அது ஒரு பெரிய ”கடை”, கடை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது தான், ஆனால் பாருங்களேன், “மால்” என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை எனக்கு! அதனால், கடை என்றே வைத்துக் கொள்வோம். வெளியில் இருந்து பார்த்தாலே ஒரு பாதி நாள் பார்க்கலாம் போல, அவ்வளவு பெரி....ய கடை! வெளியே வந்து நின்றது ஒரு பெரிய கார், உள்ளே இருவர் மட்டும் தான் இருந்தார்கள். ஓட்டுனரையும் சேர்த்தால், மூன்று பேர்! “கார பார்க்கிங்ல விட்டுடுங்க”, சொல்லியவாரே இறங்கினான் அவன். வயது ஒரு முப்பதிற்கு உள் தான் இருக்கும். இறங்கியவன், கையைப் பிடித்து உடன் வந்த தன் வயதான அம்மாவை இறக்கிவிட்டான். இருவரும் கை பிடித்தவாறு அந்தப் பெரிய கடையினுள் நுழைய நடந்தார்கள். அந்த அம்மா இது தான் முதல் முறை பட்டணம் வந்திருப்பார் போலும், ஒவ்வொரு ”இன்ச்சை”யும் சற்று வியப்பாகவே பார்த்துக் கொண்டு இருந்தார். ”இது என்ன, அது என்ன..”, என்று தன் மகனிடம் குழந்தையைப் போலவே கேட்டுக் கொண்டு இருந்தார். அவனும், “அதுவாமா, அது வந்து...” என்று சிறுவயதில் தன் அம்மா தனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே மிகவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இ...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!