முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 12 ---> சிக்ன(க)ல்

                                  
                           




                                      


(பாகம் 11 படிக்கவில்லையா ?இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 11 ---> சிக்ன(க)ல்  படிச்சிட்டு, இங்க வாங்க)
இரவு வெகு நேரம் அழுது இருந்ததால் ; சற்று கண்கள் வீங்கி இருந்தது சுவாதிக்கு;
இருப்பினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழித்திருந்தாள் ;
குழந்தை போலவே தோன்றினான் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா;
கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் அவனை.. அன்று தான் முதன் முதலில் பார்ப்பது போல;


நினைவுகள் பின் நோக்கி நகர்ந்தது அவளுக்கு....
முப்பத்தி ஐந்து வயதில் சுவாதி... வீட்டில் அடைபட்டு இருந்த பொழுது...


அன்று காலை., வழக்கம் போல எழுந்து அம்மாவின் அறைக்கு டீ எடுத்துச் சென்றாள் சுவாதி;


" அம்மா ., டீ எடுத்துட்டு வந்த்ருக்கேன் மா... எடுத்துகோங்க... " கைகளால் அம்மாவை தட்டி எழுப்பினாள்;


அசைவே இன்றி குளிர்ந்து இருந்தது அம்மாவின் உடல்...


அதிர்ந்து போன சுவாதி... Hall - ல் படுத்திருந்த அப்பாவிடம் ஓடினாள்
...


" அப்பா அப்பா .... அம்மா அசையாம அப்டியே இருக்காங்கப்பா.. எழுப்ப எழுப்ப எந்திக்கவே இல்லப்பா... வாங்க வந்து பாருங்கப்பா.... " , கண்ணீர் கசிய அப்பாவிடம் அழுது புலம்பினாள்...


வேகமாய் வந்த குமாரசாமி... இறந்து கிடந்த மனைவியைப் பார்த்து அதிர்ந்து போனார்!!!


" கல்யாணி .... எந்திரி கல்யாணி...." இறந்து போனாள் என்று அறிந்தும்., சிறுபிள்ளை போல் அழுது எழுப்பினார் குமாரசாமி...


அது வரை அழுதிராத., தன் தாய் தந்தை இறந்த போது கூட அழுதிராத குமாரசாமி., அன்று துயரம் தாங்காமல் ., அழத் தொடங்கி இருந்தார்..


அன்று கல்யாணி அம்மா பிரிந்து சென்றதில் இருந்து., குமாரசாமி பேசுவதே குறைந்து போனது !!!


காதலில் பிரிவு எவ்வளவு கொடுமையானது என்று அப்பொழுதான் உணர்ந்தார் குமாரசாமி...


கல்யாணி இறந்து இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும்,,, ஒருநாள்...


" சுவாதி... என்ன மன்னிச்சுடு மா... காதலோட பிரிவு... எவ்ளோ வலிக்கும்னு இப்போ உங்க அம்மா போன அப்புறம் தான்மா புரிது... பத்து வர்ஷதுக்கும் மேல பிரிச்சு வச்சும்... நீங்க இன்னும் ஒருத்தர ஒருத்தர் நெனச்சுட்டு இருக்கீங்க., இந்த வலி உனக்கு எப்டி இருக்கும்-னு இப்போ தான்மா அப்பாக்கு புரியுது..... மன்னிச்சுடு மா... நான் உன்ன அந்த பையனோட சேத்து வைக்றேன் நாளைக்கே..." , மனைவியைப் பிரிந்து வாழ்ந்த நரகம்., அன்பின் ஆழத்தை உணர்த்தி இருந்தது அவருக்கு., அழுதவாறு மகளிடம் மன்னிப்புக் கேட்டார்...


" பரவாலப்பா .... உங்களுக்கு நிச்சயம் ஒரு நாள் புரியும்னு தான் காத்துட்டு இருந்தோம்... கிருஷ்ணாவும் எனக்காக இன்னும் காத்ருக்கான்.. நீங்க ஏன்பா என்கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு.. " கண்ணீரை துடைத்து ஆறுதலாய்ப் பேசினாள் சுவாதி...


கிருஷ்ணா சுவாதியின் கரம் பற்றினான் முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல்...


ஊரே வாழ்த்த நடக்காவிடினும்., கோவிலில் அற்புதமாக நடந்தது திருமணம்...


வயது கடந்திருந்ததாலோ என்னவோ.., குழந்தைச் செல்வம் கிடைக்க மீண்டும் போராட வேண்டியதாகிப் போயிற்று ...


ஐந்து வருடம் மருத்துவம் பார்த்தே கழிந்தது...


நாற்பது வயது கடந்து போய் இருந்தது இருவருக்கும்...


இதற்கு மேல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் உடலில் தெம்பில்லை இருவருக்கும்..


ஒருவருக்கொருவர் குழந்தையாக வாழ முடிவெடுத்து..., இன்று வரை குழந்தைகளைப் போல் கள்ளமில்லாமல்  காதல் செய்கிறார்கள் இருவரும்....


" ஏ சுவாதி.. தூங்கலையா... இன்னும் கொஞ்ச நேரம் தூங்குமா.. night ரொம்ப நேரம் முழிச்சு இருந்தேல... " சுவாதியின் நினைவுகளைக் கலைத்து, கட்டிக் கொண்டான் கிருஷ்ணா...


காதல் கசிந்து கொண்டே இருந்தது என்றும் என்றென்றும் இருவருக்குள்ளும்...


உயர்வானது இவர்களின் காதல்.,


உண்மையில் தோய்த்து..
உயிரினில் கரைத்து.,
உயர்வுகளை அடைந்து
ஊறுகளைத் தகர்க்கும்...!!!
ஊன் பாராது இது...!!!!


                                                          ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


இதுவரை என் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி...!!!
குறைகளைச் சுட்டுங்கள், விமர்சனங்களே என்னை வளர்த்தெடுக்க உதவும்..
மிக்க நன்றி..
---------
♥ கண்மணி அன்போடு



கருத்துகள்

  1. appadi mudichutengala.............. gud... nice story... today oly red 3 chapters... gud ending........ not at all expected it..... wen gonna start next one.......?????????/

    பதிலளிநீக்கு
  2. mm, soon. college started; so will try to post the next one in week ends. Happy reading Mr. Shanthosh

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்