முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 8 ---> சிக்ன(க)ல்



(பாகம் 7 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க 
  தொடர்கதை ---> பாகம் 7 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)





கிருஷ்ணாவிடம் " புடிச்சது " என்று சொல்லி இருந்தாலும்., நிறையவே பயமாக இருந்தது சுவாதிக்கு.

" பின்னாளில்., கடைசி வரை இந்தக் காதல் நிலைக்குமா..??... குடும்பத்தில் குழப்பம் வருமா..??? அப்பா ஒதுக்கலனா..???." எண்ணம் வதைத்தது...

கிருஷ்ணாவுக்கோ துளியும் பயம் இல்லை., மனதெல்லாம் ஆனந்தம் தான் நிறைந்து இருந்தது.

" சுவாதி புடிக்குதுன்னு சொன்னா... ஆனா.. என் gift தானபுடிக்குதுன்னு சொன்னா... எதுக்கும் வெளிப்படையா சொல்லிடுவோம்.." நினைத்த கிருஷ்ணா அடுத்த text type செய்யத் தொடங்கினான்..

" சுவாதி.. I love you  சுவாதி., I need you near me till my life end... Love you so much.. ", கிருஷ்ணா type செய்து அனுப்ப...

" ம்ம் " , அதற்கும் இரு எழுத்தில் பதில் அனுப்பினாள்!!!!

சற்று அதிர்ந்தான் கிருஷ்ணா.., " சந்தோஷமே இல்லாத மாத்ரி ரெண்டு எழுத்துல reply பண்றாளே... :( " 

" சுவாதி., ஏன் நான் propose பண்ணதுல இருந்து , சரியாவே பேச மாட்டேன்ற please.. சொல்லு சுவாதி., எனக்கும் உன்ன புடிக்கும் னு சொல்லு சுவாதி... என்னாச்சு உனக்கு.???. ஏன் தயங்கற???.." text அனுப்பினான்..

அவன் வார்த்தைகளை வாசிக்க வாசிக்க அவள் மனம் அவனிடம் தஞ்சம் அடைவதை அவளால் உணர முடிந்தது... ஆனந்தமோ, பயமோ, வருத்தமோ... கண்கள் குளமாகி ஈரம் கசிந்தது அவள் கன்னங்களில்...

கட்டுக்கு அடங்காமல் மனம் போன போக்கில் போகத் துணிந்தாள் .,
" I love you too krish... ஆனா எனக்கு தயக்கமா... பயமா இருக்கு., இதனால நம்ம எதையும் இழந்துடக் கூடாது.. பயமா இருக்கு கிருஷ்ணா.. " , தன்னையும் மீறி type செய்து அனுப்பினாள்....

சுவாதியின் text பார்த்த கிருஷ்ணா., விண்மீன்களில் உஞ்சலாடுவது போல உணர்ந்தான்...

மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று சந்தோஷத்தை தனியாக சுவாதியோடு இருப்பது போல எண்ணி கொண்டாடத் தொடங்கினான்...

தனிமையில் அவனும் அவளும் ., மொட்டை மாடியில் நிலவில்., கை கோர்த்து நடப்பது போல் கற்பனை செய்து கிறங்கிப் போனான்..

" பயப்டாத , எதுவும் ஆகாது., எனக்கு உன்ன புடிக்குதுன்னு தான சொன்னேன்., எந்த problem-மும் வராது., நான் உன்ன ஊர் சுத்த கூப்ட மாட்டேன்., தொல்ல பண்ண மாட்டேன் எதுக்கும்., நீ நல்லா படிக்கணும்னு நெனைப்பா., உன் அப்பா பத்தி நெனைப்பா., நாம எப்பவும் போல பேசிக்கலாம்., அது போதும் எனக்கு..." வார்த்தைகள் அருவியாகக் கொட்டியது கிருஷ்ணாவிற்கு. 

கிருஷ்ணாவின் வார்த்தைகள் ஆறுதல் தந்தன சுவாதிக்கு., " நீ இப்டி சொன்னது , எனக்கு ரொம்ப happya இருக்கு கிருஷ்ணா., you are too good., lucky to have you., love you so much.."

காதல் ., இதமான நட்பு போலவே தொடர்ந்தது., எந்நேரமும் பேசிக் கொண்டும்., கொஞ்சிக் கொண்டும் இல்லாமல்., இருவருக்கும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டாள் சுவாதி..

" காதலால் முன்னேற்றவும் முடியும் " என்ற உண்மை பளிச்சிட்டது இவர்களது படிப்பிலும்.

தினம் சிறிது நேரம் பகிர்ந்து கொண்டு., நேரம் ஒதுக்கி கிருஷ்ணாவை படிக்கவும் வைத்தாள் சுவாதி..

ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக் கொண்டனர் வெற்றியில்., ஆறுதல் சொல்லிக் கொண்டனர் தோல்வியில்.,

தோல்வி கூட இனித்தது., காதலிக்கும் பொழுது இருவருக்கும்...!!!

காதல் இவர்களுது வாழ்கையில் பச்சை சிக்னலை மட்டும் பிரகாசித்து வந்தது... , பின்னாளில் வரும் சிக்கல்களை மறைத்து...!!!

                                                                   ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥



என்ன சிக்கல் வந்தது .? இவர்களது காதல் சிக்னலில்??

இன்னும் சிறிது நேரத்தில்., காத்திருங்கள்...!!!




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்