(பாகம் மூன்று படிக்கவில்லையா? இந்த லிங்க் உபயோகப்படுத்துங்க, தொடர்கதை ---> பாகம் 3 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு இங்க வாங்க.)
தயங்கி நின்ற சுவாதி பேசத் தொடங்கினாள் , " sorry கிருஷ்ணா, ஊர்ல தப்பா பேசிருவாங்க , எங்க வீட்லயும் விரும்ப மாட்டாங்க, sorry, if you don't mind bus-கு money மட்டும் குடு ? நான் திருப்பி குடுத்திடறேன் "
கிருஷ்ணாவிற்கு என்னவோ போல் ஆயிற்று,
"காசு எல்லாம் வேணாம் சுவாதி ", சொல்ல நினைத்தவன் நிறுத்திக் கொண்டான்.
"திரும்பப் பெரும் பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமே" என்ற நினைப்பு!!!
பேருந்திற்கு பணம் மட்டும் கொடுத்தான்.
" மொபைல் நம்பர் கேளுடா " குதூகலித்து நின்றது மனது.
அவன் கேட்கும் முன்பே அவளே கொடுத்தாள் நம்பர் ," இது என் mobile number, நீ எப்போ எதுனாலும் டக்குனு call பண்ணிடாத, உன் number தா, நான் text பண்றேன், நான் முக்யம்னா call பண்றேன், நீ call பண்ணாத எங்க வீட்ல திட்டுவாங்க "
number-ம் கொடுத்து , வருசயாக உபயோகிக்கும் முறை என்று பட்டியலும் இட்டாள் சுவாதி.
தலை அசைத்தவாறே அவள் பேசும் அழகை ரசித்து , உருகிக் கொண்டு இருந்தான் கிருஷ்ணா.
" சரி கிருஷ்ணா நான் போயிட்டு வரேன் bye, take care. Medicines எல்லாம் சரியா சாப்டு, அப்போ தான் காயம் சரி ஆகும் ", கிளம்பினாள் பேருந்தைப் பார்த்து சுவாதி.
" Aeroplane சென்றால் , ஏழைச் சிறுவன் எப்படிப் பார்ப்பானோ அப்படிப் பார்த்தான் அவளை, " மயங்கி நின்றான் அவள் குணத்திலும், அழகிலும்.
பேருந்து சென்றதும் வீட்டை நோக்கிக் கிளம்பினான் , வழியெல்லாம் அவள் நினைவோடு, அவள் தன் பின்னே அமர்ந்து வருவது போல் கற்பனை செய்து கிறங்கிப் போனான்.
சுவாதி பேருந்தில் சலனம் இல்லாமல் " purse தொலஞ்சு போச்சே " , என்ற வருத்தத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
சுவாதிக்கு கிருஷ்ணாவை பிடிக்காது என்றில்லை, காதல் என்று உருக்கமும் இல்லை, நடுவே நின்றிருந்தால்.
ஆனால், கிருஷ்ணாவிற்கோ " கனவெல்லாம் சுவாதி கால் பதித்து இருந்தாள்"
வலை தளத்தில் மட்டும் பேசி வந்தவர்கள், இப்பொழுது கைபேசியிலும் பேசத் தொடங்கினார்கள் text மூலமாக.
ஆனால்.,காதலை சொல்லிக் கொள்ளவில்லை .
தன் காதலை மறைமுகமாக நிறைய முறை கிருஷ்ணா சொல்லியும் , சுவாதியின் மனதிற்கு எட்டியதோ எட்டவிலையோ, எட்டாதது போலவே பேசிவந்தாள்.
" புரிந்தாலும் புரியாதது போல , பொய் கூறுவது பெண்மையின் இயல்போ? அல்ல நாணமோ? "
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
கனவுகளோடு தொடரும் ,கிருஷ்ணா வசம் , சுவாதியும் காதல் வயப்படுவாளா?? காத்திருங்கள் நாளை வரை.
gud strory........today oly started from first one.............. nice to read............ wen it'll end waiting fr climax................
பதிலளிநீக்குHappy reading Mr.Shanthosh. thank you. It will end soon. may be in two or three episodes or may go little long !
பதிலளிநீக்குok.......................
பதிலளிநீக்குgive a good end ,waiting for that..... :)
பதிலளிநீக்குபுரிந்தாலும் புரியாதது போல , பொய் கூறுவது பெண்மையின் இயல்போ? அல்ல நாணமோ?
பதிலளிநீக்குsuperb line..........
thanks for your comments everyone.
பதிலளிநீக்குபுரிந்தாலும் புரியாதது போல , பொய் கூறுவது பெண்மையின் இயல்போ? அல்ல நாணமோ? " -அழகான எழுத்துக்கள்.., finishing than eppoum un kitta pudichathu ..:)
பதிலளிநீக்குthanks doc.. :)
பதிலளிநீக்கு