முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 7 ---> சிக்ன(க)ல்


(பாகம் 6 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க 
தொடர்கதை ---> பாகம் 6 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க .)

கிருஷ்ணாவின் பரிசைப் பார்த்து யோசனையில் இருந்த சுவாதியின் நினைவை , கை பேசியின் ஓசை கலைத்தது. 

" 1 new message"

கிருஷ்ணாவின் text... வாசிக்கத் தொடங்கினாள் சுவாதி.

" hey swathi.,  I loved your gift . happy to feel your care., will read it for you.... " 

சுவாதிக்கு குழப்பமாக இருந்தது..

கிருஷ்ணா தந்த பரிசை எண்ணி அந்த நொடி வரை துளியும் கோபம் இல்லை அவளுக்கு.

" நானும் கிருஷ்ணாவ love பண்றனா.... no.. அப்டி ஏதும் வேணாம்.... இது love பண்ற வயசா எனக்கு... அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்... இல்ல... கிருஷ்ணாவ நான் love பண்ணல... வேண்டாம்.." மனதுள்ளே போர் நடத்திக் கொண்டு இருந்தாள். 

அது வரை சலனமில்லாமல் இருந்த சுவாதியின் மனம்., சற்றுத் தடுமாறிப் போனது.

அவள் நினைவு சுழன்றது., " கிருஷ்ணாவின் சேட்டைகள்., அவளை உருகிப் பார்த்த பார்வை., பேசும் விதம் ., பாசமாக விசாரிக்கும் வார்த்தைகள்.." என எல்லாமே அவளை சலனத்தில் மூழ்க வைத்திருந்தது..

அந்நேரம் பேருந்தில் பாடல் ஒலித்தது... காதலன் , காதலியைப் பார்த்து பாடுகிறான்...

சுவாதியின் நினைவில் காதலன் கிருஷ்ணாவாகவும் , காதலி அவளாகவும் ஒரு நொடி கற்பனை தொடங்கியது..

சுதாரித்து நினைவுகளுக்கும் ஆசைகளுக்கும் கட்டுப் போட்டாள். 

மீண்டும் கை பேசி சிணுங்கியது. " A NEW TEXT MESSAGE "
அதுவும் கிருஷ்ணா தான். 

" சுவாதி., உனக்கு என் gift புடிச்சதா? புரிஞ்சதா..? " 

"புடித்தது" என்று சுவாதியின் மனம் சொன்னாலும்., " புடிக்கக் குடாது" என்று தடை போட்டது அறிவு.

சுவாதியின் reply வராமல் பதறிப் போய் இருந்தான் கிருஷ்ணா..

நிச்சயம் சுவாதிக்கு தன்னை பிடிக்கும் என்று மனம் சொன்னது கிருஷ்ணாவிற்கு.

பொறுமை இன்றி மீண்டும் text செய்தான்...

" சுவாதி., are you there? reply please.. waiting for your reply.. .." 

" text you later " என்று குழப்பத்தில் இருந்த சுவாதி, பதில் அளித்தால்.

கிருஷ்ணாவின் நினைவே சுழன்றது அவளைச் சுற்றி.

" இனியும் கிருஷ்ணா கிட்ட பேசினா., நமக்கே தெரியாம love பண்றேன்னு சொன்னாலும் சொல்லிடுவோம்... ஆனா பேசாம கஷ்டமா இருக்குமே...", யோசனையோடு படுத்திருந்தாள் சுவாதி தன் அறையில்.

" பேசாம போய்டுவாளோ ??!! எப்பவும் டக்குனு reply பண்ணுவாளே...
 love பண்ல போல... " நேரம் ஆக ஆக சோகம் தலைக்கேறியது கிருஷ்ணாவிற்கு... 

மீண்டும் text செய்தான்...

" சுவாதி.. swathi sorry for the disturbance., gift எப்டின்னு ஒரே ஒரு text மட்டும் அனுப்பு..." 

என்ன நினைத்தாலோ தெரியவில்லை., " புடிச்சது" என்று reply அனுப்பிவிட்டாள்!!!

சுவாதியின் reply பார்த்த கிருஷ்ணாவிற்கு., தலை கால் புரியாத சந்தோஷம்....

வானம் தாண்டிப் பறந்த அவன் மனதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து., பதிலுக்கு text அனுப்பினான் , " swaathi...  I feel soooo happy... Really? You loved it??? .... :) :) :) :) :) I'm very lucky to have you.."

அவளது கரம் பிடிக்க., அக்கணமே துடித்தான்...

" mm..  " , பதில் அனுப்பினாள் சுவாதி...

அழகும் குணமும் கொட்டிக் கிடக்கும் பொற்குவியல் கிடைத்ததென பெருமிதம் கொண்டான்...


                                                                  ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

காதல் எப்படித் தொடர்கிறது...?

படிக்கலாம் இன்றே... அடுத்த பகுதியில்.. இன்னும் சிறிது நேரத்தில்..



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்