முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவர்களும் இவர்களும்!

அவர்களுக்கு சொல்லத் தெரிந்து இருந்தது, இது தான் "வேண்டும்" என்று, ஆனால், பாவம், "வேண்டியதற்கும், விருப்பமானதற்கும்" வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை அவர்களுக்கு!

விரும்பியதைத் தானே "வேண்டும்" என்று நினைப்போம் என்கிறீர்களா? அப்படி அவசியம் இல்லை என்கிறார்கள் அவர்கள்!

விரும்பியது உறுதியாகக் கிடைக்கும் என்று ஒரு நிச்சயம் இல்லாத போது, வீணாக முயன்று தோற்பதை விட, உறுதியாகக் கிடைக்கும் என்பதையே தேர்ந்தெடுக்க வேண்டுமாம். அது தான் அவர்களுக்கு "வேண்டியது", விரும்பியது உறுதியாகக் கிடைக்காது எனும் போது, அவர்கள் அடைய நினைக்கும் "வேண்டியது"!



"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்பதெல்லாம் சொல்லி, இவர்கள் வாதாடினாலும், புண்ணியம் இல்லை! 

விரும்பியதை விட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்! இவர்களுக்கு  ஒன்றும் எதிர்ப்போ, மறுப்போ இல்லை! தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!

ஆனால், ஆசையோடும், நம்பிக்கையோடும், முடியும் என்று நினைத்து ஒரு புத்துணர்வோடு முன்னேறும் இவர்களை ஏன் தடுக்கிறீர்கள்?

தனக்கு விருப்பமான வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் இவர்களை, முட்டாள்களாகப் பார்க்கிறீர்கள்?

எல்லோரும் செய்வதால், அந்தக் காரியம் ஒன்றும் உயர்ந்ததும் அல்ல, யாரும் செய்யாததால், இவர்கள் செய்யும் காரியம் மோசமானதும் அல்ல!

"அவர்கள்" செய்வது என்ன, தவறான செயலா? இல்லை இல்லை, அப்படி இல்லை. ஆனால், "இவர்கள்" செய்வதும் சரியானது தானே!

இருவர் சொல்வதும் சரியாக இருக்கும் போது, எதை ஏற்றுக் கொள்வது?

அவர்கள் சொல்வதையா? இவர்கள் சொல்வதையா? 

என்ன இது, இப்படி ஒரு சிக்கல்!

அவர்களுக்குச் சொல்கிறேன்! உங்களுக்கு "விரும்பியதை" விட்டு, வேறு தான் வேண்டுமா? விரும்பியது கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கும் போது!?
சரி, முயல வேண்டாம்! எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு வேண்டியதையே!

ஆனால், பாவம் இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்களின் விரும்பியதை வேண்டும் ஆசையை, பாவம் அழித்துவிடாதீர்கள்!

இவர்கள் விரும்பியது, சரியானது தானே? அதை ஒப்புக் கொள்கிறீர்கள் தானே? பிறகென்ன? விட்டுவிடுங்கள்! இவர்கள் முயலட்டும், முடிந்தால், அடையட்டுமே?

முடியவில்லையா? அதுவும் இவர்கள் பாடு, இவர்கள் வாழ்வு! பார்க்கட்டும், இவர்களுக்குப் பிடித்ததை பிடித்தது போல வாழ்ந்து பார்க்கட்டும்!

விட்டுவிடுங்கள்! இவர்கள் தோற்கட்டும், இல்லை வெல்லட்டும், எது நடந்தாலும், இரண்டில் எது நடந்தாலும், பொறுப்பு இவர்களது! விட்டுவிடுங்கள்!

அவர்கள் அவர்களுக்கு வேண்டியதை அடையட்டும், இவர்கள் விரும்பியதை அடையட்டும்.



இவர்கள் அவர்களைக் குறை சொல்வதும், அவர்கள் இவர்களை குற்றம் சொல்வதும், வேண்டாமே!

அவர்களும் இவர்களும், அவரவரைத் தொந்தரவு செய்யாமல், நல்லதே செய்து, நல்லதே நடந்தால், நலமே!

நீங்கள் இதில் யார்? அவரா? இவரா? சொல்லிவிட்டுத் தான் போங்களேன்?

---------------------------------------------------------------------------------------------------

புரியுது, உங்க மனசுல என்ன நினைகிறீங்கன்னு புரியுது! என்னடா இந்தப் பொண்ணு சொல்ல வருது?  வெயில் அடிக்காம எங்க ஊர்ல மழை வந்ததுல, என்னவோ ஆகிடுச்சு போல! நீங்க போங்க, அடுத்த வேலையப் பாருங்க! 

கருத்துகள்

  1. குழப்பம் அதிகமாக இருக்கும் போலிருக்கே...! ஹிஹி....

    பதிலளிநீக்கு
  2. Enna pozhuthu mudiya poguthey innum onnum nadakalayae nu parthen... dhang youu :P
    Neenga solrathum oru vagai la kurai solrathu nu eduthukalama ?
    unga kulla oru kutti Kamala hassan irukarunga, sathiyama :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நானும் என்னடா யாரும் ஒன்னுமே கருத்து சொல்லலயேனு பாத்தேன். சொல்லிட்டிங்க! குத்தமா? நானா? என்ன இப்படி சொல்லிட்டிங்க? இதுக்கு பேரு மனக்குமுறல், இல்ல, பொலம்பல், இல்ல சும்மா ஒரு கருத்துனு வச்சுக்கோங்க!

      கமல ஹாசம் ஆ? நானா? நன்றி நன்றி :)

      உங்களுக்குள்ள விமலா இருக்கப்போ, நமக்குல்ல கமல் இருக்கதுல, என்ன இருக்கு, தீபக் ஜி! :)

      நீக்கு
  3. ரொம்பவே குழப்பி விடறிங்களே!

    பதிலளிநீக்கு
  4. எல்லோரும் செய்வதால், அந்தக் காரியம் ஒன்றும் உயர்ந்ததும் அல்ல, யாரும் செய்யாததால், இவர்கள் செய்யும் காரியம் மோசமானதும் அல்ல! விட்டுவிடுங்கள்! இவர்கள் தோற்கட்டும், இல்லை வெல்லட்டும், எது நடந்தாலும், இரண்டில் எது நடந்தாலும், பொறுப்பு இவர்களது! விட்டுவிடுங்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்