் வரை, என் வார்த்தைகள்
உறங்கட்டும்!
---------------
காதல் மனைவி,
கண்மணி!
இந்தக் கடிதம் “திடங்கொண்டு போராடு” தளத்தில் நடத்தும், காதல் கடிதம் போட்டிக்காக எழுதப்பட்டது!
வீர தமிழச்சியின் கடிதம் நன்றாக உள்ளது கண்மணி .பழைய தமிழ் இலக்கிய கதைகளெல்லாம் ஞாபகம் வருது...
பதிலளிநீக்கு//என் அடி வயிற்றில் உள்ளிருந்து அவன் உதைப்பது, “அப்பா, எங்கமா”, என்று கேட்பது போலவே இருக்கிறது.//
சூப்பர்!
மிக்க நன்றி விஜயன் :) வீரமா? :) நன்றி, நன்றி...!
நீக்குsuprr.. i like that.. enum nammul andha thamizh thagam oyyavillai.. keep feel and write,, well done.:)
நீக்குஇரண்டு முறை படித்தேன்...
பதிலளிநீக்குஅருமை...
ரெண்டு தடவையா? :) அப்பாடி, பாஸ் ஆகிட்டேன்...! :)
நீக்குஒரு தாயின் உணர்வோடு... ஏங்க வைக்கும் கடிதம்... ரசிக்க வைத்ததை விட கலங்க வைத்தது...
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
:) மிக்க நன்றி... உண்மையிலேயே கலங்க வைக்கும் அளவுக்கு இருந்ததா? :) நன்றி...!
நீக்குரேனுவா கண்மணியா?
பதிலளிநீக்குகாதல் கடிதம் நன்று. வெற்றி பெற வாழ்த்துகள் :)
ரேனு, ராகுல் என்பது குழந்தை பிறந்தால் வைக்கலாம் என்று யோசித்து வைத்த பெயர்கள். கணவரின் பெயர் அகில், மனைவிக்கு என் பெயரே வைத்துவிட்டேன்! :) மிக்க நன்றி...
நீக்குசூப்பர்.. இதுக்கு பரிசு கொடுக்கவில்லையென்றால் சீனுகுருவை தூக்கிருவோம்..
பதிலளிநீக்கு:) இப்டி மெரட்டியாவது வாங்கிக் குடுத்துடுங்க! நன்றி :)
நீக்கு:-)
நீக்குஅருமையான காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி !!!
பதிலளிநீக்குநன்றி, தோழரே!
நீக்குஅதீத அன்பின் வெளிபாடு அற்புதம் கண்மணி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நன்றி, சரளா அக்கா! :)
நீக்கு"அருமை வாழ்த்துக்கள்!!!"
பதிலளிநீக்குபிரிந்திருக்கும் கணவனுக்கு காதல் சொட்ட சொட்ட ஒரு கடிதம்! அதை அவனுக்கு அனுப்பாமல் அவன் வந்தபிறகு காண்பித்து இருவருமாக அனுபவிக்கப் போகும் இன்பத்திற்கு காத்திருத்தல் என்று கடிதம் மிக அழகாக மலர்ந்திருக்கிறது, கண்மணி.
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி மா :)
நீக்குஎன் அன்பின் ஆதாரமாய் உறங்கட்டும், நாட்டிற்கு நீ வேண்டும், ஆதலால், என் கடிதம் உறங்கட்டும்! என் பிரிவின் வலிகள், பாவம் உறங்கட்டும்! என் வீரன் வரும் வரை,//
பதிலளிநீக்குஇந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்!//
இப்படி சின்ன சின்ன மென்மை உணர்வுகள் தான் காதலின் வலிமையை கூட்டுவதாய் இருக்கிறது ... மெல்லிய உணர்வுக்கு என் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி :) ஆம், உண்மையில், வாழ்வை அழகாக்குவதே இது போன்ற சிறு சிறு விஷயங்கள் தானே!
நீக்குஇது போன்ற வித்தியாசமான படைப்பை தான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன் கண்மணி... மிக அற்புதமான கடிதம்
பதிலளிநீக்குஎல்லாம் தங்களது, ஆசிர்வாதம் தான்! :) நன்றி!
நீக்குNice.
பதிலளிநீக்குஇந்த ஏக்கம் என்று தீரும்? அனுப்பாத கடிதத்தின் காரணம் மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்! :)
நீக்குஉங்களின் அடுத்த பகிர்வு : http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
ம்ம் தொடர்கிறேன்! நன்றி! :)
நீக்குஇத்தனை நாள் உங்கள் எழுத்தைப் படிக்காமல் போனேனே!
பதிலளிநீக்குலயிக்க வைத்த லவ் லெடர்!
பாராட்டுக்கள்.
//இத்தனை நாள் உங்கள் எழுத்தைப் படிக்காமல் போனேனே!//
பதிலளிநீக்குஇதை விடவும் ஒரு பாராட்டு கண்மணிக்கு வேண்டுமா என்ன? மிக்க நன்றி! :)
இப்போது, எழுத நினைத்தேன், எழுதிவிட்டேன், இனி இது என் நாட்குறிப்பில் உறங்கட்டும், என் அன்பின் ஆதாரமாய் உறங்கட்டும், நாட்டிற்கு நீ வேண்டும், ஆதலால், என் கடிதம் உறங்கட்டும்! என் பிரிவின் வலிகள், பாவம் உறங்கட்டும்! என் வீரன் வரும் வரை, என் வார்த்தைகள் உறங்கட்டும்!
பதிலளிநீக்குஒரு கர்பிணியின் மனதில் உறங்கும் இன்ப துன்பங்கள் அழகாய் விழித்திருக்கிறது உன் அருமையான இக்கடிதத்தில்.. என் இனிய நல்வாழ்த்துக்கள்!
சிறப்பான படைப்புகள் வெற்றி பெறத் தவறுவதில்லை.. உங்கள் படைப்பு பெற்ற வெற்றி அதை பறைசாற்றும்.. வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குபரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகாதல் கடிதப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குவாழ்த்துக்கள் கண்மணி ...!
பதிலளிநீக்குநன்றி :) உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
நீக்குபோட்டியில் வென்று பரிசு பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குகாதலில்( கடிதப் போட்டியில்) வென்றமைக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி! :)
நீக்குபரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் கண்மணி!
பதிலளிநீக்குநன்றி மா :) :)
நீக்குcongrats kanmani..
பதிலளிநீக்குthank you so much Ramya :)
நீக்குKanmani miga arumai, tayin kadhalum pirivum kalanga vaithu vitathu.
பதிலளிநீக்குநன்றி :) :)
நீக்கு